LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

பட்டாம்பூச்சி போல அவள்.. - வித்யாசாகர்

1
ஆயிரம் கைகள் எனை
அணைத்துக்கொண்டு தானிருக்கிறது;
என்றாலும் -

மனசு வெளியே சென்று தேடுவது
உன்னைமட்டுமே..
-----------------------------------------

2
எறும்புகள்
சாரைசாரையாக எதையோ தேடிக்கொண்டேயிருக்கும்;

அதிலொரு எறும்பு நானாகயிருப்பின்
உனைமட்டுமே தேடியிருப்பேன்..
-----------------------------------------

3
உன் பார்வையைவிட அழகு
உலகில் வேறில்லை;
கடவுள் ஒருவேளை நேரில் வந்தால்
நீ சிரிக்கும் சிரிப்பை மட்டும்
ஒரு வரமாகக் கேட்பேன்..

நீ பார்க்குமொரு பார்வைக்கு
மீண்டுமொரு தவம் கிடப்பேன்..
-----------------------------------------

4
ஒருசில கணங்களது
உனை நினைத்திடாத கணம்,
மீறி நினைக்கையில் தீபோல் அள்ளி குடிக்கிறாய்
முழு நிலவாய் எனை வெளுக்கிறாய்:

உன் நினைவாக மட்டுமே
வெளித் தெரிகிறேன் நான்..
-----------------------------------------

5
என்னதான் வேலையென்றாலும்
கூடவே
சுவாசிக்கவும் சுவாசிப்போமில்லையா ?

அந்த சுவாசக்காற்றில் நீயிருப்பாய்..
-----------------------------------------

6
உறக்கத்திலிருந்து
கண் விழித்தாலும்
நீ மட்டுமே முதலில் தெரிகிறாய்;

அல்லது
தெரியக் கேட்கிறது மனசு..
-----------------------------------------

7
உனை
பெரிதாக நினைப்பதில்லை
மறப்பதுமில்லை;

உண்மையில் –
நீ மறக்கும் இடந்தண்ணில் இறப்பேன்
நீ நினைக்க நினைக்க பிறப்பேன்..

நீ மறுக்கும் இடம் மட்டும்
வலிக்கும், நீ சிரிக்க சிரிக்க
உயிர் சுகிக்கும்..

நீ பார்க்காத பொழுதது
வெறுக்கும், நீ பார்க்கும்
நினைக்கும்
அன்பில் மட்டுமே அது இனிக்கும்..
-----------------------------------------

8
உனக்காக
ஒருமுறை சாகத் துடிக்கிறது மனசு,
மீண்டும் பிறக்கையில்
எங்கேனும்
உனக்காகவே பிறந்துவிடமாட்டேனா..
-----------------------------------------

9
உனது மௌனத்திற்கு கூட
சப்தமுண்டு
எனக்குமட்டும் கேட்கும் சப்தமது,

உனது பார்வைக்கு கூட
மொழியுண்டு
எனக்குமட்டும் படிக்கயியன்ற
மொழியது,

எனக்கும் உனக்குமான ஒரு
நீயிருக்கிறாய்;
அந்த நீ
எப்போதும் எனக்குள் இருப்பாய்!!
-----------------------------------------

10
பொழுது அடங்குகையில்
படரும் இருட்டோடு
கண்களில் தூக்கம் அடங்குமோ இல்லையோ
உனக்கான காத்திருப்பை சுமந்துக்கொண்டு
படுப்பேன்,

ஒரு சொட்டுக் கண்ணீர்
தலையனையை நனைக்கும்
ஒரு சின்ன கனவு உனைத் தேடி அலையும்
கனவுகளில் உன் மனசுபோலவே
சிரித்துப் பேசுவாய்
நீ பேசியதை சிரித்ததை பார்த்ததை
நினைத்துக் கொண்டிருப்பேன்..

திடீரென குருவிகள்
சன்னலில் வந்து கத்தும்
காகங்கள் கரையும்
பொழுது புலரும்
கனவோ நினைவோ
என் நாள் முழுதும் நீயிருப்பாய்
உன் நினைவிருக்கும்,

நீ எல்லோருக்கும் நீ
எனக்கு நீ மட்டுமே எல்லாம்..
-----------------------------------------
வித்யாசாகர்

by Swathi   on 10 Mar 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.