ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. கவர்னர் ஆட்சி நடந்து வரும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. 1,145 வார்டுகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதற்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 13 ஆண்டுகளுக்கு பின்னர் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படுவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
இங்கு கடைசியாக கடந்த 2005-ம் ஆண்டு உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சித்தேர்தல் நடப்பதால் ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் இணையதள சேவையின் வேகம் குறைக்கப்பட்டு 2g வேகத்தில் வழங்கப்படுகிறது.
தெற்கு காஷ்மீர் பகுதியில் இணையதள சேவை முற்றிலும் முடக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நடைபெற்றுவரும் பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
|