புது தில்லி, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற அனைத்து பெட்ரோலியப் பொருட்களின் விலையையும் உயர்த்தும் முடிவை ஒத்திப் போடப்பட்டுள்ளது மத்திய அரசு. இவற்றின் விலைகள் அடுத்த வாரம் உயர்த்தப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தெரிவித்தார். பெட்ரோலியப் பொருள்களின் விலைகளை உயர்த்துவது தொடர்பான தகவலை ஏற்கெனவே அமைச்சரவை ஒப்புதலுக்கு பெட்ரோலிய அமைச்சகம் அனுப்பியிருந்தது. இதனால் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு இப்போதைக்கு இல்லை என்று தெரிவித்த அமைச்சர், அடுத்த வாரம் இவற்றின் விலைகள் உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.
|