LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

படேல் சிலையை பிரதமர் திறந்து வைக்க பழங்குடியின மக்கள் எதிர்ப்பு!

குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையை வரும் 31ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைப்பதற்கு அப்பகுதி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 

குஜராத் மாநிலத்தில் பிறந்த சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகிறார். இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த இவர், சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர். 

இவருக்கு குஜராத்தில் சிலை வைக்க அம்மாநில முதல்வராக இருந்தபோது நரேந்திர மோடி திட்டமிட்டார். அதன்படி கடந்த 2013ம் ஆண்டு நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமிலிருந்து 3.2 கி.மீ தூரத்தில் சாதுபெட் என்ற இடத்தில் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து ஒருமைப்பாட்டு சிலை என பெயர் சூட்டப்பட்டு, சுமார் 182 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமாக சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. தற்போது சிலை அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிந்து, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதி அவரது சிலையைத் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில்,  சிலையை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு அப்பகுதி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். வேலைவாய்ப்பு மற்றும் நில வசதிகள் செய்து தருவதாக மோடி அரசு கூறிய நிலையில், இதுவரை எந்தவொரு சமூகநலத்திட்டமும் தங்கள் பகுதியில் செயல்படுத்தப் படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 

மேலும் மோடி சிலையை திறந்தால் அந்த நாளை நாங்கள் துக்கதினமாக கடைபிடிப்போம் என்று நர்மதை ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள 72 ஊர்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அறிவித்துள்ளனர்.

by Mani Bharathi   on 22 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’ கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’
கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை. கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை.
செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..! செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.