தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் நாடாளமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது.
தமிழகத்தின், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆலந்தூர்(இடைத்தேர்தல்) சட்டசபை தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு லோக்சபா தொகுதிக்கும், இம்மாதம் 24ல், வாக்குபதிவு நடைபெறுகிறது.
தமிழகத்தில், 55 பெண்கள், ஒரு திருநங்கை என, மொத்தம் 845 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புதுச்சேரியில், 30 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வதால். அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் போட்டிபோட்டுக் கொண்டு தங்களது இறுதி கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
|