|
|||||
பிளஸ் 2 தேர்வில் 91.3 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி! |
|||||
பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் 91.3 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. அரசு தேர்வுத் துறையின் www.tnresults.nic.in www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வர்களின் பதிவு எண் பிறந்த தேதி மாதம் ஆண்டு ஆகியவற்றை பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். படிக்கும் பள்ளிகளிலும் மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 6 முதல் 13 வரை சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கு விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேற்கண்ட தகவலை அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார். மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை தங்கள் பள்ளிகளில் பெற்று கொள்ளலாம். தனித் தேர்வர்கள் வரும் 24-ந் தேதி காலை 9 மணி முதல் வரும் 26-ந் தேதி வரை www.dge.tn.nic.inஎன்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 91.3 சதவீதம் மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்களில் திருப்பூர் முதலிடத்திலும், ஈரோடு 2- வது இடத்திலும், பெரம்பலூர் 3- வது இடத்திலும் உள்ளன. |
|||||
by Mani Bharathi on 21 Apr 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|