LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கலைசைக்கோவை

பரத்தையிற்பிரிவு

காதலன் பிரிவுழிக் கண்டோர் புலவிக்கு ஏது இதாமல்
விறைவிக் கென்றல்.
393.
தண்ணாறு சூடுங் கலசத் தியாகர் தடங்கலைசை
உண்ணால் வகையுறுப் போடும் பவனிநல் லூரன்வரப்
பண்ணா லவிநயஞ் செய்மாதர் கொங்கை யிபங்களிற்றன்
கண்ணான பாகுற லாலாகு மாதயர் காரணமே. 1

தனித்துழி இறைவி துனித்து அழுதிரங்கல்.
394.
பந்தத்தை நீக்குங் கலைசைத் தியாகரைப் பற்றிலர்போற்
சந்தத் தடவரை மார்போன் பிரியத் தனித்திரங்கிக்
கந்தற் றழுதங்கந் தங்கம தாகவிக் கங்குலென்போல்
இந்தத் துயருறு வாருமுண் டோசில ரேழையரே. 2

ஈங்கிது வென்னெனப் பாங்கி வினாதல்.
395.
நவசத்தி கட்கு முரியோன் சிதம்பர நாதனருட்
சிவசத் தமலன் கலைசைநல் லூரன் றினமுமன்பாம்
கவசத்தை யிட்டுனைக் காக்கவு நீவன் கலக்கஞ்செய்வி
திவசப்பட் டேங்குநர் போற்றேம்பு மாறென் றிருநுதலே. 3

இறைவன் புறத்தொழுக்கு இறைமகள் உணர்த்தல்.
396.
அஞ்சா னனங்கொள் கலைசைத் தியாகருக் கன்புசெய்யார்
நஞ்சா லெனவிங்கு நானைய மார்ப நயந்தளித்தான்
செஞ்சாலி சாய்தர மேதிப் பகட்டினஞ் சென்றயலே
பைஞ்சா யருந்தும் வயலூரன் சேரிப் பரத்தையர்க்கே. 4

தலைவியைப் பாங்கி கழறல்.
397.
ஓங்கார ரூபர் கலைசைத் தியாக ருயர்வரைதன்
பாங்காருங்கார் வறுங்கான்போய்ப்பொழிந்து பின்பாங்குறினும்
தோங்காணு மாறுள தோவணங் கேநந் துணைவரிந்நாள்
ஆங்காடு நீரிஃதென்றனின் கற்புக் கழகல்லவே. 5

தலைவி செவ்வணி அணிந்து சேடியை விடுப்புழி
அவ்வணி உழையர் கண்டு அழுங்கிக் கூறல்.
398.
நலத்தினி னாட்டுங் கலசத் தியாகர் நறுங்கலைசைத்
தலத்தினின் மேவுந் தளிரியு லீரறந் தாங்கியதொல்
குலத்திருக் காவினிற் றோன்றிய தோர்கொடி கூறுமிவ்வூர்ப்
புலத்தினி லெங்கு மலரேறப் பெற்ற புது மையென்னே. 6

பரத்தையர் கண்டு பழித்தல்.
399.
ஆரிய ரெங்கள் கலசத் தியாக ரருட்கலைசை
ஊரியற் செவ்வ லரிமாலை நீலங்க ளூடலர
நேரிய வண்டின் குழாஞ்சுமந் தேமுன் னிலவுதல்போற்
சேரியின் வாய்வந்து நின்றா ரிறைமனைச் சேடியரே. 7

பரத்தையர் உலகியல் நோக்கி விடுத்தலின்
தலைமகன் வரவுகண்டு உவந்து வாயில்கள் மொழிதல்.
400.
காவும்பர் பம்புங் கலைசைத் தியாகர் கருணையைப்போல்
மேவும் பிராட்டி விடுமேவன் மாதரை வித்தமிக்க
வாவும் பரத்தையர் சேரியிற் கண்டு மணிகொழித்துத்
தாவுந் திரைப்புன லூரன்வந் தான்பெருந் தன்மையிதே. 8

தலைமகன்வரவு பாங்கி தலைவிக்கு உணர்த்தல்.
401.
பணமா சுணத்தர் கலைசைத் தியாகர்க்கன் பற்றவர்போல்
மணமாலை மார்பர் புறத்தா றுறினும் வழாமலொரு
கணமாத் திரையினிற் றேர்மீது வந்துன் கடையினின்றார்
குணமா வதுகொடி யேகுறை தீர்ந்தெதிர் கொள்வதுவே. 9

தலைவனைத் தலைவி எதிர்கொண்டு பணிதல்.
402.
ஆடல்வை வேலன்பர் சேர்ந்திடி னின்ப மலபிறவா
வாடலிங் கியானுற நீங்கின் வயாவும் வரம்பிலவாம்
கோடலங் கையாய் கலைசைத் தியாகரைக் கூடலர்போல்
ஊடலெவ் வாறெனக் கெய்தும் பசலை யொளிக்கையிலே. 10

புணர்ச்சியின் மகிழ்தல்.
403.
அந்நாட் கலைசைத் தியகே சருமற் றரியயனும்
மின்னார் பலர்தமைக் கொண்டின்ப மெய்தினர் மேவொருத்தி
தன்னாற் சுகமமை யாமலன் றோவித் தனிக்கொம்பர்வாய்
இன்னா ரமுதமுண் டானந்த மேலிட் டிருந்தனனே. 11

வெள்ளணி அணிந்து விடுத்தல்.
404.
தோயுந்தண் பாலி நுரையா மெனும்வெள்ளைத் தூசுபுனைந்
தாயுங்கற் பாரமுத் தாரமுஞ் சூடி யநங்கனறக்
காயுங் கனற்கட் சிதம்பர வீசர் கலைசையின்கட்
சேயுத யஞ்சொல வூரனுக் கோடினர் சேடியரே. 12

வெள்ளணி அணிந்து விடுத்துழித் தலைமகன் வாயில் வேண்டல்.
405.
மலவிகன் மாற்றுங் கலைசைத் தியாகரை வாழ்த்துமென்பாற்
சிலவித னங்களைப் பாராட்டி யின்று சிறக்கணிக்கும்
புலவியை நீவணங் கித்தணி சென்றுநின் போதனையால்
நிலவிய நற்குண நற்செய்கை மிக்க நிரைவளைக்கே. 13

தலைவி நெய்யாடியது இகுளை சாற்றல்.
406.
கடல்வண்ண னேத்துங் கலைசைத் தியாகர் கருணையினால்
அடலயில் வேற்கண்ணி பாலற் பயந்துநெய் யாடினளால்
திடமுற வாங்கவண் மெய்யாற வேண்டுஞ் செறிதுனியும்
மிடலுடை யாவென்றி வீரா தணியவும் வேண்டுமின்றே. 14

தலைவன் தன்மனத்து உவகைகூர்தல்.
407.
செங்கையி லாடுங் கலைசைத் தியாகர்பொற் சேவடியை
அங்கையி னாற்றொழு நானின்று காண்ப னமுதிறைக்கும்
கொங்கையு மேந்து குழவியு நெய்யிட்ட கோலமும்பூ
நங்கைத னீர்மையும் பச்சுடம் பான நலத்தையுமே. 15

தலைவிக்கு அவன்வரல் பாங்கி சாற்றல்.
408.
உலகாள மைந்தன் பிறந்தன னென்னுமு னொல்லைவந்துன்
இலகா டகமனை வாயினின் றாருன் னிடத்தைவிட்டு
விலகாநின் றாலுங் கலைசைத் தியாகர்தம் வெற்பினல்லோர்
நலகால் விருப்ப மொழிவர் கொலோவெங்க ணாயகியே. 16

தலைவி உணர்ந்து தலைவனொடு புலத்தல்.
409.
கலைப்பா வலர்சூழ் கலைசைத் தியாகரைக் காண்டகுநீர்
விலைப்பா வையர்மனைக் கேபோ மவரிட்ட மென்களபம்
முலைப்பாலும் மார்பிடைப் பாயிற் கரையு முழுவதுமென்
தலைப்பா லனையுஞ் சவலைய தாக்குத றக்கதன்றே. 17

தலைவி பாணனை மறுத்தல்.
410.
பொன்மேடை மாடக் கலைசைத் தியாகர் புரக்குநன்னாட்
டன்மேவு கூந்தலெங் கைமயி லாடவவ் வண்ணன்முன்னே
இன்மேக ராகக் குறிஞ்சியைப் பாடங்ங னிங்ஙனநீ
வன்மேதி தின்னிநில் லேல்போக போக மறுமனைக்கே. 18

வாயில்மறுக்கப்பட்ட பாணன் கூறல்.
411.
செம்மேனி யப்பர் கலைசைத் தியாகரைச் சிந்தைசெயார்
தம்மேல் வினைவண்டு சூழ்ந்தெனக் கைக்கொண்டு தானெறிய
எம்மேல் விழுந்தகல் லிம்மேட தாயிற் றினிக்கல்லெடேல்
அம்மே யுனைவந் தனைபுரி வேன்சிவப் பாறுகவே. 19

விறலில் வாயில் மறுத்தல்.
412.
மறலியைக் காய்ந்த கலைசைத் தியாகரை வாழ்த்தலர்போல்
அறலிழி யக்கண் சுருட்டிக் கிடந்தியா னயர்வுறுங்கால்
விறலியிங் கெய்திச் சுருட்டி யெடுக்கும் விதியளதோ
திறலிறைக் கானமின் னார்செவிக் கேசென்று தென்னிசையே.

கூத்தர்வாயில் மறுத்தல்.
413.
சிதம்பர்க் கரியர் கலைசைத் தியாகர் திருநடங்கண்
டிதம்பெற் றிலாரி னிருப்பேற்குன் கூத்தினி தாகுங்கொலோ
நிதம்பத்தை விற்றுய்யும் பூவையர் பூரிக்க நீயங்குற்றுன்
மதம்பெற்ற வாட்டினைக் காட்டுக கூத்த மகிழ்நர்முன்னே. 21

பாங்கிவாயில் மறுத்தல்.
414.
மதலையைச் சூடுங் கலசத் தியாகர் வருமுதலில்
மதலையை யேந்தி கலைசைக் கணிகையர் மார்பிடையின்
மதலையைக் கைக்கொண் டுவப்புறு வாரென் வயிற்றுதித்த
மதலையைக் காணவின் றெய்தின்மின் னேயவர் வாஞ்சைநன்றே. 22

விருந்தொடு வந்துழிப் பொறித்தல் கண்டு தலைமகன் மகிழ்தல்.
415.
இண்டைச் சடையர் கலைசைத் தியாகர்க் கினியதிருத்
தொண்டைத்தொன்னாடனையாடுனிதீர்ந்திவடொண்டைச் செவ்வாய்க்
கண்டைப்பொருமின்சொற்கேட்டிளமூரலுங் கண்கள்கொண்டென்
பண்டைத் தவநல் விருந்துரு வாய்வரப் பார்த்தனமே. 23

தலைவன் சீறேலென்றவள் சீறடி தொழுதல்.
416.
ஒறுத்தார்க் கொருபொழு தின்பம் பொறுமை யுடையவர்நீர்
நிறுத்தா ருரைப்பர் கலைசைத் தியாகர்க்கு நேசம்வையார்
செறுத்தா லெனக்கதஞ் செய்யேல் பிழைபல செய்திடினும்
பொறுத்தா ரருள்செயுன் சிற்றடி பற்றினன் பொற்றொடியே. 24

ஈது எங்கையர் காணின் நன்றன்றென்றல்.
417.
தங்கச் சிலையர் கலைசைத் தியாகர்தழைந்துசந்த
தங்கச்சி மேயவர் நாடுடை யீர்செழுந் தண்ணறுஞ்சந்
தங்கச் சிடுந்தனந் தோயவென் றாடலை தாங்குதலென்
தங்கச்சி மைக்கெண்டை கண்டா லுமக்குச் சழக்குறுமே. 25

அங்கவர் யாரையும் அறியேனென்றல்.
418.
வடிவாள் விழிவடி வேதுனி தீர வருட்டியுன்சீ
றடிவாரி சம்பிடித் துந்தணி யாவிதெ னன்பர்வினை
கடிவார் கலைசைத் தியாகேசர் தோய்சிவ கங்கையிலே
படிவார் படிய நினைப்பர்கொல் புல்வாய்ப் பனிப்புனலே. 26

காமக்கிழத்தி வாயில் வேண்டல்.
426.
திருப்பங் கயத்தடஞ் சூழுங் கலைசைத் தியாகர்வெற்பர்
விருப்பங் கயலிடத் தேசென்று மீள்கினு மேதகுநீ
உருப்பங் கயமை யுடையோரிற் செய்த லுனக்கழகே
பொருப்பங் கயமருப் பேர்முலைச் செல்வி பொறுத்தருளே. 34

பாங்கி வாயில்நேர்வித்தல்.
427.
ஆமேவு பாலனை யாரணி மாத ரவர்க்கருந்தும்
பூமேவு மன்னமன் னார்கழற் காளையர் பூங்குழையாய்
நீமேலெங் கும்பசப் பூரநின் றேங்குமிந் நீர்மையென்னே
நாமேவி யேத்துங் கலைசைத் தியாகர்நன் னாட்டகத்தே. 35

மகனும் ஆற்றாமையும் வாயிலாகத் தலைமகன்
வந்துழித் தலைமகள் எதிர்கோடல்.
428.
நெறியாய்ந்த மேலவர் வேட்கைக் கடும்பரி நெஞ்சுறினும்
சிறியா ரிடத்திற் செலுத்துவ ரோசிவ காமியிடம்
பிறியாமல் வாழுங் கலைசைத் தியாகர் பெருவரங்கொள்
பொறியாள ரான புனலூரர் காமம் புகல்வதன்றே. 36

தலைமகன் நீங்கியபின் வந்த பாங்கியொடு தன் மகனைப் புகழ்தல்.
429.
கலனாகங் கைக்கொள் கலசத் தியாகர் கலைசையன்னாய்
கலநாரங் கான்றவென் கண்ணைத் துடைத்தன்பர் காமுறமங்
கலநாளு மோங்கிடத் தந்தானென் மைந்தனிற் காந்தைக்குநன்
கலனா வதுநன்மக் கட்பே றெனும்பயன் கண்டனமே. 37

தலைவி தலைமகனைப் புகழ்தல்.
430.
ஒருகேடில் கொம்பர் கலசத் தியாக ருறைகலைசைக்
கொருகே சரியன்ன வன்பர்நம் பாலன் றுயிரின்வைத்த
ஒருகேண்மை யின்று மொருவாமற் கூடி யுவப்புறலால்
ஒருகே ளிருமில்லை கண்டாய்கொண் டானி னுலகிடத்தே. 38

பாங்கி தலைவியைப் புகழ்தல்.
431. பாலிநன் னாடர் கலைசைத் தியாகர் பதம்பணியார்
போலிவர் செய்பிழை யெல்லா மறந்து புரிவுடனே
வாலிதின் மிக்கு மகிழ்ந்தெம் பிராட்டி வணங்குதலாற்
சாலியும் போற்றுந் தவமுடை யாளென்று சாற்றுவனே. 39

by Swathi   on 19 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.