LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

பரிபாடல்-1

 

பரிபாடல் என்னும் இசைப்பாக்களால் தொகுக்கப்பட்டதால் பரிபாடல் எனப் பெயர் பெற்றது. 70 பாடல்களில் 22 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதற்கு பரிமேலழகர் உரை எழுதியுள்ளார். 
நூல்
உரைச்சிறப்புப் பாயிரம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
கண்ணுதற் கடவு ளண்ணலங் குறுமுனி
முனைவேன் முருக னெனவிவர் முதலிய
திருந்துமொழிப் புலவ ரருந்தமி ழாய்ந்த
சங்கமென்னுந் துங்கமலி கடலுள்
அரிதி னெழுந்த பரிபாட் டமுதம் 5
அரசுநிலை திரீஇய வளப்பருங் காலம்
கோதில் சொன்மக ணோதகக் கிடத்தலிற்
பாடிய சான்றவர் பீடுநன் குணர
மிகைபடு பொருளை நகைபடு புன்சொலிற்
றந்திடை மடுத்த கந்திதன் பிழைப்பும் 10
எழுதினர் பிழைப்பு மெழுத்துரு வொக்கும்
பகுதியின் வந்த பாடகர் பிழைப்பும்
ஒருங்குடன் கிடந்த வொவ்வாப் பாடம்
திருந்திய காட்சியோர் செவிமுதல் வெதுப்பலிற்
சிற்றறி வினர்க்குந் தெற்றெனத் தோன்ற 15
மதியின் றகைப்பு விதியுளி யகற்றி
எல்லையில் சிறப்பிற் றெல்லோர் பாடிய
அணிதிகழ் பாடத்துத் துணிதரு பொருளைச்
சுருங்கிய வுரையின் விளங்கக் காட்டினன்
நீணிலங் கடந்தோன் றாடொழு மரபிற்
பரிமே லழக னுரிமையி னுணர்ந்தே 21
நேரிசை வெண்பா
விரும்பி யருணீல வெற்பிமயக் குன்றின்
வரும்பரிசு புள்ளுரு மாலே - சுரும்பு
வரிபாட லின்சீர் வளர்துளவந் தோளாய்
பரிபாட லின்சீர்ப் பயன்.
1. திருமால்
அரு மறைப் பொருள்
ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,
மாயுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனிச்
சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய,
வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை; 5
எரிமலர் சினைஇய கண்ணை; பூவை
விரிமலர் புரையும் மேனியை; மேனித்
திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்
தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை
எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை- 10
சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும்,
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.
அமர் வென்ற கணை
இணைபிரி அணி துணி பணி எரி புரை
விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர் 15
நெரி திரடெரி புரை தன மிகு தன முரண் மிகு
கடறரு மணியொடும் முத்து யாத்த நேரணி
நெறி செறி வெறி உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற் 20
றுணி படல் இன மணி வெயில் உறழ் எழில் நக்கு
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை
உடுவுறு தலை நிரை இதழ் அணி வயிறிரிய அமரரைப் 25
போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்
சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்
உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை.
சொல்லில் அடங்காப் பெரும் புகழ்
'பொருவேம்' என்றவர் மதம் தபக் கடந்து,
செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! 30
இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்!
தெருள நின் வரவு அறிதல்
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே:
அன்ன மரபின் அனையோய்! நின்னை
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? 35
அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின்
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை
மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம்
திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும்.
துதி மொழிகள்
விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் 40
அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; 45
ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ;
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், 50
நிலனும், நீடிய இமயமும், நீ.
அதனால்,
'இன்னோர் அனையை; இனையையால்' என,
அன்னோர் யாம் இவண் காணாமையின்,
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55
மன்னுயிர் முதல்வனை ஆதலின்,
நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!
நின் ஒக்கும் புகழ் நிழலவை;
பொன் ஒக்கும் உடையவை;
புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60
எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;
மண்ணுறு மணி பாய் உருவினவை;
எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,
ஆங்கு,
காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்-
வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே; 68
கடவுள் வாழ்த்து
2. திருமால்
பாடியவர் :: கீரந்தையார்
இசையமைத்தவர் :: நன்னாகனார் இசை
பண் :: பாலையாழ் 
திருமாலின் பெருமை
ஊழிகளின் தோற்றம்
தொல் முறை இயற்கையின் மதியொ
... ..... ... மரபிற்று ஆக,
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,
விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்லக்,
கரு வளர் வானத்து இசையின் தோன்றி, 5
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிள்ர்ந்த ஊழ்ஊழ் ஊழியும்;
செந் தீச்சுடரிய ஊழியும்; பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு, 10
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்;
நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,
மை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை- 15
வராக கற்பம்
கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;
ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுதும்
திருமாலின் நிலைகள்
நீயே, 'வளையொடி புரையும் வாலியோற்கு அவன் 20
இளையன்' என்போர்க்கு இளையை ஆதாம்,
'புதை இருள் உடுக்கைப் பொலம் பனைக்கொடியோற்கு
முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும்,
வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும், 25
இந் நிலைத் தெரி பொருள் தேரின், இந் நிலை
நின் நிலைத் தோன்றும் நின் தொல் நிலைச்சிறப்பே.
திருமாலின் சிறப்பு
ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும்
பூண் அணி கவைஇய ஆர் அணி நித்தில
நித்தில மதாணி அத்தகு மதி மறுச் 30
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம்-
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண்
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு
'புள்ளி நிலனும் புரைபடல் அரிது' என
உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று. 35
படைச் சிறப்பு
ஒடியா உள்ளமொடு உருத்து, ஒருங்கு உடன் இயைந்து,
இடி எதிர் கழறும்-கால் உறழ்பு எழுந்தவர்
கொடி அறுபு இறுபு, செவி செவிடு படுபு,
முடிகள் அதிர, படிநிலை தளர,
நனி முரல் வளை முடி அழிபு, இழிபு, 40
தலை இறுபு தாரொடு புரள-
நிலை தொலைபு, வேர், தூர், மடல்,
குருகு, பறியா நீள் இரும் பனைமிசைப்
பல பதினாயிரம் குலை தரை உதிர்வபோல்-
நில்லாது, ஒருமுறை கொய்பு கூடி, 45
ஒருங்கு உருண்டு, பிளந்து, நெரிந்து, உருள்பு சிதறுபு,
அளறு சொரிபு, நிலம் சோர,
சேரார் இன் உயிர் செகுக்கும்-
போர் அடு குரிசில்! நீ ஏந்திய படையே:
ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே; 50
பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே.
திருமால் திருமேனியின் ஒளி முதலிய சிறப்புக்கள்
நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திருமணி;
கண்ணே, புகழ்சால் தாமரை அலர் இணைப் பிணையல்;
வாய்மை, வயங்கிய வைகல்; சிறந்த
நோன்மை நாடின், இரு நிலம்; யாவர்க்கும், 55
சாயல் நினது, வான் நிறை-என்னும்
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே:
அவ்வும் பிறவும் ஒத்தனை; உவ்வும்
எவ் வயினோயும் நீயே.
உருவமும், உணவும், வெளிப்பாடும்
செவ்வாய் உவணத்து உயர் கொடியோயே! 60
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்,
படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்,
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித்
திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்,
நின் உருபுடன் உண்டி; 65
பிறர் உடம்படுவாரா
நின்னொடு புரைய
அந்தணர் காணும் வரவு.
பல் புகழும் பரவலும்
வாயடை அமிர்தம் நின் மனத்தகத்து அடைத்தர,
மூவா மரபும் ஓவா நோன்மையும் 70
சாவா மரபின் அமரர்க்காச் சென்ற நின்
... ... ... மரபினோய் நின் அடி
தலை உற வணங்கினேம், பல் மாண் யாமும்;
கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்,
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்-
'கொடும்பாடு அறியற்க, எம் அறிவு!' எனவே. 76
கடவுள் வாழ்த்து
3. திருமால்
பாடியவர் :: கடுவன் இளவெயினனார்
இசையமைத்தவர் :: பெட்டனாகனார்
பண் :: பாலையாழ் 
திருமாலிடமிருந்து தோன்றிய பரந்த பொருள்கள்
மா அயோயே! மாஅயோயே!
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
மணி திகழ் உருபின் மா அயோயே!
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், 5
திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
மூ-ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் 10
மாயா வாய்மொழி உரைதர வலந்து:
'வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,
நீ' என பொழியுமால், அந்தணர் அரு மறை.
முனிவரும் தேவரும் பாடும் வகை
'ஏஎர், வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின், 15
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை;
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்
நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின்
சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை; 20
தீ செங் கனலியும், கூற்றமும், ஞமனும்,
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூஉம்
ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு
கேழலாய் மருப்பின் உழுதோய்' எனவும்,
'மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச் 25
சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய்' எனவும்,
ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து
நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்
பாடும் வகையே: எம் பாடல்தாம் அப்
பாடுவார் பாடும் வகை. 30
வடிவு வேற்றுமையும் பெயர் வேற்றுமையும்
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்
எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின, கை;
நகை அச்சாக நல் அமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரூ கை,
இரூ கை மாஅல் ! 35
முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!
ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்!
எழு கையாள! எண் கை ஏந்தல்!
ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள!
பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்! 40
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை! 45
நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ,
முன்னை மரபின் முதுமொழி முதல்வ!
வனப்பும் வலியும்
நினக்கு-விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,
வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம்-
வனப்பு வரம்பு அறியா மரபினோயே! 50
அணி நிழல் வயங்கு ஒளி, ஈர்-எண் தீம் கதிர்,
பிறை வளர், நிறை மதி உண்டி,
அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ;
திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி,
நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் 55
அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால், 'பகைவர் இவர்; இவர் நட்டோர்' என்னும்
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?
ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட
சேவல் ஊர்தியும், 'செங் கண் மாஅல்! 60
ஓ!' எனக் கிளக்கும் கால முதல்வனை;
ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்;
சாம வேதம் கூறுதலின் தெளிந்த பொருள்
தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ; 65
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,
உறையும் உறைவதும் இலையே; உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை; 70
முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே;
நால்வகை யுகங்களிலும் ஆராயப்படும் சிறப்பு
பறவாப் பூவைப் பூவினோயே!
அருள் குடையாக, அறம் கோலாக,
இரு நிழல் படாமை மூ-ஏழ் உலகமும் 75
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;
பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை; 80
நால் வகை வியூகம்
செங் கட் காரி! கருங் கண் வெள்ளை!
பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்!
பல திறப் பெயரியல்புகள்
இடவல! குட அல! கோவல! காவல!
காணா மரப! நீயா நினைவ!
மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ! 85
தொல் இயல் புலவ! நல் யாழ்ப் பாண!
மாலைச் செல்வ! தோலாக் கோட்ட!
பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண
பருதி வலவ! பொரு திறல் மல்ல!
திருவின் கணவ! பொரு விறல் மள்ள! 90
மா நிலம் இயலா முதல்முறை அமையத்து,
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய
வாய்மொழி மகனொடு மலர்ந்த
தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே! 94

பரிபாடல் என்னும் இசைப்பாக்களால் தொகுக்கப்பட்டதால் பரிபாடல் எனப் பெயர் பெற்றது. 70 பாடல்களில் 22 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதற்கு பரிமேலழகர் உரை எழுதியுள்ளார். 

நூல்

உரைச்சிறப்புப் பாயிரம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)
கண்ணுதற் கடவு ளண்ணலங் குறுமுனிமுனைவேன் முருக னெனவிவர் முதலியதிருந்துமொழிப் புலவ ரருந்தமி ழாய்ந்தசங்கமென்னுந் துங்கமலி கடலுள்அரிதி னெழுந்த பரிபாட் டமுதம் 5
அரசுநிலை திரீஇய வளப்பருங் காலம்கோதில் சொன்மக ணோதகக் கிடத்தலிற்பாடிய சான்றவர் பீடுநன் குணரமிகைபடு பொருளை நகைபடு புன்சொலிற்றந்திடை மடுத்த கந்திதன் பிழைப்பும் 10
எழுதினர் பிழைப்பு மெழுத்துரு வொக்கும்பகுதியின் வந்த பாடகர் பிழைப்பும்ஒருங்குடன் கிடந்த வொவ்வாப் பாடம்திருந்திய காட்சியோர் செவிமுதல் வெதுப்பலிற்சிற்றறி வினர்க்குந் தெற்றெனத் தோன்ற 15
மதியின் றகைப்பு விதியுளி யகற்றிஎல்லையில் சிறப்பிற் றெல்லோர் பாடியஅணிதிகழ் பாடத்துத் துணிதரு பொருளைச்சுருங்கிய வுரையின் விளங்கக் காட்டினன்நீணிலங் கடந்தோன் றாடொழு மரபிற்பரிமே லழக னுரிமையி னுணர்ந்தே 21

நேரிசை வெண்பா
விரும்பி யருணீல வெற்பிமயக் குன்றின்வரும்பரிசு புள்ளுரு மாலே - சுரும்புவரிபாட லின்சீர் வளர்துளவந் தோளாய்பரிபாட லின்சீர்ப் பயன்.

1. திருமால்
அரு மறைப் பொருள்
ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலைதீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,மாயுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனிச்சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய,வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை; 5
எரிமலர் சினைஇய கண்ணை; பூவைவிரிமலர் புரையும் மேனியை; மேனித்திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரைஎரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை- 10
சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்ஏவல் உழந்தமை கூறும்,நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.அமர் வென்ற கணைஇணைபிரி அணி துணி பணி எரி புரைவிடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர் 15
நெரி திரடெரி புரை தன மிகு தன முரண் மிகுகடறரு மணியொடும் முத்து யாத்த நேரணிநெறி செறி வெறி உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற் 20
றுணி படல் இன மணி வெயில் உறழ் எழில் நக்குஇமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணிமணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசைஉடுவுறு தலை நிரை இதழ் அணி வயிறிரிய அமரரைப் 25
போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை.

சொல்லில் அடங்காப் பெரும் புகழ்
'பொருவேம்' என்றவர் மதம் தபக் கடந்து,செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! 30
இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்!தெருள நின் வரவு அறிதல்மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே:அன்ன மரபின் அனையோய்! நின்னைஇன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? 35
அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின்பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவைமெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம்திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும்.

துதி மொழிகள்
விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் 40
அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; 45
ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்புலமும், பூவனும், நாற்றமும், நீ;வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், 50
நிலனும், நீடிய இமயமும், நீ.அதனால்,'இன்னோர் அனையை; இனையையால்' என,அன்னோர் யாம் இவண் காணாமையின்,பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55
மன்னுயிர் முதல்வனை ஆதலின்,நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!நின் ஒக்கும் புகழ் நிழலவை;பொன் ஒக்கும் உடையவை;புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60
எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;மண்ணுறு மணி பாய் உருவினவை;எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,ஆங்கு,காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறையாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்-வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே; 68

கடவுள் வாழ்த்து
2. திருமால்
பாடியவர் :: கீரந்தையார்இசையமைத்தவர் :: நன்னாகனார் இசைபண் :: பாலையாழ் திருமாலின் பெருமை
ஊழிகளின் தோற்றம்
தொல் முறை இயற்கையின் மதியொ... ..... ... மரபிற்று ஆக,பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்லக்,கரு வளர் வானத்து இசையின் தோன்றி, 5
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;உந்து வளி கிள்ர்ந்த ஊழ்ஊழ் ஊழியும்;செந் தீச்சுடரிய ஊழியும்; பனியொடுதண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்றுஉள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு, 10
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்;நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,மை இல் கமலமும், வெள்ளமும், நுதலியசெய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை- 15
வராக கற்பம்
கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரியஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்குஊழி யாவரும் உணரா;ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுதும்
திருமாலின் நிலைகள்
நீயே, 'வளையொடி புரையும் வாலியோற்கு அவன் 20
இளையன்' என்போர்க்கு இளையை ஆதாம்,'புதை இருள் உடுக்கைப் பொலம் பனைக்கொடியோற்குமுதியை என்போர்க்கு முதுமை தோன்றலும்,வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்தகெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும், 25
இந் நிலைத் தெரி பொருள் தேரின், இந் நிலைநின் நிலைத் தோன்றும் நின் தொல் நிலைச்சிறப்பே.
திருமாலின் சிறப்பு
ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும்பூண் அணி கவைஇய ஆர் அணி நித்திலநித்தில மதாணி அத்தகு மதி மறுச் 30
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம்-வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண்வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு'புள்ளி நிலனும் புரைபடல் அரிது' எனஉள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று. 35
படைச் சிறப்பு
ஒடியா உள்ளமொடு உருத்து, ஒருங்கு உடன் இயைந்து,இடி எதிர் கழறும்-கால் உறழ்பு எழுந்தவர்கொடி அறுபு இறுபு, செவி செவிடு படுபு,முடிகள் அதிர, படிநிலை தளர,நனி முரல் வளை முடி அழிபு, இழிபு, 40
தலை இறுபு தாரொடு புரள-நிலை தொலைபு, வேர், தூர், மடல்,குருகு, பறியா நீள் இரும் பனைமிசைப்பல பதினாயிரம் குலை தரை உதிர்வபோல்-நில்லாது, ஒருமுறை கொய்பு கூடி, 45
ஒருங்கு உருண்டு, பிளந்து, நெரிந்து, உருள்பு சிதறுபு,அளறு சொரிபு, நிலம் சோர,சேரார் இன் உயிர் செகுக்கும்-போர் அடு குரிசில்! நீ ஏந்திய படையே:ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே; 50
பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே.
திருமால் திருமேனியின் ஒளி முதலிய சிறப்புக்கள்நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திருமணி;கண்ணே, புகழ்சால் தாமரை அலர் இணைப் பிணையல்;வாய்மை, வயங்கிய வைகல்; சிறந்தநோன்மை நாடின், இரு நிலம்; யாவர்க்கும், 55
சாயல் நினது, வான் நிறை-என்னும்நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே:அவ்வும் பிறவும் ஒத்தனை; உவ்வும்எவ் வயினோயும் நீயே.உருவமும், உணவும், வெளிப்பாடும்செவ்வாய் உவணத்து உயர் கொடியோயே! 60
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்,படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்,புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித்திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்,நின் உருபுடன் உண்டி; 65
பிறர் உடம்படுவாராநின்னொடு புரையஅந்தணர் காணும் வரவு.
பல் புகழும் பரவலும்
வாயடை அமிர்தம் நின் மனத்தகத்து அடைத்தர,மூவா மரபும் ஓவா நோன்மையும் 70
சாவா மரபின் அமரர்க்காச் சென்ற நின்... ... ... மரபினோய் நின் அடிதலை உற வணங்கினேம், பல் மாண் யாமும்;கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்,கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்-'கொடும்பாடு அறியற்க, எம் அறிவு!' எனவே. 76

கடவுள் வாழ்த்து
3. திருமால்
பாடியவர் :: கடுவன் இளவெயினனார்இசையமைத்தவர் :: பெட்டனாகனார்பண் :: பாலையாழ் 
திருமாலிடமிருந்து தோன்றிய பரந்த பொருள்கள்மா அயோயே! மாஅயோயே!மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடிமணி திகழ் உருபின் மா அயோயே!தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், 5
திதியின் சிறாரும், விதியின் மக்களும்,மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,மூ-ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் 10
மாயா வாய்மொழி உரைதர வலந்து:'வாய்மொழி ஓடை மலர்ந்ததாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,நீ' என பொழியுமால், அந்தணர் அரு மறை.
முனிவரும் தேவரும் பாடும் வகை
'ஏஎர், வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின், 15
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை;பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின்சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை; 20
தீ செங் கனலியும், கூற்றமும், ஞமனும்,மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூஉம்ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழுகேழலாய் மருப்பின் உழுதோய்' எனவும்,'மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச் 25
சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய்' எனவும்,ஞாலத்து உறையுள் தேவரும் வானத்துநால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்பாடும் வகையே: எம் பாடல்தாம் அப்பாடுவார் பாடும் வகை. 30
வடிவு வேற்றுமையும் பெயர் வேற்றுமையும்கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின, கை;நகை அச்சாக நல் அமிர்து கலந்தநடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரூ கை,இரூ கை மாஅல் ! 35
முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்!எழு கையாள! எண் கை ஏந்தல்!ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள!பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்! 40
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை! 45
நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ,முன்னை மரபின் முதுமொழி முதல்வ!
வனப்பும் வலியும்
நினக்கு-விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம்-வனப்பு வரம்பு அறியா மரபினோயே! 50
அணி நிழல் வயங்கு ஒளி, ஈர்-எண் தீம் கதிர்,பிறை வளர், நிறை மதி உண்டி,அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ;திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி,நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் 55
அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;அதனால், 'பகைவர் இவர்; இவர் நட்டோர்' என்னும்வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்டசேவல் ஊர்தியும், 'செங் கண் மாஅல்! 60
ஓ!' எனக் கிளக்கும் கால முதல்வனை;ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்;சாம வேதம் கூறுதலின் தெளிந்த பொருள்தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ; 65
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,உறையும் உறைவதும் இலையே; உண்மையும்மறவியில் சிறப்பின் மாயமார் அனையை; 70
முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே;
நால்வகை யுகங்களிலும் ஆராயப்படும் சிறப்பு
பறவாப் பூவைப் பூவினோயே!அருள் குடையாக, அறம் கோலாக,இரு நிழல் படாமை மூ-ஏழ் உலகமும் 75
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை; 80
நால் வகை வியூகம்
செங் கட் காரி! கருங் கண் வெள்ளை!பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்!
பல திறப் பெயரியல்புகள்
இடவல! குட அல! கோவல! காவல!காணா மரப! நீயா நினைவ!மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ! 85
தொல் இயல் புலவ! நல் யாழ்ப் பாண!மாலைச் செல்வ! தோலாக் கோட்ட!பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ணபருதி வலவ! பொரு திறல் மல்ல!திருவின் கணவ! பொரு விறல் மள்ள! 90
மா நிலம் இயலா முதல்முறை அமையத்து,நாம வெள்ளத்து நடுவண் தோன்றியவாய்மொழி மகனொடு மலர்ந்ததாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே! 94

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.