LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழகத்தில் 5,125 பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்படும்: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு!

தமிழகத்தில் 5,125 புதிய பெட்ரோல் பங்க்குகள் திறக்கவும், விண்ணப்பிப்பதை எளிதாக்கவும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முடிவு செய்து உள்ளது. 


இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் இந்தியன் ஆயில் நிர்வாக இயக்குனர் சித்தார்த்தன், இந்துஸ்தான் மண்டல சில்லறை வர்த்தக தலைமை அதிகாரி சந்தீப் மகேஷ்வரி, பாரத் பெட்ரோலியம் மாநில சில்லறை வர்த்தக அதிகாரி நாகராஜன், இந்தியன் ஆயில் தலைமை மேலாளர் அண்ணாமலை, இந்தியன் ஆயில் முதன்மை தலைமை மேலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

அப்போது அவர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது:


தமிழகத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் லிமிடெட், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் லிமிடெட் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து தமிழகம் முழுவதும் 5125 பெட்ரோல் பங்க்குகளையும், புதுச்சேரியில் 135 பெட்ரோல் பங்க்குகளையும் திறக்க முடிவு செய்துள்ளனர்.


பெட்ரோல் மற்றும் டீசலின் பயன்பாடு ஆண்டு தோறும் 8 சதவீதம் மற்றும் 4 சதவீதமாக அதிகரித்து கொண்டே வருகிறது. 

இனி அமையவிருக்கும் பங்குகள் நெடுஞ்சாலைகள், விவசாய மையப் பகுதிகள் மற்றும் தொழில்துறை மையப் பகுதிகள் ஆகியவற்றில் அதிகரித்து வரும் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்யவும்,  வாடிக்கையாளர்களின் வசதிகளை நிறைவேற்றுவதற்கும் சில்லறை விற்பனை பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்படும். 

எனவே பெட்ரோல் பங்க் அமைப்பதற்கு விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  அதற்காக விண்ணப்ப படிவம் மற்றும் ஆவணத்தை சமர்ப்பிக்கும் முறை எளிதாக்கப்பட்டு உள்ளது.  விதிகளும் தளர்த்தப்பட்டு உள்ளன. 


விண்ணப்பதாரர்களுக்கு  நிலம் இருப்பது முக்கியமானது. மேலும் நிலம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். முதன் முறையாக வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் விதத்தில் தனிப்பட்ட ஏஜென்சி மூலமாக கணினிமயமாக்கப்பட்ட குலுக்கல் முறை, ஒப்பந்த புள்ளி திறப்பு முறைகள் செயல்படுத்தப்படுகிறது. 


தானியங்கி வசதி உட்பட அதிநவீன தொழில்நுட்பத்துடன் அனைத்து சில்லறை விற்பனை மையங்களும் கட்டமைக்கப்படும். எனவே பெட்ரோல் பங்க்குகள் அமைக்க விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் www.petrolpumdealerchayan.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


 இந்தியாவிலேயே முதல்முறையாக இந்த முறை மூன்று நிறுவனங்கள் இணைந்து ஒரே இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும். 21 வயது பூர்த்தியடைந்து 60 வயதுக்குள் இருக்க வேண்டும். இதில் முன்னாள் ராணுவத்தினருக்கு விதிவிலக்கு உண்டு.


 மேலும் ராணுவ வீரர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள், விளையாட்டு வீரர்கள், ஊனமுற்றோர்கள் என பல்வேறு பிரிவினருக்கு ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் தகுதி விவரங்களை இணையதளம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 24.12.2018 விண்ணபிக்க கடைசி நாளாகும். 

by Mani Bharathi   on 26 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.