ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன்சிங், சர்தேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் முன்னாள் தலைவர் நொபொரு கராஷிமாவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.
மூன்று நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங், அந்நாட்டு தலைவர்களை சந்தித்து, பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறார். இதற்கிடையே தென்னிந்திய வரலாறு குறித்து ஆய்வு செய்த டோக்கியோ பல்கலை கழக பேராசிரியர் நொபொரு கராஷிமாவுக்கு தமிழ் மொழிக்கு செய்த தொண்டை பாராட்டி பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. உடல் நிலை சரியில்லாததால் டெல்லியில் கடந்த மாதம் 5ம்தேதி, நடந்த விழாவில் கராஷிமா பங்கேற்கவில்லை. இதையடுத்து, டோக்கியோவில் இந்த விருதை பிரதமர் மன்மோகன்சிங் கராஷிமாவுக்கு, நேற்று வழங்கினார்.
|