LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பிரபல தொழிலதிபரும், காந்தியவாதியுமான பொள்ளாச்சி நா.மகாலிங்கம் மறைவு !!

பிரபல தொழிலதிபரும், காந்தியவாதியுமான பொள்ளாச்சி நா.மகாலிங்கம், சென்னையில் நேற்று காலமானார். 


மறைந்த நா.மகாலிங்கத்திற்கு வயது 91. காந்தி ஜெயந்தி தினமான நேற்று, சென்னை, ஏ.வி.எம்., ராஜேஸ்வரி மஹாலில், வள்ளலார் குறித்த நிகழ்ச்சி நடந்தது. இதில், பொள்ளாச்சி மகாலிங்கம் பங்கேற்றார். விழா மேடையேற நின்றிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மேடையில் மயங்கிச் சரிந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


மறைந்த தொழிலதிபர், பொள்ளாச்சி நா.மகாலிங்கம், சக்தி குழும நிறுவனங்களின் தலைவர் ஆவார். பொள்ளாச்சி நா. மகாலிங்கம், கல்விச் சேவையிலும், ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கியவர். அவருக்கு, 2007ல் பத்ம பூஷண் விருது வழங்கி, மத்திய அரசு கவுரவித்தது. கடந்த 1923ல், பொள்ளாச்சியில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த மகாலிங்கம். 1952 - 67 வரை, காங்கிரசில்., எம்.எல்.ஏ.,வாக இருந்தார். இவருக்கு பாரதியார் பல்கலை, அண்ணா பல்கலை, சென்னை பல்கலை உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

by Swathi   on 02 Oct 2014  0 Comments
Tags: பொள்ளாச்சி நா.மகாலிங்கம்   நா.மகாலிங்கம்   Pollachi Mahalingam   Veteran industrialist Pollachi Mahalingam   N Mahalingam dies        
 தொடர்புடையவை-Related Articles
பிரபல தொழிலதிபரும், காந்தியவாதியுமான பொள்ளாச்சி நா.மகாலிங்கம் மறைவு !! பிரபல தொழிலதிபரும், காந்தியவாதியுமான பொள்ளாச்சி நா.மகாலிங்கம் மறைவு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.