|
||||||||
பயறுவகை பயிர்களில் சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய |
||||||||
பயறு வகை பயிர்கள் நடவு செய்த 15 நாட்களுக்குள் பயறுவகை நுண்ணூட்டம் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ 20 கிலோ மணலுடன் கலந்து போடவும். 2 கிலோ ரைசோபியம், 2 கிலோ பாஸ்போ பாக்டீரியாவை 50 கிலோ தொழுவரம் அல்லது 50 கிலோ மண்புழு உரத்துடன் கலந்து போடவும் பூ எடுக்கும் சமையமாக இருந்தால் 3 நாட்கள் புளித்த தயிரை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி அளவு கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும். தழைச்சத்து பற்றாக்குறை முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாகி உதிர்ந்துவிடும். செடியில் இலைகளின் எண்ணிக்கை குறைத்து, சிறுத்து தண்டுப்பகுதி மெலிந்து, கிளைகள் அதிகம் இன்றி காணப்படும். வளர்ந்த பயிரில் அறிகுறிகள் தென்பட்டவுடன் பஞ்சகவ்யா அல்லது அமிர்தக்கரைசல் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி காலை அல்லது மாலை வேளையில் இரண்டு முறை 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். இரசாயனமுறையில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5கிராம் யூரியா கரைசலை இரண்டு முறை 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். மணிச்சத்து பற்றாக்குறை செடியின் வளர்ச்சி குறைந்து, இலைகள் சிறிதாக மேல் நோக்கிக் காணப்படும். அடிப்பகுதியில் உள்ள இலைகள் கரும்பச்சை நிறத்துடன் காணப்படும். பயிர் முதிர்ச்சியடைய அதிக நாட்கள் எடுக்கும். வளர்ந்த பயிரில் அறிகுறிகள் தென்பட்டவுடன் பஞ்சகவ்யா அல்லது அமிர்தக்கரைசல் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மில்லி காலை அல்லது மாலை வேளையில் இரண்டு முறை 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். இரசாயன முறையில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் டி.ஏ.பி கரைசலை காலை நேரத்தில் தெளிக்க வேண்டும் இரண்டு முறை 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
-Sundhar Kumar |
||||||||
by Swathi on 01 Dec 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|