LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

பிஞ்சுப்பூ கண்ணழகே.. - வித்யாசாகர்!

1
கை
யில் அழுக்கென்கிறேன்
அப்படியே முத்தமிடுகிறாய்..

அச்சோ!!!!! வியர்வை என்கிறேன்
அப்படியேக் கட்டிப்பிடித்துக்கொள்கிறாய்..

அம்மம்மா போதும் போதும்
என்கிறேன்
பிரிகையில் நிறுத்தாமல் அழுகிறாய்

இயற்கை
உன்னைத் தாயாகவும்
என்னை மகனாகவும் பெற்றிருக்கலாம்..

--------------------------------------

2
ண்சிமிட்டி
கண்சிமிட்டி
அத்தனை அழகாகப் பேசுகிறாய்,
மொத்தத்தில் உயிரென்பதை
நீயேத் தாங்குகிறாய்,
நீ பேசும் சொற்களும்
சிரிப்பும் மட்டுமே
பொக்கிசம் ஆகிறதெனக்கு;

நீ பேசாத
சிரிக்காத
எனும் இரண்டே சொற்களுள்
தற்கொலைப் புரிகிறதென் நிகழ்காலம்!
--------------------------------------------------------------------

3
பு
துத்துணி
உடுத்திக்கொண்டு
அப்பாவைத் தேடுகிறாய்,

சாப்பிட யாரேனும்
மிட்டாய் வாங்கித்தந்தால்
காட்ட அப்பாவைத் தேடுகிறாய்,

வீட்டுப்பாடதைத் திருத்தி
ஐந்து நட்சத்திரத்தை ஆசிரியை போட்டுவிட்டால்
சந்தோசத்தில் அப்பாவைத் தேடுகிறாய்,

அண்ணன் அடித்துவிட்டான்
அம்மா கடிந்துக்கொண்டால்
சொல்ல அப்பாவைத் தேடுகிறாய்..

நீ தேடுவாய் தேடுவாய்
என்றுதான்
நான் அதற்குள் மட்டுமே
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்!
--------------------------------------------------------------------

4
ம்மா திட்டினால்
அப்பாவிடம் சொல்லிவிடுவேன்
என்கிறாயாம்,

அண்ணன் வாலாட்டினால்
அப்பாவிடம் சொல்லிவிடுவேன்
என்கிறாயாம்,

பள்ளிக்கூடத்தில்கூட
சக மாணவிகள் சண்டையிட்டாலோ
திட்டிப் பேசினாலோ அப்பாவிடம் சொல்லிவிடுவேன்
என்கிறாயாம்..

எல்லோரும் கேட்கிறார்கள் உனை
உனக்கு அப்பா மட்டும்தான்
கண்ணுக்குத் தெரியுமா ?

நீ சொல்கிறாய்
ஆமாம், எனக்கு எங்கப்பா மட்டுமே எங்கும் தெரிவார்..
--------------------------------------------------------------------


5
பொ
ம்மைன்னா
உனக்கு ரொம்பப் பிடிக்கும்

அதுக்கு நீ
பொட்டுவைத்து
சட்டைப்போட்டு
சோறு ஊட்டி
அலமாரியிலிருந்து பேம்பசைக் கூட
பொம்மைக்கென எடுத்துவைத்துக் கொள்கிறாய்

எங்களுக்கு சிரிப்பு ஒருபக்கம்
உனதறிவின் முதிர்ச்சி ஒருபக்கம்..

குழந்தை வளர்ந்தால்
சந்தோசப்படலாம் தான்;
பெண்குழந்தை வளர்ந்தால்
இந்தச் சமூகம் அப்பாக்களை
அதிக சந்தோசப்பட விடுவதில்லை..
--------------------------------------------------------------------
வித்யாசாகர்
by Swathi   on 11 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.