LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

பெரியார் போற்றிய பெருந்தகை

 பெரியார் ஈ . வெ . ரா . அவர்கள் கூட்டத்தில்பேசுவதற்காக மேடையில் அமர்ந்திருந்தார் . அப்பொழுது கூட்டத்தின் முன் வரிசையில் இருந்த இளைஞர் ஒருவன் சிறிதும் மரியாதை இன்றித் தன் கால்மேல் காலைப்போட்டு உட்கார்ந்திருந்தான் .

மேடையில் இருந்த இன்னொருவர் பெரியாரிடம் , “ அந்த இளைஞனைப் பார்த்தீர்களா ? நாம் எல்லாம் மேடையில் இருக்கிறோம் . கால்மேல் காலைப் போட்டுக்கொண்டு கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல் இருக்கிறான் ?” என்றார் .

அதற்குப் பெரியார் “ அவன் கால்மேல் அவன் காலைப் போட்டுக் கொண்டு இருக்கிறான் . இதில் நம்ம மரியாதை எங்கு குறைகிறது ? என்று பதில் சொன்னார் .

இப்படி எதையும் பகுத்தறிவோடு பார்க்கிற பெரியார் பெருந்தலைவரைப் பற்றிப் பெருமிதமாகப் பேசியவர் .

தந்தைப்பெரியாரின் நீண்ட கால ஏக்கம் நிறைவேறியது போல அமைந்தது காமராசர் ஆட்சி .

அந்தக் காலத்தில் சேலம் நகர் மன்றத் தலைவராக சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இருந்தார் . இருவரும் நெருங்கிய நண்பர்கள் . ராஜாஜியின் வேண்டுகோளை ஏற்று பெரியார் அரசியலுக்கு வந்தார் . ராஜாஜி மிதவாதி , பெரியாரோ தீவிரவாதி .

காந்தியின்மேலுள்ள பற்றுதலால் அவரது மதுவிலக்குக் கொள்கையை ஏற்று தன் தோட்டத்துத் தென்னை மரங்களை வெட்டினார் . கதராடைக் கொள்கைக்காக பிரச்சாரம் செய்தார் . காந்தியின் “ ஹரிஜன முன்னேற்றம் ” என்ற கொள்கைக்கு ஆதரவாக வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு “ வைக்கம் வீரர் ” என்ற பெயர் பெற்றார் .

தமிழரிடையே வறுமை , அறியாமை , கல்லாமை , சாதியுணர்வுச் சிறுமை போன்ற குடி கெடுக்கும் “ ஆமைகளை ” ஒழிப்பதற்குப் பொதுவாழ்வே சிறந்தது என உணர்ந்து சொல்லாற்றலை வளர்த்து கொண்டார் .

நாட்டில் அமைந்த மக்களரசுகளின் பிரதமர்களாக பனகல் அரசர் , முனுசாமி ரெட்டியார் , ராஜாஜி ( ஆரியர் ), டி . பிரகாசம் , ஓமந்தூர் ராமசாமி ரெட்டியர் , குமாரசாமி ராஜா போன்றவர்கள் ஆட்சி செய்தார்களே அன்றி தமிழ்நாட்டின் தமிழன் ஒருவன் கூட இல்லையே என்று வருந்திய நிலையில் காமராசர் முதல்வரானதும் பெரியார் மிகவும் மகிழ்ந்தார் .

காமராசரின் எளிமை “ பண்பாடு ” முழு அர்ப்பணிப்பு , செயல்திறன் கண்டு அவரைத் தமிழரின் துயர் துடைக்க வந்த “ பச்சைத் தமிழர் ” என்று பாராட்டினார் . பெரியார் அவர்கள் , “ இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்த முன்னேற்றம் ஆயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை . மூவேந்தர்கள் , நாயக்கர்கள் , மராட்டியர்கள் , முஸ்லீம்கள் , வெள்ளைக்காரர்கள் , இவர்கள் ஆட்சியில் எல்லாம் நமது கல்விக்கு வகை செய்யப்படவில்லை .

தோழர்களே என்சொல்லை நம்புங்கள் . இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னம் பத்து ஆண்டுகளுக்காவது காமராசரை விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள் . அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள் . காமராசரைப் பயன்படுத்திக்கொள்ள நாம் தவறிவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது ” என்று பேசினார் .

காமராசர் திட்டத்துக்கே பெருந்தலைவர் , முதல்வர் பதவியைத் துறக்க முடிவெடுத்த போது எதிர்த்துக் குரல் கொடுத்தவர் பெரியார் .

பிறகு காமராசர் குடியாத்தம் தொகுதியில் போட்டியிடப்போவதாகக் கூறிய உடன் முதலில் ஆதரவு தெரிவித்தவர் பெரியார்தான் .

இப்படி எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட பெரியாரால்போற்றப்பட்ட பெருமை பெருந்தலைவருக்குக் கிடைத்தது .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.