LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

பிறர் நலம் பேணுவோம்

 லுக்மான் ஹக்கீமிடம் “ யாரைக் கண்டாலும் இப்படி மரியாதை காட்டுகிறீர்களே இதை யாரிடமிருந்து கற்றீர்கள் ?” என்று கேட்டார் அவருடைய நண்பர் .

“ முட்டாளிடமிருந்து ” என்று பதில் சொன்னார் ஹக்கீம் .

“ என்ன முட்டாளிடமிருந்தா ?” என்று வியப்புடன்கேட்டார் நண்பர் .

“ அந்த முட்டாள்கள் செய்யும் அவமரியாதையை எல்லாம் தெரிந்து கொண்டு அவற்றை எல்லாம் விட்டு விட்டேன் . அவ்வளவுதான் ” என்றார் ஹக்கீம் .

பிறருக்கு இடைஞ்சல் செய்யாமல் இருப்பதே ஒரு பண்புதான் என்பதை நன்கு உணர்ந்தவர் பெருந்தலைவர் . இந்தப் பண்பு பற்றி தினமணி ஆசிரியர் ஏ . என் . சிவராமன் கூறும் செய்திகளைப் பார்க்கலாம் .

நாளேட்டு உலகின் பிதாமகர் என்று அழைக்கப்பட்டவர் திரு . ஏ . என் . சிவராமன் ஆவார் . 53 ஆண்டுகள் தினமணி நிறுவனத்தில் பணியாற்றிப் பல ஆண்டுகள் அந்த நாளேட்டின் ஆசிரியராகவும் பணியாற்றியவர் .

பெருந்தலைவர் காமராசர் மீது மிகுந்த அன்பு கொண்டவர் . அவரது கடைசிக் காலம் வரை நண்பராக இருந்தவர் . 13-2-2002 ஆண்டுக்கான ஆனந்த விகடன் வார ஏட்டில் அவர் பேட்டி அளித்தார் . அதில் “1930 ஆம் ஆண்டு வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டேன் . போராட்டத்தை ஆதரித்துப் பிரசங்கம் செய்தேன் . இப்படி ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போதே உப்பளங்களை நோக்கி நடக்கத் தொடங்கினேன் . ஒரு கான்ஸ்டபிள் ஓடிவந்து என் மார்பில் ஒரு லத்தியை வைத்துப் பலமாக அழுத்தினார் . இதைப் பார்த்துப் பதறிய கலெக்டர் “ ஏய் குச்சியை எடுடா மூச்சு திணறிச் செத்துப் போகப் போறான் “ னு கத்தினார் .

பிறகு விசாரணை நடத்தி ஒரு வருடம் சிறைத் தண்டனை கிடைத்தது . திருச்சி , சென்னை , மத்தியச் சிறைகளில் சில காலம் இருந்தேன் . கடைசியில் அலிப்புரம் ஜெயிலில் அடைத்தார்கள் .

வெறும் கருங்கல் தரைதான் எழுபதுக்கு நாற்பதடி பெரிய ரூம் . அதிலே வரிசையா படுத்துக் கிடப்போம் . காலையிலே நாலு அவுன்ஸ் கஞ்சி , மதியம் சாதம் , குழம்பு சாயந்திரம் கஞ்சி .

இந்தச் சிறையிலே எனக்கு எதிரே தான் காமராசர் படுத்திருப்பார் . படிச்சவங்களுக்கு இந்தப் படிக்காத மேதை தந்த மரியாதையை வேறு எவரும தந்ததில்லை . ஜெயில்லே நான் ஒரு ஓரமா உட்கார்ந்து சதா புத்தகம் படிச்சுட்டே இருப்பேன் . குறுக்கும் நெடுக்குமா போறவங்க பேசிகிட்டே நடப்பாங்க . அப்போ காமராசர் “ நமக்குத் தான் படிப்பறிவு இல்லை . படிக்கிறவங்களையாவது தொந்தரவு பண்ணாம இருங்கண்ணேன் “ னு சொல்வாரு . கடைசி வரைக்கும் எனக்கும் அவருக்கும் அந்த நட்பு இடைவெளியில்லாமல் இருந்தது .

யான் பெற்ற பேறு பெறுக இவ்வையகம் என்று பெருமக்கள் கூறினார்கள் . ஆனால் இன்றைய கால கட்டத்தில் தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை . எதிரிக்கு இரண்டு கண்ணும்போக வேண்டும் என்று நினைப்பவர் பலர் உண்டு . ஆனால் பெருந்தலைவர் தனக்கு கிடைக்காத கல்வி எனும்பேறு இந்த உலகத்தில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்த உயர்ந்த உள்ளம் படைத்தவர் என்பதை ஏ . என் . சிவராமனது பேட்டி மூலம் நாம் அறிந்து கொள்ளலாம் .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.