தேவையானவை :
பால்- ஒரு லிட்டர்
துருவிய பனீர்- ஒரூ கப்
கன்டன்ஸ்ட் மில்க்- அரை டின்
சர்க்கரை-கால் கப்
குங்குமப் பூ -சிறிது
பாதாம்-ஒரு மேசைகரண்டி
பிஸ்தா-ஒரு மேசைக்கரண்டி
முந்திரி-ஒரு மேசைக்கரண்டி
ஏலப்பொடி-சிறிது
செய்முறை :
1.குங்குமப் பூவை சிறிது பாலில் ஊறவிடவும்.
2.பாதாம் பிஸ்தா முந்திரி பருப்புகளை ஒன்றும்பாதியுமாக நொறுக்கி வைக்கவும்.
3.அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்.
4.பால் முக்கால் பாகமாக குறைந்ததும் கன்டன்ஸ்ட் மில்க்கை ஊற்றி கொதிக்கவிடவும்.
5.பின்பு அதில் துருவிய பன்னீரை பாதியளவு போட்டு சர்க்கரையையும் போட்டு நன்கு கலக்கி பாலுடன் தொடர்ந்து கொதிக்கவிடவும்.
6.பின்பு மீதியுள்ள பன்னீர மற்றும் விருப்பமான பருப்புகளைப் போட்டு அடுப்பின் அனலைக் குறைத்து சிம்மில் வைக்கவும்.
7.தேவையான கெட்டி பதம் வந்ததும் குங்குமபூவை கரைத்து ஊற்றி ஏலப்பொடியைத் தூவி சூடாக அல்லது குளிர்வித்து பரிமாறவும்.
|