பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் மாற்று திறனாளிகளுக்கு, முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சென்னையில் இன்று ஆறாவது நாளாக போராட்டம் நடத்தினர். உதயம் திரையரங்கம் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் 9 பேர் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆறு நாட்களாக போராட்டம் நடத்தி வரும் மாற்று திறனாளிகள் கோரிக்கைக்கு அரசு தலையிட்டு நல்ல முடிவு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
|