LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- சுந்தர ராமசாமி

பொன்னீலன் - சாகித்ய அகாடமி பரிசு

 

அன்பார்ந்த தலைவர் அவர்களே, நண்பர்களே,
அண்மையில் சாகித்ய அகாடமி பரிசு பெற்றுள்ள நண்பர் பொன்னீலன் அவர்களை நாம் மனந்திறந்து பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். பொன்னீலன் ‘புதிய தரிசனங்கள்’ முதல் பாகம் மட்டும் நான் படித்து முடித்திருக்கிறேன். ஆகவே அப்படைப்புப் பற்றி நான் பேசுவது முறையான காரியமல்ல என்று என்னை இக்கூட்டத்திற்கு அழைக்க வந்த ஆசிரியர்களிடம் கூறினேன். அவர் பொன்னீலனைப் பற்றி நான் பேசினால் போதும் என்றார்கள். இந்தப் பரிசு, படைப்பைச் சார்ந்த குறிக்கோள்கள் எதுவுமில்லாத, கலையாற்றல்கள் இல்லாத மூன்றாந்தர தமிழ் எழுத்தாளர்களுக்குப் பல வருடங்கள் போய்ச் சேர்ந்திருக்கிறது. சாகித்ய அகாடமியின் அணுகுமுறைக்கு எதிராகக் கடந்த முப்பது வருடங்களாக தமிழ் எழுத்தாளர்களிடையே விமர்சனமும் இருந்து வருகிறது. சாகித்ய அகாடமி பரிசு ராஜாஜி எழுதிய ‘வியாசர் விருந்து’ என்ற மகாபாரதக் சுருக்கத்திற்கு அளிக்கப்பட்டபோது அதைக் கண்டித்து ‘சரஸ்வதி’ சிற்றிதழில் க.நா. சுப்பிரமணியம், தொ.மு.சி. ரகுநாதன், டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் விமர்சனங்களைத் தொடுத்த காலத்திலிருந்து சாகித்ய அகாடமியின் தேர்வுகள் குறித்து மாறுபட்ட கருத்துகள் இருந்து வருகின்றன. சாகித்ய அகாடமியின் தவறான அணுகுமுறைகளை நான் என் கட்டுரைகளில் கடுமையாக விமர்சித்தும் வந்திருக்கிறேன். அவர்களது தவறான தேர்வுகள் மூலம் தரமற்ற படைப்புகள் பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க நேரும் போது தமிழுக்குத் தலைக்குனிவு ஏற்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி இனி வரவிருக்கும் 25 வருட காலம் சாகித்ய அகாடமி பரிசை ஏற்க மறுத்து ஐம்பது முக்கிய எழுத்தாளர்கள் ஒன்றாக இணைந்து அறிக்கை விடவேண்டும் என்றும் என் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். இவற்றைத் தவறான அணுகுமுறைக்கு எதிரான தார்மீகக் கோபம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொன்னீலனை நான் சம்பிரதாயமாகப் பாராட்ட விரும்பவில்லை. எழுத்தாளர்கள் ஒருவரையொருவர் சம்பிரதாயமாகப் பாராட்டிக் கொள்வது பண்பாட்டைத் தகர்ப்பதாகும். கலாச்சாரத்தைச் சீரழித்து உண்மைக்குப் பெரும் ஊறு விளைவிப்பதாகும். ஒரு எழுத்தாளனின் படைப்புக்களைப் படிக்காமலே மற்றொரு எழுத்தாளன் பாராட்ட முற்பட்டால் அந்தப் போலியின் முகத்தை பாராட்டைப் பெறும் எழுத்தாளன் அந்த இடத்திலேயே கிழித்துவிடவேண்டும். மாறாக தன் படைப்புக்களைப் படிக்காமலேயே ஒருவன் பாராட்டும்போது எழுத்தாளனுக்கு அது மகிழ்ச்சியைத் தரும் என்றால் படிக்க அவசியமில்லை என்று அவனே நம்பும் எழுத்தை அவன் எழுதுவதை விட்டுவிடலாம். ஆனால் இந்தச் சீரழிவுகள் எல்லாம் இன்றைய வாழ்க்கையில் வழக்கங்கள் ஆகிவிட்டன. இவற்றை இனங்கண்டு கொதிக்கும் அளவுக்கு எழுத்தாளனின் உணர்வுகள் கூர்மையாகவும் இல்லை. கலாச்சாரச் சீரழிவின் ஒரு பகுதியாக எழுத்தாளனே மாறிக் கொண்டிருக்கும் போது தன் விமர்சனத்தை யாருக்கு எதிராக அவன் தொடுக்கப்போகிறான் ?
வணிக முயற்சிகளால் தமிழ் நாகரிகமே அழிக்கப்பட்டு வருகிறது. முக்கியமான வணிக முயற்சிகளாகப் பிரபலமான தமிழ் இதழ்களையும் திரைப்படங்களையும் சொல்லலாம். அத்துடன் அரசியலையும் ஒரு வணிகம் என்று சேர்த்துச் சொல்ல வேண்டும். அது முதலீடு இல்லாத வணிகம். லாபம் அதிகம் தரும் வணிகம். இந்த மூன்று வணிகங்களும் தமிழ் வாழ்வைச் சீரழித்து வருகின்றன. இவற்றை ஊக்குவிக்கும் துணை வணிகங்களென சகல மத நிறுவனங்களையும் சொல்லலாம். சகல ஜாதி சங்கங்களையும் சொல்லலாம். வீட்டுக்குள் புகுந்து பண்பாட்டைக் கொள்ளையடிக்கும் டி.வி.யைச் சொல்லலாம். கல்வி என்பது இன்று மிகப் பெரிய வணிகமாகிவிட்டதால் பல்கலைக்கழகங்களையும் வணிக நிறுவனங்கள் என்று சொல்லலாம். இன்று இந்த வணிக கலாச்சாரத்திற்கு வெளியே நிற்பவர்கள் என்று சிற்றிதழ் மரபைச் சேர்ந்தவர்களை மட்டுமே சொல்ல முடியும். சில எழுத்தாளர்களையும் சில தீவிர வாசகர்களையும் சில தீவிர சிந்தனையாளர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். வணிகக் கலாச்சாரம் என்றால் என்ன ? மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி சுய லாபத்தைத் தேடிக் கொள்ளும் முயற்சிதான் வணிகம். இதைத்தான் பெரிய பத்திரிகைகள் இன்று செய்து வருகின்றன. பாலுணர்வைத் தூண்டும் கதைகள், அற்பத் துணுக்குகள், பெண்மையை இழிவுபடுத்தும் படங்கள், ஆழம் சார்ந்து நின்று அறிவு பூர்வமாக எதையும் ஆராயாமல் நுனிப்புல் மேயும் கட்டுரைகள் போன்றவற்றை நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம். இந்தச் சீரழிவுதான் டி.வி.யையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.
இந்தச் சீரழிந்த கலாச்சாரத்திற்கு எதிரானவர் பொன்னீலன். அவர் ஆத்மார்த்தமானவர். கடுமையான உழைப்பாளி. சக மனிதனை நேசிப்பவர். ஜாதி, மதம் போன்ற சகல பிரிவுகளுக்கும் எதிரானவர். ஏற்றத் தாழ்வற்ற குறைந்த பட்சம் ஏற்றத்தாழ்வு மிகுதியாக இல்லாத வாழ்வு இந்த மண்ணில் இறங்கி வரவேண்டும் என்ற லட்சியம் கொண்டவர். அந்த லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காக எழுதி வருகிறார். எழுத்தைத் தாண்டிய செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். அவரிடம் விமர்சனம் உண்டு. ஆனால் வெறுப்பு இல்லை. வெறுப்பு, வன்முறை ஆகிய இழிவுகளை முற்றாக அகற்றி சமூக மாற்றத்திற்கான பணிகளில் ஈடுபட்டவர்கள்தான் சிறிய அளவிலேனும் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். பொன்னீலன் மார்க்சியத் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர் என்று சொல்கிறார்கள். இருக்கலாம். மார்க்சியம் அவரைப் பாதித்திருக்கலாம். ஆனால் நான் அவரை நாராயணகுருவின் சீடர் என்று மதிப்பிடவே விரும்புவேன். அப்படிச் சொல்வதுதான் என் பார்வைக்குப் பொருத்தமானதாகத் தெரிகிறது. இவ்வளவு காரணங்களுக்காகவும் நான் பொன்னீலனை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன். சாகித்ய அகாடமி பரிசு பெற்றதின் மூலம் ஏதோ பெரிய கெளரவம் அவருக்குக் கிடைத்துவிட்டதென்று நான் நினைக்கவில்லை. கிடைத்த பரிசைவிட பொன்னீலனின் ஆளுமை பெரியது.
பொன்னீலன் எடுத்தாளும் விஷயங்கள் சார்ந்து எனக்கும் அவருக்கும் எந்தவிதமான கருத்து வேற்றுமையும் இல்லை. இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ள விரும்புபவர்கள் அவருக்கும் எனக்கும் இடையில் இருக்கிறார்கள். கருத்துக்களை முன் வைக்கும் முறை சார்ந்த தமிழ் இடதுசாரிப் படைப்புகளை நான் விமர்சித்திருக்கிறேன். சுய அனுபவங்கள் சார்ந்தே ஒரு எழுத்தாளன் படைக்க முடியும் என்பது என் அடிப்படையான நம்பிக்கைகளில் மிக முக்கியமானது. இந்த நம்பிக்கையை நான் கொண்டிருப்பதால் சுய அனுபவங்களைச் சார்ந்து பொன்னீலன் எடுத்தாளும் விஷயங்களை நான் வரவேற்கலாம்; மதிப்பிடலாம்; நிராகரிக்க முடியாது. படைப்பு என்பது மிக மிகக் கூரான ஆயுதம் என்பது என்னுடைய மற்றொரு அடிப்படையான நம்பிக்கை. படைப்பை மிகக் கூரான ஆயுதமாக மாற்ற நாம் முயற்சிகள் எடுத்துக் கொண்டோம் என்றால் நம் படைப்புகளே நம் முயற்சிகளை கட்டாயம் வெளிப்படுத்தும்.
அரசியல்வாதிகளைப் போல் எழுத்தாளர்களும் இன்று ‘மக்கள்’ என்ற சொல்லைச் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். மக்களுக்காகத் தான் எழுதி வருவதாகப் பிரகடனம் செய்யாத இடது சாரி எழுத்தாளனே இல்லை. நான் சுமார் 45 வருடங்களாக எழுதி வருகிறேன். இவ்வளவு நீண்ட காலம் எழுதிய பின்பும் நான் தமிழில் ஐயாயிரம் பேர்களைத்தான் எட்டியிருக்கிறேன் என்று சொல்லலாம். மிகையாகச் சொல்ல ஆசைப்பட்டு பத்தாயிரம் பேரை எட்டியிருக்கிறேன் என்று சொல்லலாம். மிகையாகக் கூட அதற்கு மேல் சொல்ல முடியாது. பொன்னீலன் என்னைவிடவும் பிரபலமான எழுத்தாளர் என்பதால் இருபத்தையாயிரம் பேரை எட்டியிருக்கக்கூடும் என்று சொல்லலாம். ஏழு கோடி தமிழர்களில் பத்தாயிரத்திலிருந்து இருபத்தையாயிரம் பேர்கள் வரையிலும்தான் எங்கள் எழுத்துக்களை இன்று படித்து வருகிறார்கள் என்பது வெளிப்படையான விஷயம். இது பத்தாயிரம் பேருக்கு மூன்று பேர் என்ற கணக்கில் அமையும். இப்படிப் பார்க்கும் போது நாங்கள் மக்களுக்காக எழுதிக் கொண்டிருக்கிறோம் என்று கூறுவது யதார்த்தம் இல்லாத அவகாசம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. வாசகர்களுக்காகதான் நாங்கள் இன்று எழுதிக் கொண்டிருக்கிறோம். மக்களில் ஒரு பகுதியினரையேனும் பாதிக்க வேண்டும் என்றால் எங்கள் வாசகர் தொகையைப் பலமடங்கு பெருக்க வேண்டும். எங்கள் எழுத்துக்கள் மூலம் சிறுபான்மையினரான வாசகர்கள் கடுமையான பாதிப்பைப் பெற்றால்தான் கடலென விரிந்து கிடக்கும் மக்களை நோக்கி நாங்கள் நகர முடியும். கலையாற்றலின்றி வாசகர்களை பாதிக்க முடியுமா ? மிகக் கூர்மையான பாதிப்பை நிகழ்த்த முடியுமா ? மூளைக்குள் காலங்காலமாக உறைந்து கிடக்கும் பழமையின் பாசி படிந்த பாறைகளைத் தகர்க்க வேண்டுமென்றால் கலை எவ்வளவு பெரிய ஆயுதமாக மாற வேண்டும் ?
கலையாற்றல் என்றால் என்ன ? எனக்கு ஒரு அனுபவம் ஏற்படுகிறது. இந்த அனுபவம் ஆழமானது. தீவிரமானது. அதைப்பற்றி நான் எழுதுகிறேன். கதையாகவோ சிறுகதையாகவோ நாவலாகவோ நான் எழுதுகிறேன். என் படைப்பை ஒருவன் படிக்க நேரும்போது அவன் அந்த அனுபவத்தின் தீவிரத்தை, கடுமையை ஆழத்தை உணருகிறான். இந்த அனுபவப் பரிமாற்றத்தை நிகழ்த்தும் ஆற்றல்தான் கலையாற்றல். இன்று கண்முன் காணக் கிடைப்பது முற்றிலும் சீரழிந்து போன ஒரு வாழ்க்கை. இந்தச் சீரழிவை சிறுபான்மையினரான வாசகர்களுக்கு நீங்கள் இன்று உணர்த்த வேண்டும். அவர்கள் பெறும் கடுமையான பாதிப்பு அவர்களைத் தாண்டி சமூக நீரோட்டங்களில் பரவ வேண்டும். இது சாத்தியப்பட மிக ஆழமான படைப்புக்களைத்தான் இன்று படைக்க வேண்டியிருக்கிறது. ஆழமற்ற படைப்புகள் தற்காலிகக் கூட்டங்களைக் கூட்டும். கலாச்சாரம் சார்ந்த பாதிப்புகளை நிகழ்த்தாது. அத்துடன் கலை என்பது ஒரு தனிப்பெரும் ஆற்றல். மேடைப்பேச்சு சார்ந்த திறன் வேறு. கலையாற்றல் வேறு. துண்டுப் பிரசுரம் எழுதும் திறன் ஒன்று; நாவல் எழுதும் திறன் மற்றொன்று. கருத்துக்களை நேரடியாக முன் வைப்பது சுலபம். அனுபவப் பரிமாற்றங்களை நிகழ்த்திக் காட்டுவது மிகக் கடினம். கூட்டம் சேர்ப்பது சுலபம். வாழ்க்கை சார்ந்த மிக மேலான மிக நுட்பமான ஈவிரக்கமற்ற முழுமையான புரிதல்களை உருவாக்குவது மிகப் பெரிய கலையாற்றலுக்கே உரித்தான மிகப் பெரிய சவால். அந்த கலையாற்றலை நம் எழுத்தாளர்கள் தேடிக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
பொன்னீலனின் சமூக பார்வைகளை நான் வரவேற்கிறேன். சமூக மாற்றத்தின் மூலம் மனமாற்றம் நிகழ்வதும் மனமாற்றத்தின் மூலம் சமூக மாற்றம் விரைவு பெறுவதும் பிரிக்க இயலாத கண்ணிகளாகும். மனத்தைச் செழுமைப்படுத்தும் மிகப் பெரிய ஆற்றல் கலைக்கு உண்டு. பெரும் மாற்றத்தை நிகழ்த்த விரும்பும் எழுத்தாளன் கலையாற்றல் மிகுந்த படைப்புகள் மூலம்தான் அந்த மாற்றத்தை நிகழ்த்த முடியும். பொன்னீலன் கலையாற்றல் மிகுந்த பல படைப்புகளைத் தந்து தமிழ் கலாசாரத்தை செழுமைப்படுத்த வேண்டும். அவருடைய நம்பிக்கைகளில் அவர் உறுதியாக நின்று வருகிறார். என் மனப்பூர்வமான பாராட்டுக்களை அவருக்கு மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை இங்கு பேச அழைத்த தலைமையாசிரியருக்கும் பிற ஆசிரியர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பார்ந்த தலைவர் அவர்களே, நண்பர்களே,


அண்மையில் சாகித்ய அகாடமி பரிசு பெற்றுள்ள நண்பர் பொன்னீலன் அவர்களை நாம் மனந்திறந்து பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். பொன்னீலன் ‘புதிய தரிசனங்கள்’ முதல் பாகம் மட்டும் நான் படித்து முடித்திருக்கிறேன். ஆகவே அப்படைப்புப் பற்றி நான் பேசுவது முறையான காரியமல்ல என்று என்னை இக்கூட்டத்திற்கு அழைக்க வந்த ஆசிரியர்களிடம் கூறினேன். அவர் பொன்னீலனைப் பற்றி நான் பேசினால் போதும் என்றார்கள். இந்தப் பரிசு, படைப்பைச் சார்ந்த குறிக்கோள்கள் எதுவுமில்லாத, கலையாற்றல்கள் இல்லாத மூன்றாந்தர தமிழ் எழுத்தாளர்களுக்குப் பல வருடங்கள் போய்ச் சேர்ந்திருக்கிறது. சாகித்ய அகாடமியின் அணுகுமுறைக்கு எதிராகக் கடந்த முப்பது வருடங்களாக தமிழ் எழுத்தாளர்களிடையே விமர்சனமும் இருந்து வருகிறது. சாகித்ய அகாடமி பரிசு ராஜாஜி எழுதிய ‘வியாசர் விருந்து’ என்ற மகாபாரதக் சுருக்கத்திற்கு அளிக்கப்பட்டபோது அதைக் கண்டித்து ‘சரஸ்வதி’ சிற்றிதழில் க.நா. சுப்பிரமணியம், தொ.மு.சி. ரகுநாதன், டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் விமர்சனங்களைத் தொடுத்த காலத்திலிருந்து சாகித்ய அகாடமியின் தேர்வுகள் குறித்து மாறுபட்ட கருத்துகள் இருந்து வருகின்றன. சாகித்ய அகாடமியின் தவறான அணுகுமுறைகளை நான் என் கட்டுரைகளில் கடுமையாக விமர்சித்தும் வந்திருக்கிறேன். அவர்களது தவறான தேர்வுகள் மூலம் தரமற்ற படைப்புகள் பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க நேரும் போது தமிழுக்குத் தலைக்குனிவு ஏற்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி இனி வரவிருக்கும் 25 வருட காலம் சாகித்ய அகாடமி பரிசை ஏற்க மறுத்து ஐம்பது முக்கிய எழுத்தாளர்கள் ஒன்றாக இணைந்து அறிக்கை விடவேண்டும் என்றும் என் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். இவற்றைத் தவறான அணுகுமுறைக்கு எதிரான தார்மீகக் கோபம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.


பொன்னீலனை நான் சம்பிரதாயமாகப் பாராட்ட விரும்பவில்லை. எழுத்தாளர்கள் ஒருவரையொருவர் சம்பிரதாயமாகப் பாராட்டிக் கொள்வது பண்பாட்டைத் தகர்ப்பதாகும். கலாச்சாரத்தைச் சீரழித்து உண்மைக்குப் பெரும் ஊறு விளைவிப்பதாகும். ஒரு எழுத்தாளனின் படைப்புக்களைப் படிக்காமலே மற்றொரு எழுத்தாளன் பாராட்ட முற்பட்டால் அந்தப் போலியின் முகத்தை பாராட்டைப் பெறும் எழுத்தாளன் அந்த இடத்திலேயே கிழித்துவிடவேண்டும். மாறாக தன் படைப்புக்களைப் படிக்காமலேயே ஒருவன் பாராட்டும்போது எழுத்தாளனுக்கு அது மகிழ்ச்சியைத் தரும் என்றால் படிக்க அவசியமில்லை என்று அவனே நம்பும் எழுத்தை அவன் எழுதுவதை விட்டுவிடலாம். ஆனால் இந்தச் சீரழிவுகள் எல்லாம் இன்றைய வாழ்க்கையில் வழக்கங்கள் ஆகிவிட்டன. இவற்றை இனங்கண்டு கொதிக்கும் அளவுக்கு எழுத்தாளனின் உணர்வுகள் கூர்மையாகவும் இல்லை. கலாச்சாரச் சீரழிவின் ஒரு பகுதியாக எழுத்தாளனே மாறிக் கொண்டிருக்கும் போது தன் விமர்சனத்தை யாருக்கு எதிராக அவன் தொடுக்கப்போகிறான் ?


வணிக முயற்சிகளால் தமிழ் நாகரிகமே அழிக்கப்பட்டு வருகிறது. முக்கியமான வணிக முயற்சிகளாகப் பிரபலமான தமிழ் இதழ்களையும் திரைப்படங்களையும் சொல்லலாம். அத்துடன் அரசியலையும் ஒரு வணிகம் என்று சேர்த்துச் சொல்ல வேண்டும். அது முதலீடு இல்லாத வணிகம். லாபம் அதிகம் தரும் வணிகம். இந்த மூன்று வணிகங்களும் தமிழ் வாழ்வைச் சீரழித்து வருகின்றன. இவற்றை ஊக்குவிக்கும் துணை வணிகங்களென சகல மத நிறுவனங்களையும் சொல்லலாம். சகல ஜாதி சங்கங்களையும் சொல்லலாம். வீட்டுக்குள் புகுந்து பண்பாட்டைக் கொள்ளையடிக்கும் டி.வி.யைச் சொல்லலாம். கல்வி என்பது இன்று மிகப் பெரிய வணிகமாகிவிட்டதால் பல்கலைக்கழகங்களையும் வணிக நிறுவனங்கள் என்று சொல்லலாம். இன்று இந்த வணிக கலாச்சாரத்திற்கு வெளியே நிற்பவர்கள் என்று சிற்றிதழ் மரபைச் சேர்ந்தவர்களை மட்டுமே சொல்ல முடியும். சில எழுத்தாளர்களையும் சில தீவிர வாசகர்களையும் சில தீவிர சிந்தனையாளர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். வணிகக் கலாச்சாரம் என்றால் என்ன ? மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி சுய லாபத்தைத் தேடிக் கொள்ளும் முயற்சிதான் வணிகம். இதைத்தான் பெரிய பத்திரிகைகள் இன்று செய்து வருகின்றன. பாலுணர்வைத் தூண்டும் கதைகள், அற்பத் துணுக்குகள், பெண்மையை இழிவுபடுத்தும் படங்கள், ஆழம் சார்ந்து நின்று அறிவு பூர்வமாக எதையும் ஆராயாமல் நுனிப்புல் மேயும் கட்டுரைகள் போன்றவற்றை நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம். இந்தச் சீரழிவுதான் டி.வி.யையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.
இந்தச் சீரழிந்த கலாச்சாரத்திற்கு எதிரானவர் பொன்னீலன். அவர் ஆத்மார்த்தமானவர். கடுமையான உழைப்பாளி. சக மனிதனை நேசிப்பவர். ஜாதி, மதம் போன்ற சகல பிரிவுகளுக்கும் எதிரானவர். ஏற்றத் தாழ்வற்ற குறைந்த பட்சம் ஏற்றத்தாழ்வு மிகுதியாக இல்லாத வாழ்வு இந்த மண்ணில் இறங்கி வரவேண்டும் என்ற லட்சியம் கொண்டவர். அந்த லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காக எழுதி வருகிறார். எழுத்தைத் தாண்டிய செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். அவரிடம் விமர்சனம் உண்டு. ஆனால் வெறுப்பு இல்லை. வெறுப்பு, வன்முறை ஆகிய இழிவுகளை முற்றாக அகற்றி சமூக மாற்றத்திற்கான பணிகளில் ஈடுபட்டவர்கள்தான் சிறிய அளவிலேனும் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். பொன்னீலன் மார்க்சியத் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர் என்று சொல்கிறார்கள். இருக்கலாம். மார்க்சியம் அவரைப் பாதித்திருக்கலாம். ஆனால் நான் அவரை நாராயணகுருவின் சீடர் என்று மதிப்பிடவே விரும்புவேன். அப்படிச் சொல்வதுதான் என் பார்வைக்குப் பொருத்தமானதாகத் தெரிகிறது. இவ்வளவு காரணங்களுக்காகவும் நான் பொன்னீலனை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன். சாகித்ய அகாடமி பரிசு பெற்றதின் மூலம் ஏதோ பெரிய கெளரவம் அவருக்குக் கிடைத்துவிட்டதென்று நான் நினைக்கவில்லை. கிடைத்த பரிசைவிட பொன்னீலனின் ஆளுமை பெரியது.


பொன்னீலன் எடுத்தாளும் விஷயங்கள் சார்ந்து எனக்கும் அவருக்கும் எந்தவிதமான கருத்து வேற்றுமையும் இல்லை. இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ள விரும்புபவர்கள் அவருக்கும் எனக்கும் இடையில் இருக்கிறார்கள். கருத்துக்களை முன் வைக்கும் முறை சார்ந்த தமிழ் இடதுசாரிப் படைப்புகளை நான் விமர்சித்திருக்கிறேன். சுய அனுபவங்கள் சார்ந்தே ஒரு எழுத்தாளன் படைக்க முடியும் என்பது என் அடிப்படையான நம்பிக்கைகளில் மிக முக்கியமானது. இந்த நம்பிக்கையை நான் கொண்டிருப்பதால் சுய அனுபவங்களைச் சார்ந்து பொன்னீலன் எடுத்தாளும் விஷயங்களை நான் வரவேற்கலாம்; மதிப்பிடலாம்; நிராகரிக்க முடியாது. படைப்பு என்பது மிக மிகக் கூரான ஆயுதம் என்பது என்னுடைய மற்றொரு அடிப்படையான நம்பிக்கை. படைப்பை மிகக் கூரான ஆயுதமாக மாற்ற நாம் முயற்சிகள் எடுத்துக் கொண்டோம் என்றால் நம் படைப்புகளே நம் முயற்சிகளை கட்டாயம் வெளிப்படுத்தும்.
அரசியல்வாதிகளைப் போல் எழுத்தாளர்களும் இன்று ‘மக்கள்’ என்ற சொல்லைச் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். மக்களுக்காகத் தான் எழுதி வருவதாகப் பிரகடனம் செய்யாத இடது சாரி எழுத்தாளனே இல்லை. நான் சுமார் 45 வருடங்களாக எழுதி வருகிறேன். இவ்வளவு நீண்ட காலம் எழுதிய பின்பும் நான் தமிழில் ஐயாயிரம் பேர்களைத்தான் எட்டியிருக்கிறேன் என்று சொல்லலாம். மிகையாகச் சொல்ல ஆசைப்பட்டு பத்தாயிரம் பேரை எட்டியிருக்கிறேன் என்று சொல்லலாம். மிகையாகக் கூட அதற்கு மேல் சொல்ல முடியாது. பொன்னீலன் என்னைவிடவும் பிரபலமான எழுத்தாளர் என்பதால் இருபத்தையாயிரம் பேரை எட்டியிருக்கக்கூடும் என்று சொல்லலாம். ஏழு கோடி தமிழர்களில் பத்தாயிரத்திலிருந்து இருபத்தையாயிரம் பேர்கள் வரையிலும்தான் எங்கள் எழுத்துக்களை இன்று படித்து வருகிறார்கள் என்பது வெளிப்படையான விஷயம். இது பத்தாயிரம் பேருக்கு மூன்று பேர் என்ற கணக்கில் அமையும். இப்படிப் பார்க்கும் போது நாங்கள் மக்களுக்காக எழுதிக் கொண்டிருக்கிறோம் என்று கூறுவது யதார்த்தம் இல்லாத அவகாசம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. வாசகர்களுக்காகதான் நாங்கள் இன்று எழுதிக் கொண்டிருக்கிறோம். மக்களில் ஒரு பகுதியினரையேனும் பாதிக்க வேண்டும் என்றால் எங்கள் வாசகர் தொகையைப் பலமடங்கு பெருக்க வேண்டும். எங்கள் எழுத்துக்கள் மூலம் சிறுபான்மையினரான வாசகர்கள் கடுமையான பாதிப்பைப் பெற்றால்தான் கடலென விரிந்து கிடக்கும் மக்களை நோக்கி நாங்கள் நகர முடியும். கலையாற்றலின்றி வாசகர்களை பாதிக்க முடியுமா ? மிகக் கூர்மையான பாதிப்பை நிகழ்த்த முடியுமா ? மூளைக்குள் காலங்காலமாக உறைந்து கிடக்கும் பழமையின் பாசி படிந்த பாறைகளைத் தகர்க்க வேண்டுமென்றால் கலை எவ்வளவு பெரிய ஆயுதமாக மாற வேண்டும் ?
கலையாற்றல் என்றால் என்ன ? எனக்கு ஒரு அனுபவம் ஏற்படுகிறது. இந்த அனுபவம் ஆழமானது. தீவிரமானது. அதைப்பற்றி நான் எழுதுகிறேன். கதையாகவோ சிறுகதையாகவோ நாவலாகவோ நான் எழுதுகிறேன். என் படைப்பை ஒருவன் படிக்க நேரும்போது அவன் அந்த அனுபவத்தின் தீவிரத்தை, கடுமையை ஆழத்தை உணருகிறான். இந்த அனுபவப் பரிமாற்றத்தை நிகழ்த்தும் ஆற்றல்தான் கலையாற்றல். இன்று கண்முன் காணக் கிடைப்பது முற்றிலும் சீரழிந்து போன ஒரு வாழ்க்கை. இந்தச் சீரழிவை சிறுபான்மையினரான வாசகர்களுக்கு நீங்கள் இன்று உணர்த்த வேண்டும். அவர்கள் பெறும் கடுமையான பாதிப்பு அவர்களைத் தாண்டி சமூக நீரோட்டங்களில் பரவ வேண்டும். இது சாத்தியப்பட மிக ஆழமான படைப்புக்களைத்தான் இன்று படைக்க வேண்டியிருக்கிறது. ஆழமற்ற படைப்புகள் தற்காலிகக் கூட்டங்களைக் கூட்டும். கலாச்சாரம் சார்ந்த பாதிப்புகளை நிகழ்த்தாது. அத்துடன் கலை என்பது ஒரு தனிப்பெரும் ஆற்றல். மேடைப்பேச்சு சார்ந்த திறன் வேறு. கலையாற்றல் வேறு. துண்டுப் பிரசுரம் எழுதும் திறன் ஒன்று; நாவல் எழுதும் திறன் மற்றொன்று. கருத்துக்களை நேரடியாக முன் வைப்பது சுலபம். அனுபவப் பரிமாற்றங்களை நிகழ்த்திக் காட்டுவது மிகக் கடினம். கூட்டம் சேர்ப்பது சுலபம். வாழ்க்கை சார்ந்த மிக மேலான மிக நுட்பமான ஈவிரக்கமற்ற முழுமையான புரிதல்களை உருவாக்குவது மிகப் பெரிய கலையாற்றலுக்கே உரித்தான மிகப் பெரிய சவால். அந்த கலையாற்றலை நம் எழுத்தாளர்கள் தேடிக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
பொன்னீலனின் சமூக பார்வைகளை நான் வரவேற்கிறேன். சமூக மாற்றத்தின் மூலம் மனமாற்றம் நிகழ்வதும் மனமாற்றத்தின் மூலம் சமூக மாற்றம் விரைவு பெறுவதும் பிரிக்க இயலாத கண்ணிகளாகும். மனத்தைச் செழுமைப்படுத்தும் மிகப் பெரிய ஆற்றல் கலைக்கு உண்டு. பெரும் மாற்றத்தை நிகழ்த்த விரும்பும் எழுத்தாளன் கலையாற்றல் மிகுந்த படைப்புகள் மூலம்தான் அந்த மாற்றத்தை நிகழ்த்த முடியும். பொன்னீலன் கலையாற்றல் மிகுந்த பல படைப்புகளைத் தந்து தமிழ் கலாசாரத்தை செழுமைப்படுத்த வேண்டும். அவருடைய நம்பிக்கைகளில் அவர் உறுதியாக நின்று வருகிறார். என் மனப்பூர்வமான பாராட்டுக்களை அவருக்கு மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை இங்கு பேச அழைத்த தலைமையாசிரியருக்கும் பிற ஆசிரியர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

by Swathi   on 30 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.