LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

பணியாளரை மதித்த பண்பாளர்

ஒரு பெரிய பணக்காரரின் பங்களாவில் பல வேலைக்காரர்கள் இருந்தார்கள் . அதில் ஒருவனுக்குத் தோட்டத்தை கவனிக்கும்வேலை . நன்றாக மழை பெய்து கொண்டிருந்ததால் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் வேலையை செய்யாமல் உட்கார்ந்திருந்தான் . இதைக் கவனித்து விட்ட முதலாளி “ ஏன் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலையை நீ செய்யவில்லை ” என்றார் . மழை பெய்கிறதே அய்யா என்றான் அவன் . அதைப்பற்றி நீ யோசிக்கக் கூடாது . குடை பிடித்துக் கொண்டாவது தண்ணீர் ஊற்றும்வேலையைச் செய்ய வேண்டும் ” என்று கட்டளை இட்டார் அவர் . இப்படி அறிவின்மையும் குரூரத்தனமும் கொண்டவர்கள் பணியாளர்களை வாட்டி வதைப்பார்கள் .

பெருந்தலைவர் காமராசர் தன்னிடம் பணியாற்றிய பணியாளர்களைக் கூட தன்னைப்போல் பாவித்த பண்பாளர் . 1975 ஆம் வருடம் வடஆற்காடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் . இரவு 9-30 மணியிருக்கும் . ஆலங்காயம் என்ற சிற்றூர் . நிகழ்ச்சிக்காக காரில் சென்று கொண்டிருக்கிறார் தலைவர் . மணி என்பவர் காரை ஓட்டி வருகிறார் . ஆறுமுகம் , சிவசாமிபோல் இவர்களும் திறமைமிக்க டிரைவர்கள் . இவர்கள் வெறும் டிரைவர்கள் மட்டுமல்ல . தலைவரின் தாயாகவும் சகோதரியாகவும இருந்து கண்ணை இமை காப்பதுபோலக் காத்தவர்கள் .

அன்று தங்கும் விடுதியிலிருந்து புறப்பட்டதிலிருந்தே டிரைவர் மணியை பெருந்தலைவர் கவனித்துக்கொண்டே வந்தார் . இன்று இவன் வழக்கம்போல் இல்லை . ஏதோ மாறுதல் தெரிகிறது என்பதைக் கவனித்து அவர் காரை நிறுத்தப்பா என்றார் . பிறகு உனக்கு என்ன செய்கிறது என்று கேட்டார் . அய்யா ! வயிறு கோளாறு செய்கிறது . குமட்டிக்கொண்டு வருகிறது . என்ற டிரைவர் காரை விட்டு இறங்கிப்போய் குபீரென்று வாந்தி எடுத்தார் . பித்தக் கோளாறு அதிகமாக கண் விழிக்காதேன்னா கேட்கிறியா என்று செல்லமாகக் கடிந்துகொண்டார் தலைவர் . முகத்தைக் கழுவிக்கொள் . காற்றாட அப்படியே கொஞ்சநேரம் இரு . நிகழ்ச்சிக்குக் கொஞ்சம் தாமதமாகக்கூட போலாம் என்று கனிவாகச்சொன்னார் .

நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது தலைவருக்கு நிறைய ஆரஞ்சப் பழங்கள் கிடைத்திருந்தன . அவைகளை மணியிடம் கொடுத்து வேறு எதையும் சாப்பிடாதே . ஆரஞ்சுப் பழத்தை உரித்துச் சாப்பிட்டுவிட்டு நன்றாக ஓய்வு எடுத்துக்கொள் என்று கனிவோடு கூறினார் . இப்படி பணியாளரையும் மதிக்கும் பண்பு மிக்கவர் பெருந்தலைவர் . ஏழைகளை மதிப்பவர்களே இறைவனால் மதிக்கப் படுகிறார்கள் .

by Swathi   on 02 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.