LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பாஸ்போர்ட் பெறுவது இனி எளிது; 543 தொகுதிகளிலும் சேவை மையங்கள்!

''நாட்டில் உள்ள, 543 லோக்சபா தொகுதிகளிலும், பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த நடவடிக்கை மூலம், பாஸ்போர்ட் பெறுவதில் உள்ள பிரச்னை, இனி எளிதாகும்.
வெளியுறவு இணை அமைச்சரும், ராணுவ முன்னாள் தலைமை தளபதியுமான,  வி.கே.சிங், அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றுஉள்ளார்.

நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில், சர்வதேச பாஸ்போர்ட் சேவை மையத்தை, அவர் துவக்கி வைத்து, அவர் பேசியதாவது:

நியூயார்க்கில், இந்திய துாதரகத்தில், இந்த நிகழ்ச்சியை துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவில் இருந்தாலும், வெளி நாடுகளில் இருந்தாலும், இந்தியர்கள் யாரும், தங்களின் பாஸ்போர்ட்களை பெறுவதில், எந்த சிக்கலையும் சந்திக்கக் கூடாது என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது.

பாஸ்போர்ட் சேவை திட்டம், இந்தியர்களின் நலனுக்காகவே ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்தி யாவில்,  543 லோக்சபா தொகுதிகளிலும், பாஸ் போர்ட் சேவை மையங்களை திறக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள், இந்த மையங்கள் திறக்கப்பட்டு, மக்களுக்கு எளிதாக பாஸ்போர்ட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாஸ்போர்ட் தொடர்பான சேவைகள், கடந்த ஆண்டு, 19 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. பாஸ்போர்ட் கோரி, ஒரு மாதத்தில், 10 லட்சத்துக்கும் அதிகமான மனுக்கள் வந்தது, இதுவே முதல் முறை.  பாஸ்போர்ட் சேவை திட்டத்தின் மூலம், ஆறு கோடிக்கும் அதிகமான பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

சேவைகளை மேம்படுத்த, வெளியுறவு அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிகள் எளிமை ஆக்கப்பட்டுள்ளன. பாஸ்போர்ட்டை விரைவில் வழங்குவதில் இருந்த தடைகள் நீக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு தலைமை தபால் அலுவலகத்திலும், சேவை மையம் திறக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால், பாஸ்போர்ட் கேட்டு, நீண்ட தூரம் இனி யாரும் செல்ல வேண்டி இருக்காது.

தற்போது, 236 தபால் அலுவலகங்களில், பாஸ்போர்ட் சேவை மையம் செயல்பட்டு வருகின்றன. அத்துடன்,36 பாஸ்போர்ட் அலுவலகங்கள், ஏற்கனவே உள்ள, 93 பாஸ்போர்ட் சேவை மையங்கள் என, 365 சேவை மையங்கள் மூலம், பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும்  கிளை தூதரகங்களில், பாஸ்போர்ட் சேவை மையங்கள் துவக்கவும், வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது .

பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திலும், பாஸ்போர்ட் சேவை மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினர்.

by Mani Bharathi   on 25 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.