ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.5 வரை விலை உயர்த்தப்படும் என்று மத்திய அரசிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்துவதற்கு காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பெட்ரோல் விலையை உயர்த்தினால் போராட்டம் நடத்தப் போவதாக அந்த கட்சி அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் பெட்ரோல் விலை நான்கு முறை உயர்த்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழ்நிலையில் 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 1.37, டீசலுக்கு ரூ. 17, மண்எண்ணைக்கு ரூ. 32, சமையல் கியாசுக்கு ரூ. 347 வீதம் எண்ணை நிறுவனங்கள் இழப்பை சந்திக்கின்றன. எனவே முதலில் பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணை நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
|