LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காகம் கலைத்த கனவு

பேய் நெல்லுக் காயவைக்கும் வெயில்

 

அடுப்பு நூர்ந்து புகைகிறது.
யார் அதற்குள் தண்ணீரைச் சிலாவியது?
அல்லது
காலால் அடித்துக் கோடிக்குள் ஒற்றியது?
வானம் முழுக்கச் சிவப்பு,
இளநீலம்,
பச்சை.
பழுப்பு....
இது
பொன்னந்தி மாலை.
ஒரு கிழவி
பொல்லை ஊன்றிக்கொண்டு திாிவதுபோல்
மேகம் வேடம் தாித்து
மனதை
வாலாயப் படுத்துகின்ற நேரம்.
இங்கே...
இப்போது...
மரங்களெல்லாம்
அரும்பாமல்
பூக்கும்.
வாலறுந்த பட்டம்போல் நுனிவாலில் தொங்கும்
துண்டு
கிழிந்த நிலவைப்
பார்த்து ஆசையினால்
கையுதறும்
காலுதறும்.
சிறுவெள்ளி 
வானத்தை 
விரலாலே துளைக்கும். 
பகல்
ஆடு கார்ந்த கிறுசலியாச் சிராம்பும் 
ஊதாமல்
குழையெடுத்து மந்திாித்து அடிக்காமல்
விஷமிறங்கி
இதுவரை செருகிய கண்திறந்து பார்க்கும்
மீண்டும்
கடியன்
நிலத்திலே ஊரும்.
கொக்குப்போல் வளர்ந்த
நெடிய வேப்பையின் துளிருக்குமட்டும்
மஞ்சள் வெயில்
இளஞ்சூட்டில் கொடுக்கின்ற ஒத்தடத்தைக் கவனித்து
பழந்தின்று
கொட்டையும் போட்ட நரைப்பூனை
தெள்ளுதிர்த்தும்
வைப்பு முடிந்து அடைகிடந்த குறுக்கு
இரு என்றால் படுக்கம்
படுவேசை போல
கப்பை அகட்டி மல்லாக்கப் புரளும்.
பேய்
நெல்லுக் காயவைக்கும். 

 

அடுப்பு நூர்ந்து புகைகிறது.

யார் அதற்குள் தண்ணீரைச் சிலாவியது?

அல்லது

காலால் அடித்துக் கோடிக்குள் ஒற்றியது?

 

வானம் முழுக்கச் சிவப்பு,

இளநீலம்,

பச்சை.

பழுப்பு....

 

இது

பொன்னந்தி மாலை.

ஒரு கிழவி

பொல்லை ஊன்றிக்கொண்டு திாிவதுபோல்

மேகம் வேடம் தாித்து

மனதை

வாலாயப் படுத்துகின்ற நேரம்.

 

இங்கே...

இப்போது...

மரங்களெல்லாம்

அரும்பாமல்

பூக்கும்.

வாலறுந்த பட்டம்போல் நுனிவாலில் தொங்கும்

துண்டு

கிழிந்த நிலவைப்

பார்த்து ஆசையினால்

கையுதறும்

காலுதறும்.

சிறுவெள்ளி 

வானத்தை 

விரலாலே துளைக்கும். 

 

பகல்

ஆடு கார்ந்த கிறுசலியாச் சிராம்பும் 

ஊதாமல்

குழையெடுத்து மந்திாித்து அடிக்காமல்

விஷமிறங்கி

இதுவரை செருகிய கண்திறந்து பார்க்கும்

 

மீண்டும்

கடியன்

நிலத்திலே ஊரும்.

கொக்குப்போல் வளர்ந்த

நெடிய வேப்பையின் துளிருக்குமட்டும்

மஞ்சள் வெயில்

இளஞ்சூட்டில் கொடுக்கின்ற ஒத்தடத்தைக் கவனித்து

 

பழந்தின்று

கொட்டையும் போட்ட நரைப்பூனை

தெள்ளுதிர்த்தும்

வைப்பு முடிந்து அடைகிடந்த குறுக்கு

இரு என்றால் படுக்கம்

படுவேசை போல

கப்பை அகட்டி மல்லாக்கப் புரளும்.

பேய்

நெல்லுக் காயவைக்கும். 

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.