|
|||||
பொன்மாலைப் பொழுது திரை விமர்சனம் ! |
|||||
நடிகர் : ஆதவ் கண்ணதாசன்(Aadhav Kannadasan)
நடிகை : காயத்ரி
இயக்குனர் : ஏ.சி.துரை
இசை : சத்யா
ஓளிப்பதிவு : ராஜவேல் ஒளிவீரன்
சமீபத்தில் மறைந்த கவியரசு கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன்(Aadhav Kannadasan) கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம்தான் பொன்மாலைப் பொழுது(Ponmaalai Pozhudhu).
ஆதவ் கண்ணதாசனும்(Aadhav Kannadasan) காயத்ரியும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். காயத்ரியின் அப்பா அருள்தாஸ் எந்நேரமும் சந்தேகபார்வையோடும், கண்டிப்பாகவும் இருப்பவர். ஆதவின் அப்பா கிஷோர் இதற்கு எதிர்மரையான அன்பான அப்பா. ஆதவ், காயத்ரியிடம் நட்பாக பழகுவதை கண்டு ஆதவை அடித்து அவமானப்படுத்தி விடுகிறார் அருள்தாஸ். இதனால் நட்பாக ஆரம்பித்த இவர்களது பழக்கம் பிறகு தீவிர காதலாக மாறுகிறது. இந்நிலையில், காயத்ரியின் அப்பா அருள்தாஸால் தான் காதலர்கள் இருவரும் பிரிவார்கள் என எதிர்பார்த்த போது, ஆதவின் அப்பா கிஷோர் எப்படி இருவரையும் பிரிகிறார் என்பது தான் படத்தின் கதை.
நாயகன் ஆதவ் கண்ணதாசன், காதல் காட்சிகளிலும், கிஷோருக்கு பிள்ளையாக வரும் காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்.
நாயகி காயத்திரியோ காதல் காட்சிகளிலும் சோகக் காட்சிகளிலும் ஒரே மாதிரியாக நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார்.
காயத்திரியின் அப்பாவாக வரும் அருள்தாஸ், இரும்புக் கடை வைத்திருக்கும் அண்ணாச்சியாக நடிக்க வில்லை வாழ்ந்திருக்கிறார். அதுவும் அவருடைய உடை, நடையும், மேரி மாதா மேல் உருகும் பக்தியும் பிரமாதம். கிஷோர் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்து முடித்திருக்கிறார்.
அம்மாவாக வரும் அனுபமா, ஸ்ரீரஞ்சனி ஆகியோரின் நடிப்பும் பரவாயில்லை.
சத்யாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஏதோ பரவாயில்லை. ராஜவேல் ஒளிவீரன் பெயருக்கேற்ப ஒளிப்பதிவை சிறப்பாக செய்திருக்கிறார்.
மொத்தத்தில் "பொன்மாலை பொழுது" ஒரு முறை பார்க்கலாம். |
|||||
by Swathi on 31 Aug 2013 1 Comments | |||||
Tags: Ponmaalai Pozhudhu பொன்மாலைப் பொழுது ஆதவ் கண்ணதாசன் காயத்ரி Aadhav Kannadasan | |||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|