ராஜ்யசபா தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பா.ம.க நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது. ராஜ்யசபா தேர்தலில் எந்த கட்சியை ஆதரிப்பது தொடர்பான பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர் கோ.க.மணி தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி உட்பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ராஜ்யசபா தேர்தலில் யாரை ஆதரிப்பது தொடர்பான விவாதம் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர்கள் பலர் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என கூறியதை அடுத்து. அந்த முடிவே தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து ராஜிய சபா தேர்தலில் தி.மு.க., தே.மு.தி.க ஆகிய கட்சிகளின் வெற்றியை நிர்ணயிக்கும் பொறுப்பு காங்கிரசிடம் வந்துள்ளது.
|