|
||||||||
இறை கவிஞர் சீனி நைனா மறைந்தாரே! |
||||||||
இறை கவிஞர் சீனி நைனா மறைந்தாரே! 7.8.2014
வே.ம.அருச்சுணன் - மலேசியா
இனிய பேச்சும்
நுண்ணிய கருத்தும்
தொலை நோக்குப் பார்வையும்
வலுவான கருத்தாலும்
பிறவிக் கவிஞராய் மனித மனங்களில்
தடம் பதித்த மாமணியே
திடுமென இறைவனடி சேர்ந்ததேனோ?
கவியுலகின் கலங்கரை விளக்கே
கவியால் வான்புகழ் பெற்றவரே
உனது பிரிவால் கவியுலகம்
கலையிழந்து போனதே
கானக் குயில் குரல் இழந்தே
வாடுதல் பொறுக்கலையே
கைபிடித்த வளர்ந்த குழந்தை
திசை இழந்து துடிக்குதே
கவிமழை பொழிந்த வானம்
காரிருளில் பொசுங்குதே.........!
உன்
தொல்காப்பிய உரைக்கு
மனம் குளிந்த மனங்கள்
நாட்டில் பலருண்டு
தேனுண்ட வண்டாய் களிப்புற்ற
உள்ளங்கள்
தாங்கள் பல்லாண்டு வாழ்ந்திட
இறைவனிடம் மண்டியிட்டார்
தொல்காப்பிய விருதும் தந்து
உங்கள் மனம் குளிரவைத்தார்.............!
உந்தன்
கவிமுழக்கம் தொடராய்க் கேட்பதற்கு
நாங்கள் தளமிழந்தோம்
சந்தேகம்
கேட்க இனி யாரிடம் செல்வோம்?
கவிக்கோமானே
எங்களை விட்டு வெகு தூரம்
சென்றதன் நீதி என்ன?
மனுநீத் சோழன் நீதி சொல்வாறா?
கவித்தொண்டு
உந்தன் உயிர் தொண்டு
உங்கள் குரல்
தமிழுலகம் தடம் புரளாமல்
செல்லும் வழி சொன்னீர்
நாளெல்லாம்
உனக்குத் தமிழ்ப்பணிதான்
இலக்கணம் போதித்த ஆசான்
தமிழர் மனம் இனிக்க
எறும்பாய் உழைப்பைத் தந்தாய்
தமிழுக்குத் தொண்டு செய்தோன்
இறப்பதில்லை
நிறைவான தொண்டால்
நிலைத்து நிற்பீர்
வாயார வாழ்த்துகிறோம்
உம் மனம் சாந்திக்கு
கண்ணீரில் கவிபாடுகிறோம்.............!
இனிய பேச்சும் நுண்ணிய கருத்தும் தொலை நோக்குப் பார்வையும் வலுவான கருத்தாலும் பிறவிக் கவிஞராய் மனித மனங்களில் தடம் பதித்த மாமணியே திடுமென இறைவனடி சேர்ந்ததேனோ?
கவியுலகின் கலங்கரை விளக்கே கவியால் வான்புகழ் பெற்றவரே உனது பிரிவால் கவியுலகம் கலையிழந்து போனதே கானக் குயில் குரல் இழந்தே வாடுதல் பொறுக்கலையே கைபிடித்த வளர்ந்த குழந்தை திசை இழந்து துடிக்குதே கவிமழை பொழிந்த வானம் காரிருளில் பொசுங்குதே.........!
உன் தொல்காப்பிய உரைக்கு மனம் குளிந்த மனங்கள் நாட்டில் பலருண்டு தேனுண்ட வண்டாய் களிப்புற்ற உள்ளங்கள் தாங்கள் பல்லாண்டு வாழ்ந்திட இறைவனிடம் மண்டியிட்டார் தொல்காப்பிய விருதும் தந்து உங்கள் மனம் குளிரவைத்தார்.............!
உந்தன் கவிமுழக்கம் தொடராய்க் கேட்பதற்கு நாங்கள் தளமிழந்தோம் சந்தேகம் கேட்க இனி யாரிடம் செல்வோம்?
கவிக்கோமானே எங்களை விட்டு வெகு தூரம் சென்றதன் நீதி என்ன? மனுநீத் சோழன் நீதி சொல்வாறா?
கவித்தொண்டு உந்தன் உயிர் தொண்டு உங்கள் குரல் தமிழுலகம் தடம் புரளாமல் செல்லும் வழி சொன்னீர் நாளெல்லாம் உனக்குத் தமிழ்ப்பணிதான் இலக்கணம் போதித்த ஆசான் தமிழர் மனம் இனிக்க எறும்பாய் உழைப்பைத் தந்தாய் தமிழுக்குத் தொண்டு செய்தோன் இறப்பதில்லை நிறைவான தொண்டால் நிலைத்து நிற்பீர் வாயார வாழ்த்துகிறோம் உம் மனம் சாந்திக்கு கண்ணீரில் கவிபாடுகிறோம்.............!
-வே.ம.அருச்சுணன் - மலேசியா |
||||||||
by Swathi on 07 Aug 2014 0 Comments | ||||||||
Tags: இரங்கற்பா | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|