LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பாட்னா குண்டுவெடிப்பை இந்தியன் முஜாஹிதீனின் ராஞ்சி கிளைதான் நடத்தியுள்ளது : தேசிய புலனாய்வு அமைப்பு !!

பாட்னா குண்டுவெடிப்புக்கான தகவல் பரிமாற்றம் நிம்பஸ் இணையதளம் மூலம் நடைபெற்றதாக தேசிய புலனாய்வு அமைப்பினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பாட்னா மற்றும் புத்த கயா குண்டுவெடிப்புகளை இந்தியன் முஜாஹிதீனின் ராஞ்சி கிளைதான் நடத்தியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் இணை நிறுவனராக கருதப்படும் யாசின் பட்கல் கடந்த ஆகஸ்ட் மாதம் போலீசில் சிக்கினான். ஆனால் அந்த அமைப்பின் தலைவர் ரியாஸ் பட்கல் பாகிஸ்தானுக்கு தப்பியோடிவிட்டான். அவன் அங்கிருந்தபடியே இந்தியாவில் நடைபெறும் தீவிரவாத செயல்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறான். அவனுடன் தெஷீன் அக்தர் நேரடி தொடர்பில் இருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, நிம்பஸ் இணையதளம் மூலமாக சந்தேகத்துக்குரிய செல்போன்களுக்கு வரும் குறுந்தகவல்களை தேசிய புலனாய்வு இடைமறித்துப் பார்த்ததில் இந்த தகவல் கிடைத்துள்ளது.

 

ராஞ்சியில் ஹைதர் அலி என்ற தீவிரவாதி தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அவன் தப்பி ஓடிவிட்டான். அங்கு கைப்பற்றப்பட்ட குண்டுகள் புத்த கயாவிலும் பாட்னாவில் வெடித்தவை. அதனாலேயே இந்தியன் முஜாஹிதீனின் ராஞ்சி கிளைதான் இரு குண்டுவெடிப்புகளையும் நிகழ்த்தியிருக்கிறது என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் உறுதியுடன் கூறுகின்றனர். தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் விசாரணையில் மேலும் அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

by Swathi   on 06 Nov 2013  0 Comments
Tags: பட்னா குண்டுவெடிப்பு   குண்டுவெடிப்பு   நிம்பஸ்   இந்தியன் முஜாஹிதீன்   Patna Boom Blast        
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.