|
|||||
வாழ்வின் உண்ணதத்தை உணர்த்தும் -பிரண்டை திருவிழா.. |
|||||
உங்களின் ஆழ்மனதில் ஒளிந்து கொண்டிருக்கும் குழந்தையை..முழுமையாக வெளிப்படுத்த .. ஒரு சிறப்பான களம் அமைத்துக்கொடுத்தால் எப்படி இருக்கும்.. நம் வாழ்வின் ஆகசிறப்பான விடயங்களை ஒரு சேர்த்து கட்டமைத்து அதற்கு உணர்வையும் உயிரையும் கொடுத்து நம் கண்முன்னே நிறுத்தினால் எப்படி இருக்கும்..
நோயை மட்டுமே நமக்களிக்கும் பெரு நிறுவனங்களின் தயாரிப்புகளில் சிக்குண்டு தவிக்கும் நமக்கு..
நம்மை அன்பால் அறத்தால் அறவனைக்க ஒரு பெருங்குடும்பமே பனியாற்றி உண்ணதமான பொருட்களை பகிர்ந்து கொள்ள ஒரு ஊர் சந்தை அமைத்து கொடுத்தால் எப்படி இருக்கும்..
நம் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வழிமுறையை ,நெறி முறையை காட்டத்துடிக்கும் நமக்கு ..
வழி அமைத்துக் கொடுத்தால் எப்படி இருக்கும்..
நொடிக்கு நொடி இயந்த்திரங்களோடு விளையாடி விரக்தியின் உச்சத்தில் இருக்கும் நம் குழந்தைகளுக்கு , நமக்கு அறச்சிந்தனை மிக்க , மனதில் உண்ணதத்தை மட்டுமே விளைவிக்கின்ற விளையாட்டுக்களை வெட்ட வெளியில் ஆடுவதற்கு களம் அமைத்துக்கொடுத்தால் எப்படி இருக்கும்..
நவீன மருத்துவத்தின் மரணப்பிடியில் சிக்கித்தவிக்கும் நம் உறவுகளை மீட்க ஒரு அரங்கு அமைத்து, நம் மரபு மருத்துவத்தின் மான்பை தொகுத்து ஓரிடத்தில் ஒரு சேர கொடுத்தால் எப்படி இருக்கும்..
சுகமான பிரசவத்தின் வழி முறைகளை செயல்படுத்திய சீர்மிக்க வழிகாட்டிகள் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டால் எப்படி இருக்கும் ..
மரபின் ஒப்பனையை மான்போடு சுவைக்க ஒரு தருனம் அமைந்ததால் எப்படி இருக்கும்..
உலகுக்கே மெய்யியலை உண்ணதமாக உரைத்த நம் சான்றோர்களின் கருத்தக்களை தொகுத்து ஒரு சேரக்கொடுத்தால் எப்படி இருக்கும்..
களம் என்பது எல்லோருக்குமான உணர்வின் உச்சம்..
அப்படி ஒரு கணவை வளர்தெடுத்து அதற்கு உயிர் கொடுத்து உருவமாக்கி இந்த மன்னின் மான்பாளர்களான மக்களை மட்டுமே நம்பி, மக்களுக்காக மன்னின் மைந்தன் செந்தமிழன் நடத்தும் மகத்தான விழா ..
சிறப்பிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை..
எப்படி இருக்கும் என்பதை சொல்லில் அடக்கிவிட முடியாது..உணர்வோம் வாருங்கள்...
|
|||||
by Swathi on 28 Apr 2015 0 Comments | |||||
Tags: பிரண்டை திருவிழா Pirandai Thiruvizha | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|