உலகின் மூத்த குடி நமது தமிழமே.... அதே போல் முதல் இசைக்கருவியும் பறையாகவே இருக்கிறது ...
பறையடித்து பகையை அடிமைத்தனத்தை விரட்டியடித்து நம் முப்பாட்டன்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவோம்
நெஞ்சை நிமிர்த்து பறை எங்களிசை என்று .. தமிழன் எவனுக்கும் அடிமையில்லை உலகிற்கே வாழ்வியலை கற்றுக்கொடுத்தவன் என்பதை ஓங்கி உலகிற்கு மீண்டும் எடுத்துமுழங்க வேண்டிய கட்டாயத்தில் இந்த தலைமுறை தமிழனுக்கு காலத்தின் கட்டாயத்தை அளித்துள்ளது என்பதை அனைவரும் உணருவோம்..
அறச்சீற்றம் வேண்டும், வேண்டும் மறத்தமிழா....
பறையிசை தமிழனோடு வாழ்வியல் வாழ்க்கை முறையோடு ஒன்ற கலந்த ஒன்று என்பதற்கு வரலாற்று இலக்கிய சான்றுகள் நிறைந்தது..
• ஒரு மன்னன் எதிர்நாட்டுக்கு சென்று போர் புரியும் முன் அங்குள்ள போர் புரியவியலாத மக்களை வெளியேர வேண்ட,[9] • பெருகிவரும் புனலை அடைக்க, • உழவர் மக்களை அழைக்க, • போர்க்கெழுமாறு வீரர்களை அணிதிரட்ட, • வெற்றி தோல்வியை அறிவிக்க, • வயல்களில் உழவு வேலை செய்வோருக்கு ஊக்கமளிக்க, • விதைக்க, • அறுவடை செய்ய, • காடுகளில் விலங்குகளை விரட்ட, • மன்னரின் செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க, • இயற்கை வழிபாட்டில், • கூத்துகளில், • விழாக்களில், • இறப்பில்
எனப் பல்வேறு வாழ்வியல் கூறுகளுடன் ‘பறை’ இணைந்து இயங்கியுள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன.
- கவிதைப்பூக்கள் பாலா
|