சிகாகோவில் வரும் மே மாதம் 4 ம் தேதி பொன்னியின் செல்வன் நாடகம் அரங்கேற்றப்பட உள்ளது. பொன்னியின் செல்வன் நாடகம் அரங்கேற்றத்தை பாராட்டி முன்னால் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம், பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, தமிழ் பிரபலங்கள் பலர் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளனர்.
இது பற்றி சிகாகோ தமிழ் சங்கத்தை சேர்ந்த சோமு கூறும்போது, பொன்னியின் செல்வன் நாடகத்தை சிகாகோவில் அரங்கேற்ற வேண்டும் என எங்கள் தமிழ் சங்கம் கடந்த ஆண்டே முடிவுசெய்து இருந்தது. இந்த நாடகத்தை அரங்கேற்ற கடந்த ஒரு வருட காலமாக முயற்சிகள் மேட்கொள்ளப்பட்டு வருகின்றன. பொன்னியின் செல்வன் நாடகத்தை அபிராமி பைன் ஆர்ட்ஸ் குழுவை சேர்ந்த பாகீரதி சேஷப்பன் இயக்குகிறார். இந்த நாடகத்தில் 40 க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் உள்ளன. இந்த கதாபத்திரங்களுக்கான நேர்காணல் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில் நான்றாக தமிழை உச்சரிக்கும் 35 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பயிற்ச்சி அளிக்க தமிழத்தில் இருந்து பல குழுக்கள் வரவழைக்கப்பட்டு, ஞாயிற்று கிழமைகளில் பயிற்ச்சிகள் மேட்கொள்ளப்பட்டது.இது நாளும் ஓவியர் மணியம் அவர்களின் சித்திரங்களில் வாழ்ந்திருந்த கதாபாத்திரங்ககளை நடிகர்கள் மூலமாக உயிர்ப்பிக்கத் தேவையான உடைகள், இந்த நாடகத்தைக் காண வரும் ரசிகர்களை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சோழ சாம்ராஜ்ஜியத்திற்கு அழைத்துச் செல்ல, தேவையான மேடைப் பொருட்கள் என்று. அப்பப்பா! இந்த முயற்சி சிகாகோ அன்பர்களிடையே பொன்னியின் செல்வன் புதினத்தின் மீது ஒரு புதிய ஆர்வத்தைத் தூண்டி உள்ளது. பலர் இந்தப் புதினத்தை முதல் முறையாகவும், ஏற்கனவே படித்தவர்கள் பலமுறையாகவும் படிக்கத் துவங்கி உள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரியது.
|