LOGO
  முதல் பக்கம்    சமையல்    ஆரோக்கிய உணவு/சிறுதானியம் Print Friendly and PDF

பிரண்டை குதிரைவாலி தோசை

தேவையானவை 


1. குதிரைவாலி அரிசி - 2 கப் 


2. உளுந்தம் பருப்பு - கால் கப் 


3. நுனிக் கொழுந்து பிரண்டைத் துண்டுகள் - 10 


4. வெந்தயம் - சிறிதளவு 


5. உப்பு, செக்கு நல்லெண்ணெய் - தேவையான அளவு 


செய்முறை 


1. குதிரைவாலி அரிசி, வெந்தயம், உளுந்து மூன்றையும் தனித்தனியாக மூன்று மணி நேரம் ஊற வைத்து, பின்னர் ஒன்றாக சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.

 

2. பின்னர் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பிரண்டையில் கணு நீக்கி, பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும்.

 

3. ஆறியவுடன் இதை குதிரைவாலி மாவுடன் கலந்து, எட்டு மணி நேரம் அப்படியே வைத்தால் புளித்து விடும். இந்த மாவை காய்ந்த தவாவில் தோசையாக ஊற்றி, திருப்பிப் போட்டு இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

 

4. காரச்சட்டினியுடன் சூடாக பரிமாறவும். இந்த தோசையை சாப்பிட்டால் உடல் சூடு சமநிலையாக இருக்கும். வயிற்றுக் கோளாறுகள் சரியாகும். 

by Swathi   on 17 Jul 2014  2 Comments
Tags: Pirandai Kuthiraivali Dosai   Dosai Recipes   பிரண்டை குதிரைவாலி தோசை              
 தொடர்புடையவை-Related Articles
பிரண்டை குதிரைவாலி தோசை பிரண்டை குதிரைவாலி தோசை
கருத்துகள்
04-Nov-2018 09:23:20 gomathirasu said : Report Abuse
நன்றி
 
24-Jun-2018 09:38:50 K..VAARAAGHAKIRI said : Report Abuse
சிறப்பான செயல் நீங்கள் சேயீது கொண்டுள்ளது . இந்திய தமிழ்நாட்டு விவசாய்க்காலுக்கு விளைபொருளுக்கு உரியவில்லை கிடைப்பதில்லை தங்கள் பகுதில் உள்ள உணவு தேவைகளை எங்களை போன்ற விவசாய்க்களிடம் வாங்கினால் அல்லது விற்பனை வாய்ப்புகளை ஏற்ப்படுத்தி கொடுத்தால் நாங்களும் வாழ்வோம் இந்த உலகில்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.