|
||||||||
பக்ருதின் அலி அகமது |
||||||||
பிறப்பு: பக்ருதின் அலி அகமது பழைய தில்லியின் ஹவுஸ் காசி பகுதியில் 1905, மே 13 தேதி பிறந்தார். இவர்
நன்கு அறியப்பட்ட அசாமிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்.கல்வி:இவர் தனது பள்ளி படிப்பை உத்திர
பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தின் அரசு உயர் நிலைப்பள்ளியில் தொடங்கினார். தனது மெட்ரிகுலேஷன்
படிப்பை டெல்லி அரசு உயர் நிலைப்பள்ளியில் படித்தார். பின்னர் இங்கிலாந்து சென்ற இவர் 1923 ஆம் ஆண்டு
புனித கேத்தரின் கல்லூரியில் மேற்படிப்பை தொடர்ந்தார். கேம்பிரிச் பல்கலைகழகத்தில் சட்டம் பயின்ற இவர் 1928
ல் லாகூர் உயர் நீதிமன்றத்தில் பயிற்சி எடுத்தார்.அரசியல் ஈடுபாடு:1925 ஆம் ஆண்டு இலண்டனில் ஜவஹர்லால்
நேருவை சந்தித்த இவர் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.இந்திய விடுதலை இயக்கத்தில் இணைந்த இவர்
தீவிரமாக பணியாற்றினார்.1942 ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றமைக்காக 3 1/2 ஆண்டு
சிறைத்தண்டனை பெற்றார்.சுதந்திர இந்தியா: சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் 1952 முதல் 1953 ராஜ்ய
சபாவிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பின்னர் அசாம் அரசின் அட்வகேட் ஜெனரலாகவும் பணியாற்றினார்.
இரண்டு முறை அசாம் சட்டமன்றத்திற்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அசாம் கால்பந்து
சங்கம் , மட்டைப்பந்து சங்கம் ஆகியவற்றின் தலைவராக பலமுறை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அசாம்
விளையாட்டு குழுவின் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏப்ரல் 1967 ஆம் ஆண்டு அகில இந்திய
மட்டைப்பந்துசங்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961 முதல் இவர் தில்லி கால்ப் கிளப் மற்றும்
தில்லி ஜிம்கானா கிளப் ஆகியவற்றில் உறுப்பினராகவும் இருந்தார்.பட்டங்கள்:1975 ஆம் ஆண்டு யுகோஸ்லாவியா
சென்ற போது அங்குள்ள கொசோவோ நகரின் பிரிஸ்டினியா பல்கலைகழகத்தினர் கௌரவ டாக்டர் பட்டம்
வழங்கினர்.இறப்பு:1974-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி ஏற்ற பக்ருதின்
அலி அகமது 1977-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி திடீர் மாரடைப்பால் காலமானார்.
பிறப்பு:
பக்ருதின் அலி அகமது பழைய தில்லியின் ஹவுஸ் காசி பகுதியில் 1905, மே 13 தேதி பிறந்தார். இவர் நன்கு அறியப்பட்ட அசாமிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
கல்வி:
இவர் தனது பள்ளி படிப்பை உத்திர பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தின் அரசு உயர் நிலைப்பள்ளியில் தொடங்கினார். தனது மெட்ரிகுலேஷன் படிப்பை டெல்லி அரசு உயர் நிலைப்பள்ளியில் படித்தார். பின்னர் இங்கிலாந்து சென்ற இவர் 1923 ஆம் ஆண்டு புனித கேத்தரின் கல்லூரியில் மேற்படிப்பை தொடர்ந்தார். கேம்பிரிச் பல்கலைகழகத்தில் சட்டம் பயின்ற இவர் 1928 ல் லாகூர் உயர் நீதிமன்றத்தில் பயிற்சி எடுத்தார்.
அரசியல் ஈடுபாடு:
1925 ஆம் ஆண்டு இலண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.இந்திய விடுதலை இயக்கத்தில் இணைந்த இவர் தீவிரமாக பணியாற்றினார்.1942 ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றமைக்காக 3 1/2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார்.
சுதந்திர இந்தியா:
சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் 1952 முதல் 1953 ராஜ்ய சபாவிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பின்னர் அசாம் அரசின் அட்வகேட் ஜெனரலாகவும் பணியாற்றினார்.இரண்டு முறை அசாம் சட்டமன்றத்திற்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அசாம் கால்பந்து சங்கம் , மட்டைப்பந்து சங்கம் ஆகியவற்றின் தலைவராக பலமுறை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அசாம் விளையாட்டு குழுவின் துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏப்ரல் 1967 ஆம் ஆண்டு அகில இந்திய மட்டைப்பந்து சங்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961 முதல் இவர் தில்லி கால்ப் கிளப் மற்றும் தில்லி ஜிம்கானா கிளப் ஆகியவற்றில் உறுப்பினராகவும் இருந்தார்.
பட்டங்கள்:
1975 ஆம் ஆண்டு யுகோஸ்லாவியா சென்ற போது அங்குள்ள கொசோவோ நகரின் பிரிஸ்டினியா பல்கலை கழகத்தினர் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினர்.
இறப்பு:
1974-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி ஏற்ற பக்ருதின் அலி அகமது 1977-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி திடீர் மாரடைப்பால் காலமானார். |
||||||||
by Swathi on 18 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|