LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு     Print Friendly and PDF
- உளுந்து -பயிறு

பயறுவகை பயிர்களில் சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய

பயறு வகை பயிர்கள் நடவு செய்த 15 நாட்களுக்குள் பயறுவகை நுண்ணூட்டம் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ 20 கிலோ மணலுடன் கலந்து போடவும்.

2 கிலோ ரைசோபியம், 2 கிலோ பாஸ்போ பாக்டீரியாவை 50 கிலோ தொழுவரம் அல்லது 50 கிலோ மண்புழு உரத்துடன் கலந்து போடவும்

பூ எடுக்கும் சமையமாக இருந்தால் 3 நாட்கள் புளித்த தயிரை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி அளவு கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.

தழைச்சத்து பற்றாக்குறை முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாகி உதிர்ந்துவிடும். செடியில் இலைகளின் எண்ணிக்கை குறைத்து, சிறுத்து தண்டுப்பகுதி மெலிந்து, கிளைகள் அதிகம் இன்றி காணப்படும்.

வளர்ந்த பயிரில் அறிகுறிகள் தென்பட்டவுடன் பஞ்சகவ்யா அல்லது அமிர்தக்கரைசல் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி காலை அல்லது மாலை வேளையில் இரண்டு முறை 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

இரசாயனமுறையில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5கிராம் யூரியா கரைசலை இரண்டு முறை 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

மணிச்சத்து பற்றாக்குறை செடியின் வளர்ச்சி குறைந்து, இலைகள் சிறிதாக மேல் நோக்கிக் காணப்படும். அடிப்பகுதியில் உள்ள இலைகள் கரும்பச்சை நிறத்துடன் காணப்படும். பயிர் முதிர்ச்சியடைய அதிக நாட்கள் எடுக்கும். வளர்ந்த பயிரில் அறிகுறிகள் தென்பட்டவுடன் பஞ்சகவ்யா அல்லது அமிர்தக்கரைசல் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி காலை அல்லது மாலை வேளையில் இரண்டு முறை 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

இரசாயன முறையில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் டி.ஏ.பி கரைசலை காலை நேரத்தில் தெளிக்க வேண்டும் இரண்டு முறை 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

 

-Sundhar Kumar

by Swathi   on 01 Dec 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இன்று!!!  இப்போது!!! பரபரப்பாக வேலைசெய்துகொண்டு இருக்கும் அன்பு உள்ளங்களே... எனக்காக சில நிமிடங்கள் ஒதுக்கி படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடவும்.. இன்று!!! இப்போது!!! பரபரப்பாக வேலைசெய்துகொண்டு இருக்கும் அன்பு உள்ளங்களே... எனக்காக சில நிமிடங்கள் ஒதுக்கி படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடவும்..
தாயகப் பெருமையை வெளிநாட்டில் நிலைநாட்டி  தாயகம் திரும்பி, இயற்கை விவசாயம் செய்யும் பிரியா வர்தீஷ்- சிறப்பு நேர்காணல்! தாயகப் பெருமையை வெளிநாட்டில் நிலைநாட்டி தாயகம் திரும்பி, இயற்கை விவசாயம் செய்யும் பிரியா வர்தீஷ்- சிறப்பு நேர்காணல்!
கூடுதல் நெல் மகசூல் பெறுவதற்கான உற்பத்தி முறைகள் கூடுதல் நெல் மகசூல் பெறுவதற்கான உற்பத்தி முறைகள்
இயற்கைவழி வெங்காயம் - தொடர்புக்கு இயற்கைவழி வெங்காயம் - தொடர்புக்கு
தேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை தேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை
ஆள் பற்றாக்குறையை போக்க ஆமணக்கு பயிரிடலாமா? ஆள் பற்றாக்குறையை போக்க ஆமணக்கு பயிரிடலாமா?
பயிர்களில் விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா பயிர்களில் விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா
மரபு ரக நெல்வகைகளும் மக்களிடம் கொண்டுசெல்லும் முறையும் மரபு ரக நெல்வகைகளும் மக்களிடம் கொண்டுசெல்லும் முறையும்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.