|
|||||
பட்டத்து யானை - திரை விமர்சனம் ! |
|||||
நடிகர் : விஷால்
நடிகை : ஐஸ்வர்யா அர்ஜுன்
காமெடி : சந்தானம், மயில்சாமி
இயக்கம் : பூபதி பாண்டியன்
இசை : இமான்
மலைக் கோட்டை படத்திற்கு பிறகு விஷாலும், இயக்குனர் பூபதி பாண்டியனும் இணைந்திருக்கும் படம் தான் பட்டத்து யானை.
காரைக்குடியில் சமையல் கான்ட்ராக்டராக இருக்கிறார் சந்தானம். அவரிடம் சமையல் வேலைக்கு சேருகிறார் நாயகன் விஷால். பிறகு ஒரு ரவுடியிடம் ஏற்பட்ட பிரச்சனையால் காரைக்குடியை காலி செய்து விட்டு திருச்சிக்கு இடம் பெயர்கிறது சந்தானம் குருப். அங்கு விஷாலுக்கு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த அறிமுகம் காதலாக மாறுகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாவை மணம்முடிக்க வில்லன் ஒருவன் முயற்சிக்க, விஷாலுக்கும், வில்லனுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் இருந்து ஐஸ்வர்யாவை விஷால் எப்படி காப்பாற்றி கரம் பிடித்தார் என்பதுதான் படத்தின் மீதி கதை.
கதை என்னவோ பழைய கதை என்றாலும், காமெடி கலந்து கொடுத்திருப்பதால், பரவாயில்லை.
சந்தானத்தின் 2 லட்ச ரூபாய் அடங்கிய பையை தொலைத்து விட்டு தேடுவது படத்தின் ஹைலைட்.
படத்தின் நாயகி ஐஸ்வர்யா அர்ஜுன் பார்க்க எடுப்பாக இல்லை என்றாலும், ஓரளவுக்கு நடித்திருக்கிறார்.
ஆக்க்ஷன் காட்சிகளுக்கு பிறகுதான் விஷாலின் முகத்தில் ஒரு களைகட்டியிருப்பதை கவனிக்க முடிகிறது.
சந்தானம், மயில் சாமியின் காமெடிதான் படத்திற்கு ஆதாரம்.
ஜென்டில்மேனும் திருடன்தான் என்ற வசனத்திற்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. கலக்கல் வசனங்கள் இருந்தும் கதையில் கனம் இல்லை.
தமனின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையில் கவனம் தேவை.
பட்டத்து யானையை காமெடி கலந்த கமர்சியல் படமாக கொடுக்க நினைத்த இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் பட்டத்து யானை சந்தானம், மயில் சாமி காமெடிக்காக ஒரு முறை பார்க்கலாம்.
நடிகர் : விஷால்
நடிகை : ஐஸ்வர்யா அர்ஜுன்
காமெடி : சந்தானம், மயில்சாமி
இயக்கம் : பூபதி பாண்டியன்
இசை : இமான்
மலைக் கோட்டை படத்திற்கு பிறகு விஷாலும், இயக்குனர் பூபதி பாண்டியனும் இணைந்திருக்கும் படம் தான் பட்டத்து யானை.
காரைக்குடியில் சமையல் கான்ட்ராக்டராக இருக்கிறார் சந்தானம். அவரிடம் சமையல் வேலைக்கு சேருகிறார் நாயகன் விஷால். பிறகு ஒரு ரவுடியிடம் ஏற்பட்ட பிரச்சனையால் காரைக்குடியை காலி செய்து விட்டு திருச்சிக்கு இடம் பெயர்கிறது சந்தானம் குருப். அங்கு விஷாலுக்கு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த அறிமுகம் காதலாக மாறுகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாவை மணம்முடிக்க வில்லன் ஒருவன் முயற்சிக்க, விஷாலுக்கும், வில்லனுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் இருந்து ஐஸ்வர்யாவை விஷால் எப்படி காப்பாற்றி கரம் பிடித்தார் என்பதுதான் படத்தின் மீதி கதை.
கதை என்னவோ பழைய கதை என்றாலும், காமெடி கலந்து கொடுத்திருப்பதால், பரவாயில்லை.
சந்தானத்தின் 2 லட்ச ரூபாய் அடங்கிய பையை தொலைத்து விட்டு தேடுவது படத்தின் ஹைலைட்.
படத்தின் நாயகி ஐஸ்வர்யா அர்ஜுன் பார்க்க எடுப்பாக இல்லை என்றாலும், ஓரளவுக்கு நடித்திருக்கிறார்.
ஆக்க்ஷன் காட்சிகளுக்கு பிறகுதான் விஷாலின் முகத்தில் ஒரு களைகட்டியிருப்பதை கவனிக்க முடிகிறது.
சந்தானம், மயில் சாமியின் காமெடிதான் படத்திற்கு ஆதாரம்.
ஜென்டில்மேனும் திருடன்தான் என்ற வசனத்திற்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. கலக்கல் வசனங்கள் இருந்தும் கதையில் கனம் இல்லை.
தமனின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையில் கவனம் தேவை.
பட்டத்து யானையை காமெடி கலந்த கமர்சியல் படமாக கொடுக்க நினைத்த இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் பட்டத்து யானை சந்தானம், மயில் சாமி காமெடிக்காக ஒரு முறை பார்க்கலாம்.
|
|||||
by Swathi on 27 Jul 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|