இந்தியாவிலேயே முதன் முறையாக, தபால் நிலையங்களில், ஆன்லைன் முறையில், பாஸ்போர்ட் விண்ணப்பப் பதிவு சேவை, மதுரை தலைமை தபால் நிலையத்தில் துவங்கப்பட்டது. இந்த சேவை காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை, 50 ரூபாய் கட்டணத்தில் கிடைக்கும். இது குறித்து, பாஸ்போர்ட் மண்டல அதிகாரி கூறியதாவது, பாஸ்போர்ட் விண்ணப்பிக்க, பெரும்பாலான பொதுமக்கள் தனியார் கம்ப்யூட்டர் மையங்களை நாடி செல்கின்றனர். இதற்கு, அந்த கம்ப்யூட்டர் மையங்கள், 100 முதல் 1,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தபால் நிலையங்களிலேயே பாஸ்போர்ட் விண்ணப்பப் பதிவு சேவை துவக்கப்பட்டுள்ளது, விரைவில் இந்த சேவை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
|