LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா

பிற உயிர்களும் வாழட்டுமே !

பூச்சி பயிரைத் தின்றால் உடனே பூச்சிக்கொல்லி தெளிக்கிறோம்; எலி வீட்டிகுள் வந்தால் மருந்து வைக்கிறோம்; ஈ-எறும்புக்கெல்லாம் ஸ்பேரே அடித்துவிடுகிறோம். அப்படியென்றால் இந்த மொத்தப் பிரபஞ்சமுமே மனிதனுக்கு மட்டும் சொந்தமானதா? நம்மை விட்டு சமீபத்தில் பிரிந்து இயற்கையுடன் கலந்த நம்மாழ்வார் அவர்களின் இந்த எழுத்துக்கள் உயிருடன் வாழும் நாம் அனைவரும் கவனிக்க வேண்டியவை.


நம்மாழ்வார்:


“ஒவ்வோர் உயிரையும் இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாகத்தான் நான் பார்க்கிறேன். எதையும் புழு என்றோ, பூச்சி என்றோ, தாவரம் என்றோ, ஆண் என்றோ, பெண் என்றோ, இந்தியன் என்றோ, அமெரிக்கன் என்றோ நான் பார்ப்பதில்லை. இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வோர் உயிருக்கும் அதற்கென்று ஒரு இடம் இருக்கிறது. ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை.”


மேலே கூறப்பட்டது காட்டுப்பூ ஜுலை இதழில் சத்குரு அவர்கள் சொல்லியுள்ள கருத்துக்கள்.


நான்கூட காய்கறி விதையை மண்ணில் புதைத்திருந்தேன். நான்கு நாட்கள் கழித்து அது முளைத்து வளரத் தொடங்கியது. இரண்டு நாட்கள் கழித்து சென்று பார்த்தபோது ஒரு பயிர்செடியின் இலையை ஒரு வெட்டுக்கிளி தின்று கொண்டிருந்தது. ஒவ்வோர் உயிருக்கும் அதற்கென்று ஒரு இடம் இருக்கிறது என்று சத்குரு சொல்லியுள்ளதை நினைத்துக்கொண்டேன். இன்றோ, நாளையோ ஒரு ஓணான் அல்லது ஒரு குருவி வரக்கூடும்… அதற்கு இந்த வெட்டுக்கிளி இரையாக அமையக்கூடும்.


சார்லஸ் டார்வின் 1831ம் ஆண்டு டிசம்பர் மாதம் “பிகில்” என்ற கப்பலில் உலக யாத்திரை புறப்பட்டார். கப்பல் பல நாட்கள் பயணித்தது. டார்வின் பலவகை மீன்களை பிடித்து பரிசோதனை செய்தார். கப்பல் தரை தட்டுகிறபோது கீழே இறங்கி நடந்தோ அல்லது குதிரைமீது சென்றோ, தாவர வகைகளை பரிசோதனை செய்தார்.


இத்தகைய 5 ஆண்டு பயணத்தின் முடிவில் ஊர் திரும்பிய டார்வின் தனது பரிணாம தத்துவத்தை வெளியிட்டார்.


நீர்வாழ்வன, ஊர்வன, நடப்பன, பறப்பன, குட்டிபோட்டு பால் கொடுப்பவை என்று வளர்ச்சி அடைந்தது எப்படி?


உயிரினங்கள் பூகோள வேறுபாடுகளாலும் வேறுபட்ட தட்ப வெப்பநிலைகளாலும் பிரிக்கப்படும்போது புதிய இனங்கள் தோன்றுகின்றன என்று டார்வின் குறிப்பிட்டார். வாலில்லா குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று டார்வின் குறிப்பிட்டபோது பலர் அதை ஏற்க மனம் கூசிப்போனார்கள். ஆனாலும் பிற்காலத்தில் அதுவே பெரிய விஞ்ஞான கண்டுபிடிப்பாக இருந்தது.

இப்போது, புலி, சிறுத்தை, வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி போன்ற வனவிலங்குகளும், சிட்டுக்குருவி, தவளை போன்ற சிற்றினங்களும், அதிவேகமாக மறைந்து வருகின்றன.


நெல் இனங்களில் பல மறைந்துபோனதால் 2006ம் ஆண்டு கணக்குப்படி 1,000 நெல் இனங்கள் மட்டுமே உயிர் பிழைத்திருக்கின்றன. இதே போக்கு நீடித்தால் 2100ம் ஆண்டில் வாழுகின்ற மக்கள் பெருமளவில் வாழ்வாதாரங்களை இழந்து அல்லல்படுவார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.


‘பசுமை விகடன்’ 10 ஜுலை 2010 நாளிட்ட இதழில் செந்தில்குமார் அவர்களுக்கு கொடுத்த நேர்காணலில் சத்குரு இப்படிச் சொல்லியுள்ளார்.


“இயற்கையை மாற்றிவைக்க நினைப்பதைப் போன்ற முட்டாள்தனம் எதுவும் கிடையாது. இயற்கைதான் எல்லாம் என்று உணர்வதுதான் வாழ்வின் உன்னதம். உழவர்கள் சுயநினைவிற்கு வரவேண்டியது, தவிர்க்கக்கூடிய சீர்திருத்தமாக அமையும். பதவியில் உள்ளவர்கள் தங்களின் பொறுப்புணர்ந்து செயல்படுவதற்கு ஆன்மீகம் துணைபுரியட்டும் என்று வேண்டுகிறோம்”.

by Swathi   on 28 Mar 2014  0 Comments
Tags: பிற   உயிர்கள்   வாழட்டும்   சத்குரு   Live   Beings   Living  
 தொடர்புடையவை-Related Articles
”சென்னையில் திருவையாறு” - மார்கழியும் இசையும்  டிசம்பர் 18 முதல் 25 வரை ”சென்னையில் திருவையாறு” - மார்கழியும் இசையும் டிசம்பர் 18 முதல் 25 வரை
உங்கள் செல்போனில் எடுக்கும் வீடியோவை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பு செய்ய வேண்டுமா? உங்கள் செல்போனில் எடுக்கும் வீடியோவை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பு செய்ய வேண்டுமா?
விஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா? - சிவகார்த்திகேயனின் பதில்கள் !! விஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா? - சிவகார்த்திகேயனின் பதில்கள் !!
பக்தி பற்றி சத்குரு ! பக்தி பற்றி சத்குரு !
ஜப்பானிய ரோபோக்கள்… ஜப்பானிய ரோபோக்கள்…
இமயத்தின் ரகசியங்கள் – ஒரு பார்வை இமயத்தின் ரகசியங்கள் – ஒரு பார்வை
நமது பேச்சு எப்படியிருக்க வேண்டும்? நமது பேச்சு எப்படியிருக்க வேண்டும்?
கொடுப்பதற்கு உங்களிடம் எதுவும் இல்லை கொடுப்பதற்கு உங்களிடம் எதுவும் இல்லை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.