|
||||||
ரயிலில் குவியும் கூட்டம் குறையும் வருவாய் காரணம் என்ன? |
||||||
ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தாலும், அதற்கு எற்றார் போல் வருமானம் இல்லை என ரயில்வே நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது.
இது குறித்து ரயில்வே வாரிய உறுப்பினர் தேவி பிரசாத் பாண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாட்டில், பேருந்து கட்டணங்களை விட, ரயில் பயண கட்டணம் குறைவாக இருப்பதால், அனைத்து ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆனால், அதற்கு எற்றார் போல் வருமானம் இல்லை என தெரிவித்த தேவி பிரசாத் மேலும் கூறியதாவது,
கடந்த ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களில் மெயில் மற்றும் விரைவு ரயில், புறநகர் ரயில்களில் முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணித்தவர்கள் எண்ணிக்கை, 198 கோடி. இதே கால கட்டத்தில், கடந்தாண்டு, 206 கோடியாக இருந்தது.
இதே மாதங்களில் வருவாய், 18 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்தாண்டு, 15 ஆயிரம் கோடியாக இருந்தது. வருவாய், 16 சதவீதம் அதிகம் என்றாலும், கட்டண உயர்வு காரணமாக, 20 சதவீதத்திற்கு மேல் இருந்திருக்க வேண்டும்.
கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, டிக்கெட் முன்பதிவு 3.68 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு காரணம், ரயில்களில் டிக்கெட் இல்லாமல், பயணிப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதே என தெரிய வந்துள்ளது.
முக்கியமாக, குறைந்த தூர பயணத்திற்கான டிக்கெட் விற்பனையில் தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட தொலைவு பயணத்திற்கான முன்பதிவில் பாதிப்பில்லைஇதை சமாளிக்க, கூடுதல் டிக்கெட் பரிசோதகர்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம். கூடுதல் கவுன்டர்களையும் அமைக்க உள்ளோம்.
இவ்வாறு, தேவி பிரசாத் பாண்டே கூறினார். |
||||||
by Swathi on 20 Oct 2013 0 Comments | ||||||
Tags: ரயில் பயணம் ரயில் கட்டணம் டிக்கெட் இல்லாமல் பயணம் வருவாய் குறைவு ரயில் நிலையம் Passenger Train Fare | ||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|