LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வே.ம. அருச்சுணன்

இறை கவிஞர் சீனி நைனா மறைந்தாரே!

 

இறை கவிஞர் சீனி நைனா மறைந்தாரே!         7.8.2014
                          வே.ம.அருச்சுணன்  - மலேசியா
இனிய பேச்சும்
நுண்ணிய கருத்தும்
தொலை நோக்குப் பார்வையும்
வலுவான கருத்தாலும்
பிறவிக் கவிஞராய் மனித மனங்களில்
தடம் பதித்த மாமணியே
திடுமென இறைவனடி சேர்ந்ததேனோ?
கவியுலகின் கலங்கரை விளக்கே
கவியால் வான்புகழ் பெற்றவரே
உனது பிரிவால் கவியுலகம்
கலையிழந்து போனதே
கானக் குயில் குரல் இழந்தே
வாடுதல்  பொறுக்கலையே
கைபிடித்த வளர்ந்த குழந்தை
திசை இழந்து துடிக்குதே
கவிமழை பொழிந்த வானம்
காரிருளில் பொசுங்குதே.........!
உன்
தொல்காப்பிய உரைக்கு
மனம் குளிந்த மனங்கள்
நாட்டில் பலருண்டு
தேனுண்ட வண்டாய் களிப்புற்ற
உள்ளங்கள்
தாங்கள் பல்லாண்டு வாழ்ந்திட
இறைவனிடம் மண்டியிட்டார்
தொல்காப்பிய விருதும் தந்து
உங்கள் மனம் குளிரவைத்தார்.............!
உந்தன்
கவிமுழக்கம் தொடராய்க் கேட்பதற்கு
நாங்கள் தளமிழந்தோம்
சந்தேகம்
கேட்க இனி யாரிடம் செல்வோம்?
கவிக்கோமானே
எங்களை விட்டு வெகு தூரம்
சென்றதன் நீதி என்ன?
மனுநீத் சோழன் நீதி சொல்வாறா?
கவித்தொண்டு
உந்தன் உயிர் தொண்டு
உங்கள் குரல்
தமிழுலகம் தடம் புரளாமல்
செல்லும் வழி சொன்னீர்
நாளெல்லாம்
உனக்குத் தமிழ்ப்பணிதான்
இலக்கணம் போதித்த ஆசான்
தமிழர் மனம் இனிக்க
எறும்பாய் உழைப்பைத் தந்தாய்
தமிழுக்குத் தொண்டு செய்தோன்
இறப்பதில்லை
நிறைவான தொண்டால்
நிலைத்து நிற்பீர்
வாயார வாழ்த்துகிறோம்
உம் மனம் சாந்திக்கு
கண்ணீரில் கவிபாடுகிறோம்.............!

இனிய பேச்சும்

நுண்ணிய கருத்தும்

தொலை நோக்குப் பார்வையும்

வலுவான கருத்தாலும்

பிறவிக் கவிஞராய் மனித மனங்களில்

தடம் பதித்த மாமணியே

திடுமென இறைவனடி சேர்ந்ததேனோ?

 

கவியுலகின் கலங்கரை விளக்கே

கவியால் வான்புகழ் பெற்றவரே

உனது பிரிவால் கவியுலகம்

கலையிழந்து போனதே

கானக் குயில் குரல் இழந்தே

வாடுதல்  பொறுக்கலையே

கைபிடித்த வளர்ந்த குழந்தை

திசை இழந்து துடிக்குதே

கவிமழை பொழிந்த வானம்

காரிருளில் பொசுங்குதே.........!

 

உன்

தொல்காப்பிய உரைக்கு

மனம் குளிந்த மனங்கள்

நாட்டில் பலருண்டு

தேனுண்ட வண்டாய் களிப்புற்ற

உள்ளங்கள்

தாங்கள் பல்லாண்டு வாழ்ந்திட

இறைவனிடம் மண்டியிட்டார்

தொல்காப்பிய விருதும் தந்து

உங்கள் மனம் குளிரவைத்தார்.............!

 

உந்தன்

கவிமுழக்கம் தொடராய்க் கேட்பதற்கு

நாங்கள் தளமிழந்தோம்

சந்தேகம்

கேட்க இனி யாரிடம் செல்வோம்?

 

கவிக்கோமானே

எங்களை விட்டு வெகு தூரம்

சென்றதன் நீதி என்ன?

மனுநீத் சோழன் நீதி சொல்வாறா?

 

கவித்தொண்டு

உந்தன் உயிர் தொண்டு

உங்கள் குரல்

தமிழுலகம் தடம் புரளாமல்

செல்லும் வழி சொன்னீர்

நாளெல்லாம்

உனக்குத் தமிழ்ப்பணிதான்

இலக்கணம் போதித்த ஆசான்

தமிழர் மனம் இனிக்க

எறும்பாய் உழைப்பைத் தந்தாய்

தமிழுக்குத் தொண்டு செய்தோன்

இறப்பதில்லை

நிறைவான தொண்டால்

நிலைத்து நிற்பீர்

வாயார வாழ்த்துகிறோம்

உம் மனம் சாந்திக்கு

கண்ணீரில் கவிபாடுகிறோம்.............!

 

 

  -வே..அருச்சுணன்  மலேசியா

by Swathi   on 07 Aug 2014  0 Comments
Tags: இரங்கற்பா                    
 தொடர்புடையவை-Related Articles
இரங்கற்பா  பாடுதற்கு இறையருள் பெற்றவனே !! இரங்கற்பா பாடுதற்கு இறையருள் பெற்றவனே !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.