LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

உயர்கல்வி படிக்க பிளஸ்-2 மதிப்பெண் மட்டும் போதும்! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

உயர்கல்வி படிக்க பிளஸ் 2 மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் நிருப.ர்களிடம் கூறியதாவது:

 “நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கும், ஜேஇஇ எனப்படும் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கும் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே முதல்முறையாக நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தான் அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

10, 11 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களது மன அழுத்தத்தைப் போக்கும் வகையில், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் ஆயிரத்து 200 மதிப்பெண்கள் என்ற முறையை மாற்றி ஒவ்வொரு வகுப்பிலும் தலா 600 மதிப்பெண்களாக பிரித்து தேர்வெழுதும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

பிளஸ் 1 தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற வேண்டும். எனினும், வரும் கல்வியாண்டு முதல் பிளஸ் 2 தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர்கள் உயர்கல்வியில் சேரலாம். அந்த வகையில் அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதில் மாற்றமில்லை. அதில், அவர்கள் தோல்வியுற்றால் மீண்டும் தேர்வெழுத வாய்ப்புகள் வழங்கப்படும். ஆனால், பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே உயர் கல்வியில் சேரலாம்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன்  கூறினார்.

by Mani Bharathi   on 17 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.