LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மீடியா மற்றும் ரசிகர்களின் பாராட்டால் என் கைக்குட்டை கண்ணீர்க்குட்டை ஆனது - பார்த்திபன் !!

நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் கதை திரைக்கதை வசனம். 


இந்த படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நேற்று நடை பெற்றது. இதில், படத்தின் இயக்குனர் பார்த்திபன் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசியதாவது, 


இந்த படத்தை முதல் நாள் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடிய போது என்னையுமறியாமல் என் கண்கள் கலங்கியது. அதன்பிறகு பத்திரிகையாளர் ஷோவுக்கு வந்தபோது, அதிக உணர்ச்சிவசப்பட்டதால் என்னால் தொடர்ந்து பேச முடியவில்லை. காரணம் நான் மீடியாக்களை அதிகமாக நேகிக்கிறேன். அதன் பிரதிபலிப்புதான் என்னால் பேச முடியவில்லை. என் கைக்குட்டை கண்ணீர்க்குட்டை ஆகிவிட்டது என உணர்ச்சி கரமாக பேசிய பார்த்திபன்.


நான் ஜாலியாக இருப்பது போல் தெரியும். ஆனால் நான் அப்படி இருப்பதில்லை. சினிமா என்கிற தொழிலைப்பற்றி யோசிக்கும்போது எப்போதுமே நான் சீரியசாகவே இருக்கிறேன். அந்த தொழிலை விளையாட்டுத்தனமாக இல்லாமல் சீரியசாக செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நினைக்கிறேன். அந்த சீரியசான உழைப்புக்கு கிடைத்ததுதான் இந்த வெற்றி.


ஒரு பக்கம் சந்தோஷம் இருந்தாலும் மறுபக்கம் துக்கமும் வந்துள்ளது. இப்படம் தற்போது திருட்டு வி.சி.டி.யில் வெளியாகியுள்ளது. திருட்டி வி.சி.டி. என்பது தற்போது பரவி வரும் எபோலா நோய் போல் ஆகிவிட்டது. இந்நோய்க்கு மருந்து இல்லாதது போல் திருட்டி வி.சி.டி.யும் ஒழிக்க முடியாத ஒன்றாகி வருகிறது. ஆனால் நான் அதை விடமாட்டேன். 


நாளை முதல் நானே நேரடியாக களத்தில் இறங்குகிறேன். திருட்டி வி.சி.டி. தயாரிப்பவர்களை போலீஸ் துணையோடு பிடிக்க போகிறேன். இப்படம் எப்படி திருட்டு வி.சி.டி.யில் வந்தது என்று கண்டறிய ஒரு தனி குழுவை உருவாக்கியிருக்கிறேன். இதில் ஒரு தியேட்டர் சம்பந்தப்பட்டுள்ளது. அந்த தியேட்டரின் அனுமதியோடு திருட்டு வி.சி.டி.கள் உருவாகின்றன. அதைக் கண்டறிந்து அந்த தியேட்டரை தடை செய்ய வலியுறுத்துவேன்” என்று பரபரப்பாக பேசினார் பார்த்திபன். 

by Swathi   on 21 Aug 2014  0 Comments
Tags: Parthiban   Kathai Thiraikathai Vasanam Iyakkam                 
 தொடர்புடையவை-Related Articles
விஜய் சேதுபதியுடன் கூட்டணி சேரும் பார்த்திபன் !! விஜய் சேதுபதியுடன் கூட்டணி சேரும் பார்த்திபன் !!
திகார் ஒரு அப்பா சென்டிமென்ட் கதையாம் : சொல்கிறார் பேரரசு !! திகார் ஒரு அப்பா சென்டிமென்ட் கதையாம் : சொல்கிறார் பேரரசு !!
பார்த்திபனின் அடுத்த படம் கதை இருக்கு !! பார்த்திபனின் அடுத்த படம் கதை இருக்கு !!
கதை திரைக்கதை வசனம் இயக்கம் இரண்டாம் பாகத்தின் பெயர் உப்புமா கம்பெனியாம் !! கதை திரைக்கதை வசனம் இயக்கம் இரண்டாம் பாகத்தின் பெயர் உப்புமா கம்பெனியாம் !!
மீடியா மற்றும் ரசிகர்களின் பாராட்டால் என் கைக்குட்டை கண்ணீர்க்குட்டை ஆனது - பார்த்திபன் !! மீடியா மற்றும் ரசிகர்களின் பாராட்டால் என் கைக்குட்டை கண்ணீர்க்குட்டை ஆனது - பார்த்திபன் !!
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் வெற்றியை கொண்டாடும் பார்த்திபன் !! கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் வெற்றியை கொண்டாடும் பார்த்திபன் !!
கதை திரைக்கதை வசனம் இயக்கம் 2 ஆம் பாகம் !! கதை திரைக்கதை வசனம் இயக்கம் 2 ஆம் பாகம் !!
மாஸ் படத்தில் இணைந்த பார்த்திபன் !! மாஸ் படத்தில் இணைந்த பார்த்திபன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.