LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

பரிபாடல்-6

 

16. வையை
(காதற் பரத்தையுடன் புனல் ஆடிய தலைமகன் தோழியை வாயில் வேண்ட, அவள் புனல் ஆடியவாறு
கூறி, வாயில் மறுத்தது.)
பாடியவர் :: நல்வழிசியார்
இசையமைத்தவர் :: நல்லச்சுதனார்
பண் :: நோதிறம் 
வையையில் நீர் வரவு
கரையே--கை வண் தோன்றல் ஈகை போன்ம் என,
மை படு சிலம்பின் கறியொடும், சாந்தொடும்,
நெய் குடை தயிரின் நுரையொடும், பிறவொடும்,
எவ் வயினானும்--மீதுமீது அழியும்.
துறையே--முத்து நேர்பு புணர் காழ், மத்தக நித்திலம், 5
பொலம் புனை அவிர் இழை, கலங்கல் அம் புனல் மணி
வலம் சுழி உந்திய, திணை பிரி புதல்வர்
கயந் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ,
தம்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும்
தத்து அரிக் கண்ணார் தலைத்தலை வருமே. 10
செறுவே--விடு மலர் சுமந்து, பூ நீர் நிறைதலின்,
படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும்,
களி நாள் அரங்கின் அணி நலம் புரையும்.
காவே--சுரும்பு இமிர் தாதொடு தலைத்தலை மிகூஉம்
நரந்த நறு மலர் நன்கு அளிக்கும்மே-- 15
கரைபு ஒழுகு தீம் புனற்கு எதிர் விருந்து அயர்வ போல்.
கான்-அலம் காவும், கயமுன், துருத்தியும், தேன்
தேன் உண்டு பாடத் திசைதிசைப் பூ நலம்
பூத்தன்று--வையை வரவு.
தலைவன் காதற் பரத்தையுடன் கூடி மகிழ, வையையின் வரவு வாய்த்தல்
கருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து, 20
குரும்பையின் முலைப் பட்ட பூ நீர் துடையாள்,
பெருந் தகை மீளி வருவானைக் கண்டே,
இருந் துகில் தானையின் ஒற்றி, 'பொருந்தலை;
பூத்தனள்; நீங்கு' எனப் பொய் ஆற்றால், தோழியர்--
தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின் 25
நாற்றத்தின் போற்றி, நகையொடும் போத்தந்து,
இருங் கடற்கு ஊங்கு இவரும் யாறு எனத் தங்கான்,
மகிழ, களிப் பட்ட தேன் தேறல் மாற்றி,
குருதி துடையாக் குறுகி, மரு(வ), இனியர்,
'பூத்தனள் நங்கை; பொலிக!' எனநாணுதல் 30
வாய்த்தன்றால்--வையை வரவு.
வையை வானக் கங்கையை ஒத்து விளங்குதல்
மலையின் இழி அருவி மல்கு இணர்ச் சார்ச் சார்க்
கரை மரம் சேர்ந்து கவினி; மடவார்
நனை சேர் கதுப்பினுள் தண் போது, மைந்தர்
மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ், தா அய்; 35
மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய
வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல், எஞ்ஞான்றும்,
தேன் இமிர் வையைக்கு இயல்பு.
வையைக்கு உரிய இயல்பு
கள்ளே புனலே புலவி இம் மூன்றினும்,
ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண் கண் கெண்டை, 40
பல் வரி வண்டினம் வாய் சூழ் கவினொடும்,
வெல் நீர் வீவயின் தேன் சோர, பல் நீர்
அடுத்துஅடுத்து ஆடுவார்ப் புல்ல, குழைந்து
வடுப் படு மான்மதச் சாந்து ஆர் அகலத்தான்,
எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்கத் 45
தொடுத்த தேன் சோரும் வரை போலும், தோற்றம்--
கொடித் தேரான் வையைக்கு இயல்பு.
தோழி வையையை நோக்கிக் கூறுவாளாய் வாயில் மறுத்தல்
வரை ஆர்க்கும் புயல்; கரை
திரை ஆர்க்கும், இத் தீம் புனல்;
கண்ணியர் தாரர், கமழ் நறுங் கோதையர், 50
பண்ணிய ஈகைப் பயன் கொள்வான், ஆடலால்
நாள் நாள், உறையும், நறுஞ் சாந்தும், கோதையும்,
பூத்த புகையும், அவியும் புலராமை
மறாஅற்க, வானம்; மலிதந்து நீத்தம்
வறாஅற்க, வைகை! நினக்கு. 55
17. செவ்வேள்
பாடியவர் :: நல்லழிசியார்
இசையமைத்தவர் :: நல்லச்சுதனார்
பண் :: நோதிறம் 
கடவுள் வாழ்த்து
மாலைதோறும் பரங்குன்றைப் பரவி உறைபவர்
தேம் படு மலர், குழை, பூந் துகில், வடி மணி,
ஏந்து இலை சுமந்து; சாந்தம் விரைஇ,
விடை அரை அசைத்த, வேலன், கடிமரம்
பரவினர் உரையொடு பண்ணிய இசையினர்,
விரிமலர் மதுவின் மரன் நனை குன்றத்து-- 5
கோல் எரி, கொளை, நறை, புகை, கொடி, ஒருங்கு எழ--
மாலை மாலை, அடி உறை, இயைநர்,
மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்?
மாறுமாறு எழும் பல்வேறு ஓசைகளை உடையது பரங்குன்றம்
ஒருதிறம், பாணர் யாழின் தீங் குரல் எழ,
ஒருதிறம், யாணர் வண்டின் இமிர் இசை எழ, 10
ஒருதிறம், கண் ஆர் குழலின் கரைபு எழ,
ஒருதிறம், பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத,
ஒருதிறம், மண் ஆர் முழவின் இசை எழ,
ஒருதிறம், அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப,
ஒருதிறம், பாடல் நல் விறலியர் ஒல்குபு நுடங்க, 15
ஒருதிறம், வாடை உளர்வயின் பூங் கொடி நுடங்க,
ஒருதிறம், பாடினி முரலும் பாலை அம் குரலின்
நீடுகிளர் கிழமை நிறை குறை தோன்ற,
ஒருதிறம், ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற,
மாறுமாறு உற்றன் போல் மாறு எதிர் கோடல்-- 20
மாறு அட்டான் குன்றம்--உடைத்து.
பரங்குன்றிற்கும் கூடாக்கும் இடைப்பட்ட நிலம்
பாடல் சான்று பல் புகழ் முற்றிய
கூடலொடு பரங்குன்றின் இடை,
கமழ் நறுஞ் சாந்தின் அவர்அவர் திளைப்ப,
நணிநணித்து ஆயினும், சேஎய்ச் சேய்த்து; 25
மகிழ் மிகு தேஎம் கோதையர் கூந்தல் குஞ்சியின்
சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று.
வசை நீங்கிய வாய்மையால், வேள்வியால்,
திசை நாறிய குன்று அமர்ந்து, ஆண்டுஆண்டு
ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை 30
வாய்வாய் மீ போய், உம்பர் இமைபு இறப்ப;
தேயா மண்டிலம் காணுமாறு இன்று.
பரங்குன்றின் அலங்காரம்
வளை முன் கை வணங்கு இறையார்,
அணை மென் தோள் அசைபு ஒத்தார்
தார் மார்பின் தகை இயலார், 35
ஈர மாலை இயல் அணியார்,
மனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட,
சுனை மலர்த் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா;
அனைய, பரங்குன்றின் அணி.
தெய்வ விழவும் விருந்தயர்வும்
கீழோர் வயல் பரக்கும், வார் வெள் அருவி பரந்து ஆனாது ஆரோ; 40
மேலோர் இயங்குதலால், வீழ் மணி நீலம் செறு உழக்கும் அரோ;
தெய்வ விழவும், திருந்து விருந்து அயர்வும்,
அவ் வெள் அருவி அணி பரங் குன்றிற்கும்,
தொய்யா விழுச் சீர் வளம் கெழு வையைக்கும்,
கொய் உளை மான் தேர்க் கொடித்தேரான் கூடற்கும், 45
கை ஊழ் தடுமாற்றம் நன்று.
முருகனை எதிர் முகமாக்கி வாழ்த்துதல்
என ஆங்கு,
மணி நிற மஞ்ஞை ஓங்கிய புட் கொடி,
பிணிமுகம் ஊர்ந்த வெல் போர், இறைவ!
பணி ஒரீஇ, நின் புகழ் ஏத்தி, 50
அணி நெடிங் குன்றம் பாடுதும்; தொழுதும்;
அவை யாமும் எம் சுற்றமும் பரவுதும்--
ஏம வைகல் பெறுக, யாம் எனவே. 53
18. செவ்வேள்
பாடியவர் :: குன்றம்பூதனார்
இசையமைத்தவர் :: நல்லச்சுதனார்
பண் :: காந்தாரம் 
கடவுள் வாழ்த்து
இமயத்தொடு நிகர்க்கும் குன்று
போர் எதிர்ந்து ஏற்றார் மதுகை மதம் தப,
கார் எதிர்ந்து ஏற்ற கமஞ் சூல் எழிலிபோல்,
நீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து,
சூர், நிரந்து சுற்றிய, மா தபுத்த வேலோய்! நின்
சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர் நிரந்து, 5
ஏறுமாறு ஏற்கும் இக் குன்று.
தலைமகன் ஊடல் உணர்ப்பிக்கும் திறம்
ஒள் ஒளி மணிப் பொறி ஆல் மஞ்ஞை நோக்கித் தன்
உள்ளத்து நினைப்பானைக் கண்டனள், திரு நுதலும்:
'உள்ளியது உணர்ந்தேன்; அது உரை இனி, நீ எம்மை
எள்ளுதல் மறைத்தல் ஓம்பு' என்பாளைப் பெயர்த்து, அவன், 10
'காதலாய்! நின் இயல் களவு எண்ணிக் களி மகிழ்
பேதுற்ற இதலைக் கண்டு, யான் நோக்க, நீ எம்மை
ஏதிலா நோக்குதி' என்று, ஆங்கு உணர்ப்பித்தல்
ஆய் தேரான் குன்ற இயல்பு.
பாணனுக்குத் தலைமகனது பரத்தைமை பற்றிக் கூறும் தலைமகளின் கூற்று
ஐ வளம் பூத்த அணி திகழ் குன்றின்மேல், 15
மை வளம் பூத்த மலர் ஏர் மழைக் கண்ணார்,
கை வளம் பூத்த வடு வொடு, காணாய் நீ?
மொய் வளம் பூத்த முயக்கம், யாம் கைப்படுத்தேம்:
மெய் வளம் பூத்த விழை தகு பொன் அணி--
நை வளம் பூத்த நரம்பு இயை சீர்ப் பொய் வளம் 20
பூத்தன--பாணா! நின் பாட்டு.
பரங்குன்றத்திலுள்ள அம்பலம்
தண் தளிர் தருப் படுத்து, எடுத்து உரைஇ,
மங்குல் மழை முழங்கிய விறல் வரையால்,
கண் பொருபு சுடர்ந்து, அடர்ந்து, இடந்து,
இருள் போழும் கொடி மின்னால்-- 25
வெண் சுடர் வேல் வேள்! விரை மயில் வேல் ஞாயிறு!--நின்
ஒண் சுடர் ஓடைக் களிறு ஏய்க்கும் நின் குன்றத்து,
எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர்.
குன்றத்துக் காட்சிகள்
ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி-- 30
சூர் ததும்பும் வரைய காவால்,
கார் ததும்பு நீர் ததும்புவன சுனை,
ஏர் ததும்புவன பூ அணி செறிவு,
போர் தோற்றுக் கட்டுண்டார் கை போல்வ--கார் தோற்றும்
காந்தள், செறிந்த கவின், 35
கவின் முகை, கட்டு அவிழ்ப்ப, தும்பி; கட்டு யாழின்
புரி நெகிழ்ப்பார் போன்றன கை.
அச்சிரக்கால் ஆர்த்து--அணி மழை--கோலின்றே,
வச்சிரத்தான் வானவில்லு.
குன்றத்தின் சிறப்பு
வில்லுச் சொரி பகழியின், மென் மலர் தாயின-- 40
வல்லுப் போர் வல்லாய்! மலைமேல் மரம்.
வட்டு உருட்டு வல்லாய்! மலைய--நெட்டுருட்டுச்
சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து,
போர் ததும்பும் அரவம் போல்,
கருவி ஆர்ப்ப, கருவி நின்றன--குன்றம். 45
அருவி ஆர்ப்ப, முத்து அணிந்தன, வரை;
குருவி ஆர்ப்ப, குரல் குவிந்தன, தினை;
எருவை கோப்ப, எழில் அணி திருவில்
வானில் அணித்த, வரி ஊதும் பல் மலரால்,
கூனி வளைத்த--சுனை, 50
முருகவேளை வாழ்த்துதல்
புரி உறு நரம்பும் இயலும் புணர்ந்து,
சுருதியும் பூவும் சுடரும் கூடி,
எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும்,
செரு வேற் தானைச் செல்வ! நின் அடி உறை,
உரிதினின் உறை பதிச் சேர்ந்தாங்கு, 55
பிரியாது இருக்க--எம் சுற்றமோடு உடனே!
19. செவ்வேள்
பாடியவர் :: நப்பண்ணனார்
இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்
பண் :: காந்தாரம் 
கடவுள் வாழ்த்து
வள்ளியை முருகன் வதுவை கொண்டது
நில வரை அழுவத்தான் வான் உறை புகல் தந்து,
புல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து,
'அரு முனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன்
இரு நிலத்தோரும் இயைக!' என, ஈத்த நின்
தண் பரங்குன்றத்து, இயல் அணி, நின் மருங்கு 5
சாறு கொள் துறக்கத்தவளொடு
மாறு கொள்வது போலும், மயிற்கொடி வதுவை.
கூடலார் பரங்குன்றை நோக்கி விடியலில் யாத்திரை செய்கின்ற வழி
புலத்தினும் போரினும் போர் தோலாக் கூடல்,
கலப்போடு இயைந்த இரவுத் தீர் எல்லை,
அறம் பெரிது ஆற்றி, அதன் பயன் கொண்மார், 10
சிறந்தோர் உலகம் படருநர் போல,
உரி மாண் புனை கலம் ஒண் துகில் தாங்கி,
புரி மாண் புரவியர், போக்கு அமை தேரர்,
தெரி மலர்த் தாரர், தெரு இருள் சீப்ப, நின்
குன்றொடு கூடல் இடையெல்லாம் ஒன்றுபு-- 15
நேர் பூ நிறை பெய்து இரு நிலம் பூட்டிய
தார் போலும், மாலைத் தலை நிறையால்--தண் மணல்
ஆர் வேலை யாத்திரை செல் யாறு.
பாண்டியன் தன் பரிவாரங்களுடன் பரங்குன்றை வலம் வரும் காட்சி
சுடரொடு சூழ்வரு தாரகை மேருப்
புடை வரு சூழல்--புலம் மாண் வழுதி 20
மட மயில் ஓரும் மனையவரோடும்,
கடன் அறி காரியக் கண்ணவரோடும்--நின்
சூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல்
பாடு வலம் திரி பண்பின்-- பழ மதிச்
சூடி அசையும் சுவல்மிசைத் தானையின், 25
பாடிய நாவின், பரந்த உவகையின்,
நாடும் நகரும் அடைய அடைந்தனைத்தே,
படு மணி யானை நெடியாய்! நீ மேய
கடி நகர் சூழ் நுவலுங்கால்.
குன்றின் கீழுள்ள இடை நிலம் பாசறையை ஒத்து விளங்கியமை
தும்பி தொடர் கதுப்ப தும்பி தொடர் ஆட்டி, 30
வம்பு அணி பூங் கயிறு வாங்கி, மரன் அசைப்பார்--
வண் தார்ப் புரவி வழி நீங்க வாங்குவார்;
திண் தேர் வழியின் செல நிறுப்பார்--கண்டக்
கரும்பு கவழம் மடுப்பார்; நிரந்து
பரி நிமிர் தானையான் பாசறை நீர்த்தே, 35
குருகு எறி வேலோய்! நின் குன்றக் கீழ் நின்ற
இடை நிலம்: யாம் ஏத்தும் ஆறு!
மலைச் சிறப்பு - வழுதியுடன் ஏறியோர் கண்டவை
குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும்,
கரும்பு கருமுகக் கணக்கு அளிப்போரும்,
தெய்வப் பிரமம் செய்குவோரும், 40
கை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும்,
யாழின் இளி குரல் சமம் கொள்வோரும்,
வேள்லியின் அழகு இயல் விளம்புவோரும்;
கூர நாண் குரல் கொம்மென ஒலிப்ப,
ஊழ் உறமுரசின் ஒலி செய்வோரும்; 45
என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி
ஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும்;
'இரதி காமன், இவள் இவன்' எனாஅ,
விரகியர் வினவ, வினா இறுப்போரும்;
'இந்திரன், பூசை; இவள் அகலிகை; இவன் 50
சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது' என்று உரை செய்வோரும்:
இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்,
துன்னுநர் சுட்டவும், சுட்டு அறிவுறுத்தவும்,
நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்கச் 55
சோபன நிலையது--துணி பரங்குன்றத்து
மாஅல் முருகன் மாட மருங்கு.
குன்றில் சுற்றத்தாரை விட்டுப் பிரிந்த சிறுமி
பிறந்த தமரின் பெயர்ந்து, ஒரு பேதை,
பிறங்கல் இடைஇடைப் புக்குப் பிறழ்ந்து, 'யான்
வந்த நெறியும் மறந்தேன்; சிறந்தவர் 60
ஏஎ, ஓஒ!' என விளி ஏற்பிக்க,
'ஏஎ, ஓஒ' என்று ஏலா அவ் விளி
அவ் இசை முழை ஏற்று அழைப்ப, அழைத்துழிச்
செல்குவள் ஆங்குத் தமர்க் காணாமை
மீட்சியும், கூஉக் கூஉ மேவும் மடமைத்தே-- 65
வாழ்த்து உவப்பான் குன்றின் வகை.
இள மகளிரின் மருட்சி
நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர்ச்
சினை போழ் பல்லவன் தீம் சுனை உதிர்ப்ப,
உதிர்த்த சுனையின் எடுத்த தலைய
அலர் முகிழ் உற, அவை கிடப்ப, 70
'தெரி மலர், நனை, உறுவ,
ஐந் தலை அவிர் பொறி அரவம்; மூத்த
மைந்தன்; அருகு ஒன்று மற்று-இளம் பார்ப்பு' என
ஆங்கு இள மகளிர் மருள-- பாங்கர்,
குன்றம் விடியல் வானம் போலப் பொலிதல்
பசும்பிடி இள முகிழ், நெகிழ்ந்த வாய் ஆம்பல், 75
கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள்,
எருவை நறுந் தோடு, எரி இணர் வேங்கை,
உருவம் மிகு தோன்றி, ஊழ் இணர் நறவம்,
பருவம் இல் கோங்கம், பகை மலர் இலவம்;
நிணந்தவை, கோத்தவை, நெய்தவை, தூக்க 80
மணந்தவை, போல, வரை மலை எல்லாம்
நிறைந்தும், உறழ்ந்தும், நிமிர்ந்தும், தொடர்ந்தும்;
விடியல் வியல் வானம் போலப் பொலியும்--
நெடியாய்! நின் குன்றின்மிசை.
கன்னிமை கனிந்தாரும் மணமான மகளிரும்
தாம் செய்யும் பூசையில் யானையின் மிச்சிலை உண்ணுதல்
நின யானைச் சென்னி நிறம் குங்குமத் தால் 85
புனையா, பூ நீர் ஊட்டி, புனை கவரி சார்த்தா.
பொற் பவழப் பூங் காம்பின் பொற்குடை ஏற்றி,
மலிவுடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள்,
பல் மணம் மன்னு பின் இருங் கூந்தலர்,
கன்னிமை கனிந்த காலத்தார், நின் 90
கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில்--
மறு அற்ற மைந்தர் தோள் எய்தார்; மணந்தார்
முறுவல் தலையளி எய்தார்--நின் குன்றம்
குறுகிச் சிறப்பு உணாக்கால்.
முருகப் பெருமானை வாழ்த்துதல்
குறப் பிணாக் கொடியைக் கூடியோய்! வாழ்த்துச் 95
சிறப்பு உணாக் கேட்டி செவி.
உடையும் ஒலியலும் செய்யை; மற்று ஆங்கே
படையும் பவழக் கொடி நிறம் கொள்ளும்;
உருவும் உருவத் தீ ஒத்தி; முகனும்
விரி கதிர் முற்றா விரி சுடர் ஒத்தி; 100
எவ்வத்து ஒவ்வா மா முதல் தடிந்து,
தெவ்வுக் குன்றத்துத் திருந்து வேல் அழுத்தி,
அவ் வரை உடைத்தோய்! நீ இவ் வரை மருங்கில்
கடம்பு அமர் அணி நிலை பகர்ந்தேம்;
உடங்கு அமர் ஆயமொடு ஏத்தினம், தொழுதே! 105

16. வையை
(காதற் பரத்தையுடன் புனல் ஆடிய தலைமகன் தோழியை வாயில் வேண்ட, அவள் புனல் ஆடியவாறுகூறி, வாயில் மறுத்தது.)
பாடியவர் :: நல்வழிசியார்இசையமைத்தவர் :: நல்லச்சுதனார்பண் :: நோதிறம் 

வையையில் நீர் வரவு
கரையே--கை வண் தோன்றல் ஈகை போன்ம் என,மை படு சிலம்பின் கறியொடும், சாந்தொடும்,நெய் குடை தயிரின் நுரையொடும், பிறவொடும்,எவ் வயினானும்--மீதுமீது அழியும்.துறையே--முத்து நேர்பு புணர் காழ், மத்தக நித்திலம், 5
பொலம் புனை அவிர் இழை, கலங்கல் அம் புனல் மணிவலம் சுழி உந்திய, திணை பிரி புதல்வர்கயந் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ,தம்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும்தத்து அரிக் கண்ணார் தலைத்தலை வருமே. 10
செறுவே--விடு மலர் சுமந்து, பூ நீர் நிறைதலின்,படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும்,களி நாள் அரங்கின் அணி நலம் புரையும்.காவே--சுரும்பு இமிர் தாதொடு தலைத்தலை மிகூஉம்நரந்த நறு மலர் நன்கு அளிக்கும்மே-- 15
கரைபு ஒழுகு தீம் புனற்கு எதிர் விருந்து அயர்வ போல்.கான்-அலம் காவும், கயமுன், துருத்தியும், தேன்தேன் உண்டு பாடத் திசைதிசைப் பூ நலம்பூத்தன்று--வையை வரவு.
தலைவன் காதற் பரத்தையுடன் கூடி மகிழ, வையையின் வரவு வாய்த்தல்
கருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து, 20
குரும்பையின் முலைப் பட்ட பூ நீர் துடையாள்,பெருந் தகை மீளி வருவானைக் கண்டே,இருந் துகில் தானையின் ஒற்றி, 'பொருந்தலை;பூத்தனள்; நீங்கு' எனப் பொய் ஆற்றால், தோழியர்--தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின் 25
நாற்றத்தின் போற்றி, நகையொடும் போத்தந்து,இருங் கடற்கு ஊங்கு இவரும் யாறு எனத் தங்கான்,மகிழ, களிப் பட்ட தேன் தேறல் மாற்றி,குருதி துடையாக் குறுகி, மரு(வ), இனியர்,'பூத்தனள் நங்கை; பொலிக!' எனநாணுதல் 30
வாய்த்தன்றால்--வையை வரவு.
வையை வானக் கங்கையை ஒத்து விளங்குதல்மலையின் இழி அருவி மல்கு இணர்ச் சார்ச் சார்க்கரை மரம் சேர்ந்து கவினி; மடவார்நனை சேர் கதுப்பினுள் தண் போது, மைந்தர்மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ், தா அய்; 35
மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்தியவானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல், எஞ்ஞான்றும்,தேன் இமிர் வையைக்கு இயல்பு.
வையைக்கு உரிய இயல்பு
கள்ளே புனலே புலவி இம் மூன்றினும்,ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண் கண் கெண்டை, 40
பல் வரி வண்டினம் வாய் சூழ் கவினொடும்,வெல் நீர் வீவயின் தேன் சோர, பல் நீர்அடுத்துஅடுத்து ஆடுவார்ப் புல்ல, குழைந்துவடுப் படு மான்மதச் சாந்து ஆர் அகலத்தான்,எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்கத் 45
தொடுத்த தேன் சோரும் வரை போலும், தோற்றம்--கொடித் தேரான் வையைக்கு இயல்பு.
தோழி வையையை நோக்கிக் கூறுவாளாய் வாயில் மறுத்தல்
வரை ஆர்க்கும் புயல்; கரைதிரை ஆர்க்கும், இத் தீம் புனல்;கண்ணியர் தாரர், கமழ் நறுங் கோதையர், 50
பண்ணிய ஈகைப் பயன் கொள்வான், ஆடலால்நாள் நாள், உறையும், நறுஞ் சாந்தும், கோதையும்,பூத்த புகையும், அவியும் புலராமைமறாஅற்க, வானம்; மலிதந்து நீத்தம்வறாஅற்க, வைகை! நினக்கு. 55

17. செவ்வேள்
பாடியவர் :: நல்லழிசியார்இசையமைத்தவர் :: நல்லச்சுதனார்பண் :: நோதிறம் 
கடவுள் வாழ்த்து
மாலைதோறும் பரங்குன்றைப் பரவி உறைபவர்
தேம் படு மலர், குழை, பூந் துகில், வடி மணி,ஏந்து இலை சுமந்து; சாந்தம் விரைஇ,விடை அரை அசைத்த, வேலன், கடிமரம்பரவினர் உரையொடு பண்ணிய இசையினர்,விரிமலர் மதுவின் மரன் நனை குன்றத்து-- 5
கோல் எரி, கொளை, நறை, புகை, கொடி, ஒருங்கு எழ--மாலை மாலை, அடி உறை, இயைநர்,மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்?
மாறுமாறு எழும் பல்வேறு ஓசைகளை உடையது பரங்குன்றம்
ஒருதிறம், பாணர் யாழின் தீங் குரல் எழ,ஒருதிறம், யாணர் வண்டின் இமிர் இசை எழ, 10
ஒருதிறம், கண் ஆர் குழலின் கரைபு எழ,ஒருதிறம், பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத,ஒருதிறம், மண் ஆர் முழவின் இசை எழ,ஒருதிறம், அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப,ஒருதிறம், பாடல் நல் விறலியர் ஒல்குபு நுடங்க, 15
ஒருதிறம், வாடை உளர்வயின் பூங் கொடி நுடங்க,ஒருதிறம், பாடினி முரலும் பாலை அம் குரலின்நீடுகிளர் கிழமை நிறை குறை தோன்ற,ஒருதிறம், ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற,மாறுமாறு உற்றன் போல் மாறு எதிர் கோடல்-- 20
மாறு அட்டான் குன்றம்--உடைத்து.
பரங்குன்றிற்கும் கூடாக்கும் இடைப்பட்ட நிலம்
பாடல் சான்று பல் புகழ் முற்றியகூடலொடு பரங்குன்றின் இடை,கமழ் நறுஞ் சாந்தின் அவர்அவர் திளைப்ப,நணிநணித்து ஆயினும், சேஎய்ச் சேய்த்து; 25
மகிழ் மிகு தேஎம் கோதையர் கூந்தல் குஞ்சியின்சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று.வசை நீங்கிய வாய்மையால், வேள்வியால்,திசை நாறிய குன்று அமர்ந்து, ஆண்டுஆண்டுஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை 30
வாய்வாய் மீ போய், உம்பர் இமைபு இறப்ப;தேயா மண்டிலம் காணுமாறு இன்று.
பரங்குன்றின் அலங்காரம்
வளை முன் கை வணங்கு இறையார்,அணை மென் தோள் அசைபு ஒத்தார்தார் மார்பின் தகை இயலார், 35
ஈர மாலை இயல் அணியார்,மனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட,சுனை மலர்த் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா;அனைய, பரங்குன்றின் அணி.
தெய்வ விழவும் விருந்தயர்வும்
கீழோர் வயல் பரக்கும், வார் வெள் அருவி பரந்து ஆனாது ஆரோ; 40
மேலோர் இயங்குதலால், வீழ் மணி நீலம் செறு உழக்கும் அரோ;தெய்வ விழவும், திருந்து விருந்து அயர்வும்,அவ் வெள் அருவி அணி பரங் குன்றிற்கும்,தொய்யா விழுச் சீர் வளம் கெழு வையைக்கும்,கொய் உளை மான் தேர்க் கொடித்தேரான் கூடற்கும், 45
கை ஊழ் தடுமாற்றம் நன்று.
முருகனை எதிர் முகமாக்கி வாழ்த்துதல்
என ஆங்கு,மணி நிற மஞ்ஞை ஓங்கிய புட் கொடி,பிணிமுகம் ஊர்ந்த வெல் போர், இறைவ!பணி ஒரீஇ, நின் புகழ் ஏத்தி, 50
அணி நெடிங் குன்றம் பாடுதும்; தொழுதும்;அவை யாமும் எம் சுற்றமும் பரவுதும்--ஏம வைகல் பெறுக, யாம் எனவே. 53

18. செவ்வேள்
பாடியவர் :: குன்றம்பூதனார்இசையமைத்தவர் :: நல்லச்சுதனார்பண் :: காந்தாரம் 
கடவுள் வாழ்த்து
இமயத்தொடு நிகர்க்கும் குன்று
போர் எதிர்ந்து ஏற்றார் மதுகை மதம் தப,கார் எதிர்ந்து ஏற்ற கமஞ் சூல் எழிலிபோல்,நீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து,சூர், நிரந்து சுற்றிய, மா தபுத்த வேலோய்! நின்சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர் நிரந்து, 5
ஏறுமாறு ஏற்கும் இக் குன்று.
தலைமகன் ஊடல் உணர்ப்பிக்கும் திறம்ஒள் ஒளி மணிப் பொறி ஆல் மஞ்ஞை நோக்கித் தன்உள்ளத்து நினைப்பானைக் கண்டனள், திரு நுதலும்:'உள்ளியது உணர்ந்தேன்; அது உரை இனி, நீ எம்மைஎள்ளுதல் மறைத்தல் ஓம்பு' என்பாளைப் பெயர்த்து, அவன், 10
'காதலாய்! நின் இயல் களவு எண்ணிக் களி மகிழ்பேதுற்ற இதலைக் கண்டு, யான் நோக்க, நீ எம்மைஏதிலா நோக்குதி' என்று, ஆங்கு உணர்ப்பித்தல்ஆய் தேரான் குன்ற இயல்பு.
பாணனுக்குத் தலைமகனது பரத்தைமை பற்றிக் கூறும் தலைமகளின் கூற்று
ஐ வளம் பூத்த அணி திகழ் குன்றின்மேல், 15
மை வளம் பூத்த மலர் ஏர் மழைக் கண்ணார்,கை வளம் பூத்த வடு வொடு, காணாய் நீ?மொய் வளம் பூத்த முயக்கம், யாம் கைப்படுத்தேம்:மெய் வளம் பூத்த விழை தகு பொன் அணி--நை வளம் பூத்த நரம்பு இயை சீர்ப் பொய் வளம் 20
பூத்தன--பாணா! நின் பாட்டு.
பரங்குன்றத்திலுள்ள அம்பலம்
தண் தளிர் தருப் படுத்து, எடுத்து உரைஇ,மங்குல் மழை முழங்கிய விறல் வரையால்,கண் பொருபு சுடர்ந்து, அடர்ந்து, இடந்து,இருள் போழும் கொடி மின்னால்-- 25
வெண் சுடர் வேல் வேள்! விரை மயில் வேல் ஞாயிறு!--நின்ஒண் சுடர் ஓடைக் களிறு ஏய்க்கும் நின் குன்றத்து,எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின்தொழில் வீற்றிருந்த நகர்.
குன்றத்துக் காட்சிகள்
ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி-- 30
சூர் ததும்பும் வரைய காவால்,கார் ததும்பு நீர் ததும்புவன சுனை,ஏர் ததும்புவன பூ அணி செறிவு,போர் தோற்றுக் கட்டுண்டார் கை போல்வ--கார் தோற்றும்காந்தள், செறிந்த கவின், 35
கவின் முகை, கட்டு அவிழ்ப்ப, தும்பி; கட்டு யாழின்புரி நெகிழ்ப்பார் போன்றன கை.அச்சிரக்கால் ஆர்த்து--அணி மழை--கோலின்றே,வச்சிரத்தான் வானவில்லு.
குன்றத்தின் சிறப்பு
வில்லுச் சொரி பகழியின், மென் மலர் தாயின-- 40
வல்லுப் போர் வல்லாய்! மலைமேல் மரம்.வட்டு உருட்டு வல்லாய்! மலைய--நெட்டுருட்டுச்சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து,போர் ததும்பும் அரவம் போல்,கருவி ஆர்ப்ப, கருவி நின்றன--குன்றம். 45
அருவி ஆர்ப்ப, முத்து அணிந்தன, வரை;குருவி ஆர்ப்ப, குரல் குவிந்தன, தினை;எருவை கோப்ப, எழில் அணி திருவில்வானில் அணித்த, வரி ஊதும் பல் மலரால்,கூனி வளைத்த--சுனை, 50
முருகவேளை வாழ்த்துதல்
புரி உறு நரம்பும் இயலும் புணர்ந்து,சுருதியும் பூவும் சுடரும் கூடி,எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும்,செரு வேற் தானைச் செல்வ! நின் அடி உறை,உரிதினின் உறை பதிச் சேர்ந்தாங்கு, 55
பிரியாது இருக்க--எம் சுற்றமோடு உடனே!

19. செவ்வேள்
பாடியவர் :: நப்பண்ணனார்இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்பண் :: காந்தாரம் 
கடவுள் வாழ்த்து
வள்ளியை முருகன் வதுவை கொண்டது
நில வரை அழுவத்தான் வான் உறை புகல் தந்து,புல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து,'அரு முனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன்இரு நிலத்தோரும் இயைக!' என, ஈத்த நின்தண் பரங்குன்றத்து, இயல் அணி, நின் மருங்கு 5
சாறு கொள் துறக்கத்தவளொடுமாறு கொள்வது போலும், மயிற்கொடி வதுவை.
கூடலார் பரங்குன்றை நோக்கி விடியலில் யாத்திரை செய்கின்ற வழி
புலத்தினும் போரினும் போர் தோலாக் கூடல்,கலப்போடு இயைந்த இரவுத் தீர் எல்லை,அறம் பெரிது ஆற்றி, அதன் பயன் கொண்மார், 10
சிறந்தோர் உலகம் படருநர் போல,உரி மாண் புனை கலம் ஒண் துகில் தாங்கி,புரி மாண் புரவியர், போக்கு அமை தேரர்,தெரி மலர்த் தாரர், தெரு இருள் சீப்ப, நின்குன்றொடு கூடல் இடையெல்லாம் ஒன்றுபு-- 15
நேர் பூ நிறை பெய்து இரு நிலம் பூட்டியதார் போலும், மாலைத் தலை நிறையால்--தண் மணல்ஆர் வேலை யாத்திரை செல் யாறு.
பாண்டியன் தன் பரிவாரங்களுடன் பரங்குன்றை வலம் வரும் காட்சி
சுடரொடு சூழ்வரு தாரகை மேருப்புடை வரு சூழல்--புலம் மாண் வழுதி 20
மட மயில் ஓரும் மனையவரோடும்,கடன் அறி காரியக் கண்ணவரோடும்--நின்சூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல்பாடு வலம் திரி பண்பின்-- பழ மதிச்சூடி அசையும் சுவல்மிசைத் தானையின், 25
பாடிய நாவின், பரந்த உவகையின்,நாடும் நகரும் அடைய அடைந்தனைத்தே,படு மணி யானை நெடியாய்! நீ மேயகடி நகர் சூழ் நுவலுங்கால்.
குன்றின் கீழுள்ள இடை நிலம் பாசறையை ஒத்து விளங்கியமை
தும்பி தொடர் கதுப்ப தும்பி தொடர் ஆட்டி, 30
வம்பு அணி பூங் கயிறு வாங்கி, மரன் அசைப்பார்--வண் தார்ப் புரவி வழி நீங்க வாங்குவார்;திண் தேர் வழியின் செல நிறுப்பார்--கண்டக்கரும்பு கவழம் மடுப்பார்; நிரந்துபரி நிமிர் தானையான் பாசறை நீர்த்தே, 35
குருகு எறி வேலோய்! நின் குன்றக் கீழ் நின்றஇடை நிலம்: யாம் ஏத்தும் ஆறு!
மலைச் சிறப்பு - வழுதியுடன் ஏறியோர் கண்டவை
குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும்,கரும்பு கருமுகக் கணக்கு அளிப்போரும்,தெய்வப் பிரமம் செய்குவோரும், 40
கை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும்,யாழின் இளி குரல் சமம் கொள்வோரும்,வேள்லியின் அழகு இயல் விளம்புவோரும்;கூர நாண் குரல் கொம்மென ஒலிப்ப,ஊழ் உறமுரசின் ஒலி செய்வோரும்; 45
என்றூழ் உற வரும் இரு சுடர் நேமிஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும்;'இரதி காமன், இவள் இவன்' எனாஅ,விரகியர் வினவ, வினா இறுப்போரும்;'இந்திரன், பூசை; இவள் அகலிகை; இவன் 50
சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உருஒன்றிய படி இது' என்று உரை செய்வோரும்:இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்,துன்னுநர் சுட்டவும், சுட்டு அறிவுறுத்தவும்,நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்கச் 55
சோபன நிலையது--துணி பரங்குன்றத்துமாஅல் முருகன் மாட மருங்கு.
குன்றில் சுற்றத்தாரை விட்டுப் பிரிந்த சிறுமி
பிறந்த தமரின் பெயர்ந்து, ஒரு பேதை,பிறங்கல் இடைஇடைப் புக்குப் பிறழ்ந்து, 'யான்வந்த நெறியும் மறந்தேன்; சிறந்தவர் 60
ஏஎ, ஓஒ!' என விளி ஏற்பிக்க,'ஏஎ, ஓஒ' என்று ஏலா அவ் விளிஅவ் இசை முழை ஏற்று அழைப்ப, அழைத்துழிச்செல்குவள் ஆங்குத் தமர்க் காணாமைமீட்சியும், கூஉக் கூஉ மேவும் மடமைத்தே-- 65
வாழ்த்து உவப்பான் குன்றின் வகை.
இள மகளிரின் மருட்சி
நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர்ச்சினை போழ் பல்லவன் தீம் சுனை உதிர்ப்ப,உதிர்த்த சுனையின் எடுத்த தலையஅலர் முகிழ் உற, அவை கிடப்ப, 70
'தெரி மலர், நனை, உறுவ,ஐந் தலை அவிர் பொறி அரவம்; மூத்தமைந்தன்; அருகு ஒன்று மற்று-இளம் பார்ப்பு' எனஆங்கு இள மகளிர் மருள-- பாங்கர்,
குன்றம் விடியல் வானம் போலப் பொலிதல்
பசும்பிடி இள முகிழ், நெகிழ்ந்த வாய் ஆம்பல், 75
கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள்,எருவை நறுந் தோடு, எரி இணர் வேங்கை,உருவம் மிகு தோன்றி, ஊழ் இணர் நறவம்,பருவம் இல் கோங்கம், பகை மலர் இலவம்;நிணந்தவை, கோத்தவை, நெய்தவை, தூக்க 80
மணந்தவை, போல, வரை மலை எல்லாம்நிறைந்தும், உறழ்ந்தும், நிமிர்ந்தும், தொடர்ந்தும்;விடியல் வியல் வானம் போலப் பொலியும்--நெடியாய்! நின் குன்றின்மிசை.
கன்னிமை கனிந்தாரும் மணமான மகளிரும்
தாம் செய்யும் பூசையில் யானையின் மிச்சிலை உண்ணுதல்நின யானைச் சென்னி நிறம் குங்குமத் தால் 85
புனையா, பூ நீர் ஊட்டி, புனை கவரி சார்த்தா.பொற் பவழப் பூங் காம்பின் பொற்குடை ஏற்றி,மலிவுடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள்,பல் மணம் மன்னு பின் இருங் கூந்தலர்,கன்னிமை கனிந்த காலத்தார், நின் 90
கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில்--மறு அற்ற மைந்தர் தோள் எய்தார்; மணந்தார்முறுவல் தலையளி எய்தார்--நின் குன்றம்குறுகிச் சிறப்பு உணாக்கால்.
முருகப் பெருமானை வாழ்த்துதல்
குறப் பிணாக் கொடியைக் கூடியோய்! வாழ்த்துச் 95
சிறப்பு உணாக் கேட்டி செவி.உடையும் ஒலியலும் செய்யை; மற்று ஆங்கேபடையும் பவழக் கொடி நிறம் கொள்ளும்;உருவும் உருவத் தீ ஒத்தி; முகனும்விரி கதிர் முற்றா விரி சுடர் ஒத்தி; 100
எவ்வத்து ஒவ்வா மா முதல் தடிந்து,தெவ்வுக் குன்றத்துத் திருந்து வேல் அழுத்தி,அவ் வரை உடைத்தோய்! நீ இவ் வரை மருங்கில்கடம்பு அமர் அணி நிலை பகர்ந்தேம்;உடங்கு அமர் ஆயமொடு ஏத்தினம், தொழுதே! 105

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.