LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

பரிபாடல்-3

 

7. வையை
(தலைமகன் தலைமகளோடு புனல் ஆடினான் எனக் கேட்டு இன்புற்ற செவிலித்தாய், தோழியை,
'நீங்கள் ஆடிய புனலணி இன்பம் கூறுக என்றாட்கு, அப் புனலாணி இன்பமும், பல்வேறு வகைப்பட்ட
இன்பமும், தலைமகன் காதன்மையும், கூறி, 'என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக, யாம்' என்றது.)
பாடியவர் :: மையோடக் கோவனார்
இசையமைத்தவர் :: பித்தாமத்தர்
பண் :: பாலையாழ் 
வையைப் புனலின் வருகை
திரை இரும் பனிப் பௌவம் செவ்விதா அற முகந்து,
உர உரும் உடன்று ஆர்ப்ப, ஊர் பொறை கொள்ளாது,
கரை உடை குளமெனக் கழன்று, வான் வயிறு அழிபு,
வரைவரை தொடித்த வயங்கு வெள் அருவி--
இரவு இருள் பகலாக, இடம் அரிது செலவு என்னாது, 5
வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய
நிலன் உற நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்ன--
பெயலான் பொலிந்து, பெரும் புனல் பல நந்த,
நலன் நந்த நாடு அணி நந்தப் புலன் நந்த
வந்தன்று, வையைப் புனல். 10
புனலின் செயல்
நளி இருஞ் சோலை நரந்தம் தாஅய்,
ஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு,
துளியின் உழந்த தோய்வு அருஞ் சிமைதொறும்
வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு,
உய்ர்ந்துழி உள்ளன பயம்பிடைப் பரப்பி; 15
உழவர் களி தூங்க, முழவு பணை முரல,
ஆடல் அறியா அரிவை போலவும்,
ஊடல் அறியா உவகையள் போலவும்,
வேண்டு வழி நடந்து, தாங்கு தடை பொருது;
விதி ஆற்றான் ஆக்கிய மெய்க் கலவை போலப் 20
பொது நாற்றம் உள்உள் கரந்து, புது நாற்றம்
செய்கின்றே, செம் பூம் புனல்.
வெள்ளப் பெருக்கைக் கண்ட மக்களின் செயல்
'கவிழ்ந்த புனலின் கயம் தண் கழுநீர்
அவிழ்ந்த மலர் மீதுற்றென, ஒருசார்;
மாதர் மடநல்லார், மணலின் எழுதிய 25
பாவை சிதைத்தது' என அழ, ஒருசார்;
'அகவயல் இள நெல் அரிகால் சூடு
தொகு புனல் பரந்தெனத் துடி பட, ஒருசார்;
'ஓதம் சுற்றியது ஊர்' என, ஒருசார்;
'கார் தூம்பு அற்றது வான்' என, ஒருசார்; 30
'பாடுவார் பாக்கம் கொண்டென,
ஆடுவார் சேரி அடைந்தென,
கழனி வந்து கால் கோத்தென,
பழன வாளை பாளை உண்டென,
வித்து இடு புலம் மேடு ஆயிற்றென, 35
உணர்த்த உணரா ஒள் இழை மாதரைப்
புணர்த்திய இச்சத்துப் பெருக்கத்தின் துனைந்து,
சினை வளர் வாளையின் கிளையொடு கெழீஇ,
பழன உழவர், பாய் புனல் பரத்தந்து,
வையைப் புனலின் வனப்பு
இறு வரை புரையுமாறு இரு கரை ஏமத்து, 40
வரை புரை உருவின் நுரை பல சுமந்து,
பூ வேய்ந்து, பொழில் பரந்து;
துனைந்து ஆடுவார் ஆய் கோதையர்,
அலர் தண் தாரவர், காதில்
தளிர் செரீஇ, கண்ணி பறித்து; 45
கை வளை, ஆழி, தொய்யகம், புனை துகில்,
மேகலை, காஞ்சி, வாகுவலயம்,
எல்லம் கவரும் இயல்பிற்றாய்: தென்னவன்
ஒன்னார் உடை புலம் புக்கற்றால்---மாறு அட்ட
தானையான் வையை வனப்பு. 50
தோழி புனலணி இன்பம் கூறுதல்
புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள்
துரந்து புனல் தூவ, தூ மலர்க் கண்கள்
அமைந்தன; ஆங்கண், அவருள் ஒருத்தி,
கை புதைஇய வளை
ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள் 55
போக்கிச் சிறைப்பிடித்தாள்; ஓர் பொன் அம் கொம்பு
பரிந்து அவளைக் கைப் பிணை நீக்குவான் பாய்வாள்;
இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால்
செம்மைப் புதுப் புனல் சென்று இருளாயிற்றே;
வையைப் பெருக்கு வடிவு. 60
தோழி தலைமகன் காதன்மை கூறுதல்
விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர,
சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல்;
பேர் மகிழ் செய்யும் பெரு நறாப் பேணியவே,
கூர் நறா ஆர்ந்தவள் கண்.
கண் இயல் கண்டு ஏத்தி, காரிகை நீர் நோக்கினைப் 65
பாண் ஆதரித்துப் பல பாட; அப் பாட்டுப்
பேணாது ஒருத்தி பேதுற; ஆயிடை,
'என்னை வருவது எனக்கு?' என்று, இனையா,
நன் ஞெமர் மார்பன் நடுக்குற, நண்ணி;
சிகை கிடந்த ஊடலின் செங் கண் சேப்பு ஊர, 70
வகை தொடர்ந்த ஆடலுள் நல்லவர் தம்முள்
பகை தொடர்ந்து, கோதை பரியூஉ, நனி வெகுண்டு,
யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன்
சேறு ஆடு மேனி திருநிலத்து உய்ப்ப, சிரம் மிதித்து,
தீர்விலதாகச் செருவுற்றாள்___ செம் புனல் 75
ஊருடன் ஆடுங்கடை.
தோழி வையையின் நீரணியின்பம் குறித்துக் கூறுதல்
புரி நரம்பு இன் கொளைப் புகல் பாலை ஏழும்
எழூஉப் புணர் யாழும், இசையும், கூட;
குழல் அளந்து நிற்ப; முழவு எழுந்து ஆர்ப்ப;
மன் மகளிர், சென்னியர், ஆடல் தொடங்க; 80
பொருது இழிவார் புனல் பொற்பு-அது
உரும் இடி சேர்ந்த முழக்கம் புரையும்
திருமருதமுன்துறை சேர் புனற்கண் துய்ப்பார்
தாமம் தலை புனை பேஎம் நீர் வையை!
நின் பயம் பாடி விடிவுற்று ஏமாக்க--- 85
நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்தெனவே. 
கடவுள் வாழ்த்து
8. செவ்வேள்
பாடியவர் :: நல்லந்துவனார்
இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்
பண் :: பாலையாழ் 
திருப்பரங்குன்றத்தின் அமைப்பும் சிறப்பும்
மண்மிசை---அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
புள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும்,
மலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும்,
மருந்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும், 5
ஆதிரை முதல்வனின் கிளந்த
நாதர் பன்னொருவரும், நன் திசை காப்போரும்,
யாவரும், பிறரும், அமரரும், அவுணரும்,
மேஅரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்---
பற்றாகின்று, நின் காரணமாக; 10
பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்.
இமயக் குன்றினில் சிறந்து
நின் ஈன்ற நிரை இதழ்த் தாமரை
மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா
ஒருநிலைப் பொய்கையோடு ஒக்கும்--- நின் குன்றின் 15
அருவி தாழ் மாலைச் சுனை.
முதல்வ! நின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல்.
குரல் கேட்ட கோழி குன்று அதிரக் கூவ,
மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப, 20
எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு, மலை முழை.
குன்றத்திற்கும் கூடாக்கும் இடையிலுள்ள வழி
ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்து அன்ன, இனம்
வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப, சுனை மலர,
கொன்றை கொடி இணர் ஊழ்ப்ப, கொடி மலர்
மன்றல மலர, மலர் காந்தள் வாய் நாற, 25
நன்று அவிழ் பல் மலர் நாற, நறை பனிப்ப,
தென்றல் அசைவரூஉம் செம்மற்றே-- அம்ம! நின்
குன்றத்தான் கூடல் வரவு.
குன்றத்தின் முழக்கம்
குன்றம் உடைத்த ஒளிர் வேலோய்! கூடல்
மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ, 30
காலொடு மயங்கிய கலிழ் கடலென,
மால் கடல் குடிக்கும் மழைக் குரலென,
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உருமென,
மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் --நின்
குன்றம் குமுறிய உரை. 35
தலைமகன் தலைமகட்குக் குன்றத்தின் சிறப்புக் கூறுதல்
'தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர்
காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று;
வடு வகிர் வென்ற கண், மாந் தளிர் மேனி,
நெடு மென் பணைத் தோள், குறுந் தொடி, மகளிர்
ஆராக் காமம், ஆர் பொழிற் பாயல், 40
வரையகத்து, இயைக்கும் வரையா நுகர்ச்சி;
முடியா நுகர்ச்சி முற்றாக் காதல்,
அடியோர் மைந்தர் அகலத்து அகலா
அலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி,
புலரா மகிழ்; மறப்பு அறியாது நல்கும் 45
சிறப்பிற்றே---தண் பரங்குன்று.'
தலைமகள் புலந்து உரைத்தல்
'இனி, மன்னும் ஏதிலர் நாறுதி; ஆண்டுப்
பனி மலர்க் கண்ணாரோடு ஆட--நகை மலர்
மாலைக்கு மாலை வரூஉம்; வரை சூள் நில்--
காலைப் போய் மாலை வரவு.' 50
தலைமகன் சூளும் தலைவி விலகலும்
'இனி மணல் வையை இரும் பொழிலும், குன்றப்
பனி பொழி சாரலும், பார்ப்பாரும்;....
துனியல், மலருண்கண்! சொல் வேறு; நாற்றம்
கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது;
துனியல் நனி 'நீ நின் சூள்.' 55
தோழி தலைமகனைச் சூள் விலகக்கூறுதல்
'என் பாணி நில் நில்---எலாஅ!--பாணி நீ, நின் சூள்;
சான்றாளர் ஈன்ற தகாஅத் தகாஅ மகாஅன்!--
ஈன்றாட்கு ஒரு பெண், இவள்.
"இருள் மை ஈர் உண் கண் இலங்கு இழை ஈன்றாட்கு
அரியளோ? ஆவது அறிந்திலேன்; ஈதா; 60
வரு புனல் வையை மணல் தொட்டேன்; தரு மண வேள்
தண் பரங்குன்றத்து அடி தொட்டேன்" என்பாய்;
கேளிர் மணலின் கெழுவும் இதுவோ?
ஏழ் உலகும் ஆளி திரு வரைவேல் அன்பு அளிதோ?
என்னை அருளி அருள் முருகு சூள் சூளின், 65
நின்னை அருள் இல் அணங்கான் மெய் வேல் தின்னும்;
விறல் வெய்யோன் ஊர் மயில், வேல் நிழல், நோக்கி;
அறவர் அடி தொடினும், ஆங்கு அவை சூளேல்;
குறவன் மகள் ஆணை கூறு ஏலா! கூறேல்;
ஐய! சூளின், அடி தொடு குன்றொடு 70
வையைக்குத் தக்க மணல் சீர் சூள் கூறல்!'
தலைமகனது உரை
யார் பிரிய, யார் வர, யார் வினவ, யார் செப்பு?
'நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி,' நேரிழாய்!
கய வாய் நெய்தல் அலர், கமழ்முகை மண நகை
நயவரு நறவு இதழ், மதர் உண்கண்; வாள் நுதல்; 75
முகை முல்லை வென்று, எழில் முத்து ஏய்க்கும் வெண் பல்____
நகை சான்ற கனவு அன்று; நனவு அன்று___ நவின்றதை:
இடு துனி கை ஆறா என், துயர் கூரச்
சுடும், இறை; ஆற்றிசின், அடி சேர்ந்து! சாற்றுமின்_____
மிக ஏற்றுதும் மலர், ஊட்டுதும் அவி, 80
கேட்டுதும் பாணி; எழுதும் கிணை_____முருகன்
தாள் தொழு தண் பரங்குன்று!
தோழி தலைமகளின் கற்புடைமை கூறல்
'தெரி இழாய் செல்க!' என்றாய்; எல்லா! யாம் பெற்றேம்,
ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல்;
பருவத்துப் பல் மாண் நீ சேறவின் காண்டை____ 85
எருமை இருத் தோட்டி எள்ளீயும் காளை
செருவம் செயற்கு என்னை முன்னை, தன் சென்னி,
அருள்வயினான், தூங்கு மணி கையால் தாக்கி,
நிரைவளை ஆற்று, இருஞ் சூள்,
தலைமகளிரது செய்தி
வளி பொரு சேண் சிமை வரையகத்தால் 90
தளி பெருகும் தண் சினைய
பொழில் கொளக் குறையா மலர,
குளிர் பொய்கை அளறு நிறைய,
மருதம் நளி மணல் ஞெமர்ந்த
நனி மலர்ப் பெரு வழி, 95
சீறடியவர் சாறு கொள எழுந்து;
வேறுபடு சாந்தமும், வீறுபடு புகையும்,
ஆறு செல் வளியின் அவியா விளக்கமும்,
நாறு கமழ் வீயும், கூறும் இசை முழவமும்,
மணியும், கயிறும், மயிலும், குடாரியும், 100
பிணிமுகம், உளப்படப் பிறவும், ஏந்தி;
அரு வரைச் சேராத் தொழுநர்,
'கனவின் தொட்டது கை பிழையாகாது
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை
வரு புனல் அணிக எனவரம் கொள்வோரும், 105
'கரு வயிறு உறுக எனக் கடம்படுவோரும்,
'செய் பொருள் வாய்க்கா எனச் செவி சார்த்துவோரும்,
'ஐ அமர் அடுக என அருச்சிப்போரும்,
பாடுவார் பாணிச் சீரும், ஆடுவார் அரங்கத் தாளமும்,
மஞ்சு ஆடு மலை முழக்கும், 110
துஞ்சாக் கம்பலை______
பைஞ் சுனைப் பாஅய் எழு பாவையர்
ஆய் இதழ் உண்கண் அலர் முகத் தாமரை,
தாட் தாமரை, தோட்தமனியக் கய மலர்,
எம் கைப் பதுமம், கொங்கைக் கய முகை, 115
செவ் வாய் ஆம்பல் செல் நீர்த் தாமரை,
புனற் தாமரையொடு, புலம் வேறுபாடுறாக்
கூர் ஏயிற்றார் குவிமுலைப் பூணொடு,
மாரண் ஒப்பார் மார்பு அணி கலவி;
அரிவையர் அமிர்த பானம் 120
உரிமை மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப;
மைந்தர் மார்வம் வழி வந்த,
செந் தளிர் மேனியார், செல்லல் தீர்ப்ப;
பரங்குன்றை வாழ்த்தல்
என ஆங்கு,
உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி, 125
கடம்பு அமர் செல்வன் கடி நகர் பேண____
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த____
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்,
மண் பரிய வானம் வறப்பினும், மன்னுகமா,
தண் பரங்குன்றம்! நினக்கு. 130
கடவுள் வாழ்த்து
9. செவ்வேள்
பாடியவர் :: குறும்பூதனார்
இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்
பண் :: பாலையாழ் 
முருகவேளை வாழ்த்துதல்
இரு நிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி,
அரு நிலை உயர் தெய்வத்து அணங்குசால் தலை காக்கும்,
உருமுச் சூழ் சேண் சிமை___உயர்ந்தவர் உடம்பட_____
எரி மலர்த் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி
விரி சடைப் பொறை ஊழ்த்து, விழு நிகர் மலர் ஏய்ப்ப, 5
தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு, மதி ஆரல் பிறந்தோய்! நீ.
மை இரு நூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று,
ஐ-இருநூற்று மெய்ந் நயனத்தவன் மகள் மலர் உண்கண்,
மணி மழை தலைஇயென, மா வேனில் கார் ஏற்று, 10
தணி மழை தலையின்று, தன் பரங்குன்று.
தமிழது சிறப்பிற்குக் காரணம்
நான்மறை விரித்து, நல் இசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர்! கேண்மின், சிறந்தது;
காதற் காமம், காமத்துச் சிறந்தது;
விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி: 15
புலத்தலின் சிறந்தது, கற்பே; அது தான்
இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடாப்
பரத்தை உள்ளதுவே: பண்புறு கழறல்,
தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்புற
நாள் அணிந்து, உவக்கும் சுணங்கறையதுவே; 20
கேள் அணங்குற மனைக் கிளந்துள, சுணங்கறை;
சுணங்கறைப் பயனும் ஊடலுள் ளதுவே.
அதனால், அகறல் அறியா அணி இழை நல்லார்
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர்; இத்
தள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார் 25
கொள்ளார், இக் குன்று பயன்.
வள்ளியும் முருகனும் சிறந்தவாறு
ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி, புனல் தந்த
காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின்,
கேழ் ஆரம் பொற்ப வருவானைத் தொழாஅ,
'வாழிய, மாயா! நின் தவறு இலை; எம் போலும் 30
கேழ் இலார்____ மாண் நலம் உண்கோ, திரு உடையார்
மென் தோள்மேல் அல்கி நல்கலம் இன்று?____
வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனிப்
பெய்ய உழக்கும், மழைக் கா; மற்று ஐய!'
கரையா வெந் நோக்கத்தான் கை சுட்டி, பெண்டின் 35
இகலின் இகந்தாளை, அவ் வேள் தலைக் கண்ணி
திருந்து அடி தோயத் திறை கொடுப்பானை,
'வருந்தல்' என, அவற்கு மார்பு அளிப்பாளை,
'குறுகல்' என்று ஒள்ளிழை கோதை கோலாக
இறுகிறுக யாத்துப் புடைப்ப; 40
ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல,
இருவர் வான் கிளி ஏற்பில் மழலை,
செறி கொண்டைமேல் வண்டு சென்று பாய்ந்தன்றே,
வெறி கொண்டான் குன்றத்து வண்டு.
வள்ளியின் பாங்கியரும் தேவசேனையின் பாங்கியரும் இகழ்தல்
தார் தார் பிணக்குவார்; கண்ணி ஓச்சித் தடுமாறுவார்; 45
மார்பு அணி கொங்கை வார் மத்திகையாப் புடைப்பார்;
கோதை வரிப் பந்து கொண்டு எறிவார்____
பேதை மட நோக்கம் பிறிதாக, ஊத
நுடங்கு நொசி நுசுப்பார்______நூழில் தலைக்கொள்ள:
கயம்படு கமழ் சென்னிக் களிற்று இயல் கைம்மாறுவார்; 50
வயம்படு பரிப் புரவி மார்க்கம் வருவார்
தேர் அணி அணி கயிறு தெரிபு வருவார்
வரி சிலை வளைய மார்பு உற வாங்குவார்
வாளி வாளிகள் நிலைபெற மறலுவார்
தோள் வளை ஆழி சுழற்றுவார்___ 55
மென் சீர் மயில் இயலவர்
வாள் மிகு வய மொய்ம்பின்
வரை அகலத்தவனை____வானவன் மகள்
மாண் எழில் மலர் உண்கண்
மட மொழியவர் ____உடன் சுற்றி, 60
கடி சுனையுள் குளித்து ஆடுநரும்,
அறை அணிந்த அருஞ் சுனையான்
நற உண் வண்டாய் நரம்பு உளர்நரும்,
சிகை மயிலாய்த் தோகை விரித்து ஆடுநரும்;
கோகுலமாய்க் கூவுநரும், 65
ஆகுலம் ஆகுநரும்____
குறிஞ்சிக் குன்றவர் மறம் கெழு வள்ளி தமர்
வித்தகத் தும்பை விளைத்தலான், வென் வேலாற்கு
ஒத்தன்று, தண் பரங்குன்று.
வாழ்த்தி வேண்டல்
கடுஞ் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல் 70
அடும் போராள! நின் குன்றின்மிசை
ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும்,
பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்,
வல்லாரை வல்லார் செறுப்பவும்,
அல்லாரை அல்லார் செறுப்பவும், ஓர் சொல்லாய், 75
செம்மைப் புதுப் புனற்
தடாகம் ஏற்ற தண் சுனைப் பாங்கர்,
படாகை நின்றன்று;
மேஎ எகினவை;
வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை; 80
கற்பு இணை நெறியூடு அற்பு இணைக் கிழமை
நயத் தகு மரபின் வியத் தகு குமர!
வாழ்த்தினேம் பரவுதும், தாழ்த்துத் தலை, நினை யாம்____
நயத்தலின் சிறந்த எம் அடியுறை,
பயத்தலின் சிறக்க, நாள்தொறும் பொலிந்தே. 85

7. வையை
(தலைமகன் தலைமகளோடு புனல் ஆடினான் எனக் கேட்டு இன்புற்ற செவிலித்தாய், தோழியை,'நீங்கள் ஆடிய புனலணி இன்பம் கூறுக என்றாட்கு, அப் புனலாணி இன்பமும், பல்வேறு வகைப்பட்டஇன்பமும், தலைமகன் காதன்மையும், கூறி, 'என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக, யாம்' என்றது.)
பாடியவர் :: மையோடக் கோவனார்இசையமைத்தவர் :: பித்தாமத்தர்பண் :: பாலையாழ் 

வையைப் புனலின் வருகை
திரை இரும் பனிப் பௌவம் செவ்விதா அற முகந்து,உர உரும் உடன்று ஆர்ப்ப, ஊர் பொறை கொள்ளாது,கரை உடை குளமெனக் கழன்று, வான் வயிறு அழிபு,வரைவரை தொடித்த வயங்கு வெள் அருவி--இரவு இருள் பகலாக, இடம் அரிது செலவு என்னாது, 5
வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளியநிலன் உற நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்ன--பெயலான் பொலிந்து, பெரும் புனல் பல நந்த,நலன் நந்த நாடு அணி நந்தப் புலன் நந்தவந்தன்று, வையைப் புனல். 10
புனலின் செயல்
நளி இருஞ் சோலை நரந்தம் தாஅய்,ஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு,துளியின் உழந்த தோய்வு அருஞ் சிமைதொறும்வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு,உய்ர்ந்துழி உள்ளன பயம்பிடைப் பரப்பி; 15
உழவர் களி தூங்க, முழவு பணை முரல,ஆடல் அறியா அரிவை போலவும்,ஊடல் அறியா உவகையள் போலவும்,வேண்டு வழி நடந்து, தாங்கு தடை பொருது;விதி ஆற்றான் ஆக்கிய மெய்க் கலவை போலப் 20
பொது நாற்றம் உள்உள் கரந்து, புது நாற்றம்செய்கின்றே, செம் பூம் புனல்.
வெள்ளப் பெருக்கைக் கண்ட மக்களின் செயல்
'கவிழ்ந்த புனலின் கயம் தண் கழுநீர்அவிழ்ந்த மலர் மீதுற்றென, ஒருசார்;மாதர் மடநல்லார், மணலின் எழுதிய 25
பாவை சிதைத்தது' என அழ, ஒருசார்;'அகவயல் இள நெல் அரிகால் சூடுதொகு புனல் பரந்தெனத் துடி பட, ஒருசார்;'ஓதம் சுற்றியது ஊர்' என, ஒருசார்;'கார் தூம்பு அற்றது வான்' என, ஒருசார்; 30
'பாடுவார் பாக்கம் கொண்டென,ஆடுவார் சேரி அடைந்தென,கழனி வந்து கால் கோத்தென,பழன வாளை பாளை உண்டென,வித்து இடு புலம் மேடு ஆயிற்றென, 35
உணர்த்த உணரா ஒள் இழை மாதரைப்புணர்த்திய இச்சத்துப் பெருக்கத்தின் துனைந்து,சினை வளர் வாளையின் கிளையொடு கெழீஇ,பழன உழவர், பாய் புனல் பரத்தந்து,
வையைப் புனலின் வனப்பு
இறு வரை புரையுமாறு இரு கரை ஏமத்து, 40
வரை புரை உருவின் நுரை பல சுமந்து,பூ வேய்ந்து, பொழில் பரந்து;துனைந்து ஆடுவார் ஆய் கோதையர்,அலர் தண் தாரவர், காதில்தளிர் செரீஇ, கண்ணி பறித்து; 45
கை வளை, ஆழி, தொய்யகம், புனை துகில்,மேகலை, காஞ்சி, வாகுவலயம்,எல்லம் கவரும் இயல்பிற்றாய்: தென்னவன்ஒன்னார் உடை புலம் புக்கற்றால்---மாறு அட்டதானையான் வையை வனப்பு. 50
தோழி புனலணி இன்பம் கூறுதல்
புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள்துரந்து புனல் தூவ, தூ மலர்க் கண்கள்அமைந்தன; ஆங்கண், அவருள் ஒருத்தி,கை புதைஇய வளைஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள் 55
போக்கிச் சிறைப்பிடித்தாள்; ஓர் பொன் அம் கொம்புபரிந்து அவளைக் கைப் பிணை நீக்குவான் பாய்வாள்;இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால்செம்மைப் புதுப் புனல் சென்று இருளாயிற்றே;வையைப் பெருக்கு வடிவு. 60
தோழி தலைமகன் காதன்மை கூறுதல்
விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர,சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல்;பேர் மகிழ் செய்யும் பெரு நறாப் பேணியவே,கூர் நறா ஆர்ந்தவள் கண்.கண் இயல் கண்டு ஏத்தி, காரிகை நீர் நோக்கினைப் 65
பாண் ஆதரித்துப் பல பாட; அப் பாட்டுப்பேணாது ஒருத்தி பேதுற; ஆயிடை,'என்னை வருவது எனக்கு?' என்று, இனையா,நன் ஞெமர் மார்பன் நடுக்குற, நண்ணி;சிகை கிடந்த ஊடலின் செங் கண் சேப்பு ஊர, 70
வகை தொடர்ந்த ஆடலுள் நல்லவர் தம்முள்பகை தொடர்ந்து, கோதை பரியூஉ, நனி வெகுண்டு,யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன்சேறு ஆடு மேனி திருநிலத்து உய்ப்ப, சிரம் மிதித்து,தீர்விலதாகச் செருவுற்றாள்___ செம் புனல் 75
ஊருடன் ஆடுங்கடை.
தோழி வையையின் நீரணியின்பம் குறித்துக் கூறுதல்
புரி நரம்பு இன் கொளைப் புகல் பாலை ஏழும்எழூஉப் புணர் யாழும், இசையும், கூட;குழல் அளந்து நிற்ப; முழவு எழுந்து ஆர்ப்ப;மன் மகளிர், சென்னியர், ஆடல் தொடங்க; 80
பொருது இழிவார் புனல் பொற்பு-அதுஉரும் இடி சேர்ந்த முழக்கம் புரையும்திருமருதமுன்துறை சேர் புனற்கண் துய்ப்பார்தாமம் தலை புனை பேஎம் நீர் வையை!நின் பயம் பாடி விடிவுற்று ஏமாக்க--- 85
நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்தெனவே. 

கடவுள் வாழ்த்து
8. செவ்வேள்
பாடியவர் :: நல்லந்துவனார்இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்பண் :: பாலையாழ் 

திருப்பரங்குன்றத்தின் அமைப்பும் சிறப்பும்
மண்மிசை---அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்புள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும்,மலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றிஉலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும்,மருந்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும், 5
ஆதிரை முதல்வனின் கிளந்தநாதர் பன்னொருவரும், நன் திசை காப்போரும்,யாவரும், பிறரும், அமரரும், அவுணரும்,மேஅரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்---பற்றாகின்று, நின் காரணமாக; 10
பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்.இமயக் குன்றினில் சிறந்துநின் ஈன்ற நிரை இதழ்த் தாமரைமின் ஈன்ற விளங்கு இணர் ஊழாஒருநிலைப் பொய்கையோடு ஒக்கும்--- நின் குன்றின் 15
அருவி தாழ் மாலைச் சுனை.முதல்வ! நின் யானை முழக்கம் கேட்டகதியிற்றே காரின் குரல்.குரல் கேட்ட கோழி குன்று அதிரக் கூவ,மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப, 20
எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு, மலை முழை.
குன்றத்திற்கும் கூடாக்கும் இடையிலுள்ள வழி
ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்து அன்ன, இனம்வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப, சுனை மலர,கொன்றை கொடி இணர் ஊழ்ப்ப, கொடி மலர்மன்றல மலர, மலர் காந்தள் வாய் நாற, 25
நன்று அவிழ் பல் மலர் நாற, நறை பனிப்ப,தென்றல் அசைவரூஉம் செம்மற்றே-- அம்ம! நின்குன்றத்தான் கூடல் வரவு.
குன்றத்தின் முழக்கம்
குன்றம் உடைத்த ஒளிர் வேலோய்! கூடல்மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ, 30
காலொடு மயங்கிய கலிழ் கடலென,மால் கடல் குடிக்கும் மழைக் குரலென,ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உருமென,மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் --நின்குன்றம் குமுறிய உரை. 35
தலைமகன் தலைமகட்குக் குன்றத்தின் சிறப்புக் கூறுதல்
'தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர்காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று;வடு வகிர் வென்ற கண், மாந் தளிர் மேனி,நெடு மென் பணைத் தோள், குறுந் தொடி, மகளிர்ஆராக் காமம், ஆர் பொழிற் பாயல், 40
வரையகத்து, இயைக்கும் வரையா நுகர்ச்சி;முடியா நுகர்ச்சி முற்றாக் காதல்,அடியோர் மைந்தர் அகலத்து அகலாஅலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி,புலரா மகிழ்; மறப்பு அறியாது நல்கும் 45
சிறப்பிற்றே---தண் பரங்குன்று.'
தலைமகள் புலந்து உரைத்தல்
'இனி, மன்னும் ஏதிலர் நாறுதி; ஆண்டுப்பனி மலர்க் கண்ணாரோடு ஆட--நகை மலர்மாலைக்கு மாலை வரூஉம்; வரை சூள் நில்--காலைப் போய் மாலை வரவு.' 50
தலைமகன் சூளும் தலைவி விலகலும்'இனி மணல் வையை இரும் பொழிலும், குன்றப்பனி பொழி சாரலும், பார்ப்பாரும்;....துனியல், மலருண்கண்! சொல் வேறு; நாற்றம்கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது;துனியல் நனி 'நீ நின் சூள்.' 55
தோழி தலைமகனைச் சூள் விலகக்கூறுதல்
'என் பாணி நில் நில்---எலாஅ!--பாணி நீ, நின் சூள்;சான்றாளர் ஈன்ற தகாஅத் தகாஅ மகாஅன்!--ஈன்றாட்கு ஒரு பெண், இவள்."இருள் மை ஈர் உண் கண் இலங்கு இழை ஈன்றாட்குஅரியளோ? ஆவது அறிந்திலேன்; ஈதா; 60
வரு புனல் வையை மணல் தொட்டேன்; தரு மண வேள்தண் பரங்குன்றத்து அடி தொட்டேன்" என்பாய்;கேளிர் மணலின் கெழுவும் இதுவோ?ஏழ் உலகும் ஆளி திரு வரைவேல் அன்பு அளிதோ?என்னை அருளி அருள் முருகு சூள் சூளின், 65
நின்னை அருள் இல் அணங்கான் மெய் வேல் தின்னும்;விறல் வெய்யோன் ஊர் மயில், வேல் நிழல், நோக்கி;அறவர் அடி தொடினும், ஆங்கு அவை சூளேல்;குறவன் மகள் ஆணை கூறு ஏலா! கூறேல்;ஐய! சூளின், அடி தொடு குன்றொடு 70
வையைக்குத் தக்க மணல் சீர் சூள் கூறல்!'
தலைமகனது உரை
யார் பிரிய, யார் வர, யார் வினவ, யார் செப்பு?'நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி,' நேரிழாய்!கய வாய் நெய்தல் அலர், கமழ்முகை மண நகைநயவரு நறவு இதழ், மதர் உண்கண்; வாள் நுதல்; 75
முகை முல்லை வென்று, எழில் முத்து ஏய்க்கும் வெண் பல்____நகை சான்ற கனவு அன்று; நனவு அன்று___ நவின்றதை:இடு துனி கை ஆறா என், துயர் கூரச்சுடும், இறை; ஆற்றிசின், அடி சேர்ந்து! சாற்றுமின்_____மிக ஏற்றுதும் மலர், ஊட்டுதும் அவி, 80
கேட்டுதும் பாணி; எழுதும் கிணை_____முருகன்தாள் தொழு தண் பரங்குன்று!
தோழி தலைமகளின் கற்புடைமை கூறல்
'தெரி இழாய் செல்க!' என்றாய்; எல்லா! யாம் பெற்றேம்,ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல்;பருவத்துப் பல் மாண் நீ சேறவின் காண்டை____ 85
எருமை இருத் தோட்டி எள்ளீயும் காளைசெருவம் செயற்கு என்னை முன்னை, தன் சென்னி,அருள்வயினான், தூங்கு மணி கையால் தாக்கி,நிரைவளை ஆற்று, இருஞ் சூள்,
தலைமகளிரது செய்தி
வளி பொரு சேண் சிமை வரையகத்தால் 90
தளி பெருகும் தண் சினையபொழில் கொளக் குறையா மலர,குளிர் பொய்கை அளறு நிறைய,மருதம் நளி மணல் ஞெமர்ந்தநனி மலர்ப் பெரு வழி, 95
சீறடியவர் சாறு கொள எழுந்து;வேறுபடு சாந்தமும், வீறுபடு புகையும்,ஆறு செல் வளியின் அவியா விளக்கமும்,நாறு கமழ் வீயும், கூறும் இசை முழவமும்,மணியும், கயிறும், மயிலும், குடாரியும், 100
பிணிமுகம், உளப்படப் பிறவும், ஏந்தி;அரு வரைச் சேராத் தொழுநர்,'கனவின் தொட்டது கை பிழையாகாதுநனவின் சேஎப்ப நின் நளி புனல் வையைவரு புனல் அணிக எனவரம் கொள்வோரும், 105
'கரு வயிறு உறுக எனக் கடம்படுவோரும்,'செய் பொருள் வாய்க்கா எனச் செவி சார்த்துவோரும்,'ஐ அமர் அடுக என அருச்சிப்போரும்,பாடுவார் பாணிச் சீரும், ஆடுவார் அரங்கத் தாளமும்,மஞ்சு ஆடு மலை முழக்கும், 110
துஞ்சாக் கம்பலை______பைஞ் சுனைப் பாஅய் எழு பாவையர்ஆய் இதழ் உண்கண் அலர் முகத் தாமரை,தாட் தாமரை, தோட்தமனியக் கய மலர்,எம் கைப் பதுமம், கொங்கைக் கய முகை, 115
செவ் வாய் ஆம்பல் செல் நீர்த் தாமரை,புனற் தாமரையொடு, புலம் வேறுபாடுறாக்கூர் ஏயிற்றார் குவிமுலைப் பூணொடு,மாரண் ஒப்பார் மார்பு அணி கலவி;அரிவையர் அமிர்த பானம் 120
உரிமை மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப;மைந்தர் மார்வம் வழி வந்த,செந் தளிர் மேனியார், செல்லல் தீர்ப்ப;
பரங்குன்றை வாழ்த்தல்
என ஆங்கு,உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி, 125
கடம்பு அமர் செல்வன் கடி நகர் பேண____மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த____நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்,மண் பரிய வானம் வறப்பினும், மன்னுகமா,தண் பரங்குன்றம்! நினக்கு. 130

கடவுள் வாழ்த்து
9. செவ்வேள்
பாடியவர் :: குறும்பூதனார்இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்பண் :: பாலையாழ் 
முருகவேளை வாழ்த்துதல்
இரு நிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி,அரு நிலை உயர் தெய்வத்து அணங்குசால் தலை காக்கும்,உருமுச் சூழ் சேண் சிமை___உயர்ந்தவர் உடம்பட_____எரி மலர்த் தாமரை இறை வீழ்த்த பெரு வாரிவிரி சடைப் பொறை ஊழ்த்து, விழு நிகர் மலர் ஏய்ப்ப, 5
தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரிமணி மிடற்று அண்ணற்கு, மதி ஆரல் பிறந்தோய்! நீ.மை இரு நூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று,ஐ-இருநூற்று மெய்ந் நயனத்தவன் மகள் மலர் உண்கண்,மணி மழை தலைஇயென, மா வேனில் கார் ஏற்று, 10
தணி மழை தலையின்று, தன் பரங்குன்று.
தமிழது சிறப்பிற்குக் காரணம்
நான்மறை விரித்து, நல் இசை விளக்கும்வாய்மொழிப் புலவீர்! கேண்மின், சிறந்தது;காதற் காமம், காமத்துச் சிறந்தது;விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி: 15
புலத்தலின் சிறந்தது, கற்பே; அது தான்இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடாப்பரத்தை உள்ளதுவே: பண்புறு கழறல்,தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்புறநாள் அணிந்து, உவக்கும் சுணங்கறையதுவே; 20
கேள் அணங்குற மனைக் கிளந்துள, சுணங்கறை;சுணங்கறைப் பயனும் ஊடலுள் ளதுவே.அதனால், அகறல் அறியா அணி இழை நல்லார்இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர்; இத்தள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார் 25
கொள்ளார், இக் குன்று பயன்.
வள்ளியும் முருகனும் சிறந்தவாறு
ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி, புனல் தந்தகாழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின்,கேழ் ஆரம் பொற்ப வருவானைத் தொழாஅ,'வாழிய, மாயா! நின் தவறு இலை; எம் போலும் 30
கேழ் இலார்____ மாண் நலம் உண்கோ, திரு உடையார்மென் தோள்மேல் அல்கி நல்கலம் இன்று?____வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனிப்பெய்ய உழக்கும், மழைக் கா; மற்று ஐய!'கரையா வெந் நோக்கத்தான் கை சுட்டி, பெண்டின் 35
இகலின் இகந்தாளை, அவ் வேள் தலைக் கண்ணிதிருந்து அடி தோயத் திறை கொடுப்பானை,'வருந்தல்' என, அவற்கு மார்பு அளிப்பாளை,'குறுகல்' என்று ஒள்ளிழை கோதை கோலாகஇறுகிறுக யாத்துப் புடைப்ப; 40
ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல,இருவர் வான் கிளி ஏற்பில் மழலை,செறி கொண்டைமேல் வண்டு சென்று பாய்ந்தன்றே,வெறி கொண்டான் குன்றத்து வண்டு.
வள்ளியின் பாங்கியரும் தேவசேனையின் பாங்கியரும் இகழ்தல்
தார் தார் பிணக்குவார்; கண்ணி ஓச்சித் தடுமாறுவார்; 45
மார்பு அணி கொங்கை வார் மத்திகையாப் புடைப்பார்;கோதை வரிப் பந்து கொண்டு எறிவார்____பேதை மட நோக்கம் பிறிதாக, ஊதநுடங்கு நொசி நுசுப்பார்______நூழில் தலைக்கொள்ள:கயம்படு கமழ் சென்னிக் களிற்று இயல் கைம்மாறுவார்; 50
வயம்படு பரிப் புரவி மார்க்கம் வருவார்தேர் அணி அணி கயிறு தெரிபு வருவார்வரி சிலை வளைய மார்பு உற வாங்குவார்வாளி வாளிகள் நிலைபெற மறலுவார்தோள் வளை ஆழி சுழற்றுவார்___ 55
மென் சீர் மயில் இயலவர்வாள் மிகு வய மொய்ம்பின்வரை அகலத்தவனை____வானவன் மகள்மாண் எழில் மலர் உண்கண்மட மொழியவர் ____உடன் சுற்றி, 60
கடி சுனையுள் குளித்து ஆடுநரும்,அறை அணிந்த அருஞ் சுனையான்நற உண் வண்டாய் நரம்பு உளர்நரும்,சிகை மயிலாய்த் தோகை விரித்து ஆடுநரும்;கோகுலமாய்க் கூவுநரும், 65
ஆகுலம் ஆகுநரும்____குறிஞ்சிக் குன்றவர் மறம் கெழு வள்ளி தமர்வித்தகத் தும்பை விளைத்தலான், வென் வேலாற்குஒத்தன்று, தண் பரங்குன்று.
வாழ்த்தி வேண்டல்
கடுஞ் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல் 70
அடும் போராள! நின் குன்றின்மிசைஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும்,பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்,வல்லாரை வல்லார் செறுப்பவும்,அல்லாரை அல்லார் செறுப்பவும், ஓர் சொல்லாய், 75
செம்மைப் புதுப் புனற்தடாகம் ஏற்ற தண் சுனைப் பாங்கர்,படாகை நின்றன்று;மேஎ எகினவை;வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை; 80
கற்பு இணை நெறியூடு அற்பு இணைக் கிழமைநயத் தகு மரபின் வியத் தகு குமர!வாழ்த்தினேம் பரவுதும், தாழ்த்துத் தலை, நினை யாம்____நயத்தலின் சிறந்த எம் அடியுறை,பயத்தலின் சிறக்க, நாள்தொறும் பொலிந்தே. 85

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.