|
||||||||
பொன்னூசற் பருவம் |
||||||||
481 பரவுநர லையினறல் கவர்ந்தகரு முகின்மீப் படர்ந்துவெண் டாரைபொழியப் -
பற்றியிரு பாலுமிரு வெண்டிரை யெழுந்தப் பயோதர மளாவநாப்பண்,
விரவிமொரு வெள்ளோதி மத்தின்மே லக்கடல் விராயவரை நின்றோர்மயின் -
மேவியாங் கொண்மர கதம்படுத் தியபுடவி மிசைநிறுவு தூண்வயிரமே,
லிரவுதரு நீலவிட் டக்கிடையின் முத்தவட மியையப் பொருத்திமாட்டு -
மெறிசுடர்செய் வயிரக் கொழுப்பலகை மேலிவர்ந் தெண்டிசையு மேத்தெடுப்பப்,
புரவுபுரி சோணா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -
பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (1)
482 மாண்டசெந் தாமரை நடுப்பொலிவ தெனவம் மணக்கோக நகமலர்த்தும் -
வண்பரிதி மண்டல நடுப்பொலிவ தென்னவம் மண்டலத் தாலொளிபெறு,
நீண்டவழன் மண்டல நடுப்பொலிவ தென்னவொளி நிறைசெம் மணிப்பலகைமே -
னிலறை வமர்ந்திருள் குடித்தெழு மணிக்குழை நிலாஞ்செவியி லூசலாட,
வேண்டவருள் கைவளை கலித்தாட முகமதியின் வெண்ணகை
நிலாவாடநுண் மெல்லிடை துவண்டாட வகிலபுவ னமுமாட மிக்கவள மல்குசீர்த்தி,
பூண்டதிரு நீர்நா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -
பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (2)
483 பழிதப வறங்குடிகொ ணினதுசெங் கையமர் பசுங்கிளியை மானவொளிகூர் -
பவழச் செழும்பலகை யேறியயி ராணியும் பங்கயத் திருவுமிருபா,
லுழியுமிளிர் மணிவடந் தொட்டாட்ட யோகிய ருளக்கமல மேயவனமே -
யுண்மைவே தாந்தத் துலாவுமயி லேயெளி துறாதபர ஞானவாழ்வே,
வழிவழி நினக்கடிமை யென்றுதுதி நன்றுபுரி மாட்சியர்க் கெய்ப்பில்வைப்பே -
மங்களாம் பிகையே யெனக்கனி மனத்தினுயர் வாணிதிரு வூசல்பாடப்,
பொழிவளப் புனனா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -
பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (3)
484 கொங்குமலர் நின்னடிக் கமலமலர் மிசைதூய்க் குலாவப் பணிந்தெழுந்து -
கோலமிகு திருவுருக் கண்டுநெக் குருகிக் குடந்தமுற் றருகுநின்று,
தங்குகரு மலமெனப் படுபலகை யுள்ளாற் றகைப்புண் டதற்கியைதரத் -
தளையுமிரு வினையாய பாசந் தொடர்ந்தெண் டபுத்தமா யாபுவனமா,
மெங்குமுழி தரவலைத் திடவூச லாடுவ தியாங்கடீர்ந் துய்யும்வண்ண -
மிலகுமதி நடுவமரு மொருமா னெனத்தரள வெறிசுடர்ப் பலகையேறிப்,
பொங்குபுன னன்னா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -
பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (4)
485 இருவரும் புணர்மாத ரிருவருந் திருமுகத் தேற்றபா கத்துநின்று -
மிலகுமற் றரமாதர் யாவருந் தத்தமக் கேற்றநிலை நின்றுமேத்த,
வொருவரு மிருங்கா ருடுத்தபொன் வரைச்சிகர முற்றிலகு பசுமஞ்ஞைபோ -
லொளிரிளஞ் சோலைநடு வம்பொன்மணி மேடைமே லுற்றபொற் பலகையேறி,
வெருவரும் பெருவாளை தன்னிளஞ் சிறுமீன் வியப்புற்று நோக்கவீனா -
மீன்கணம் வெருக்கொள்ள வெடிகொண்டு வானீர் விராய்த்துளைந் தாடிமீளும்,
பொருவரும் புனனா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -
பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (5)
486 ஒல்லுமிரு நாடிவழி யோடுமிரு காலா லுலாய்த்திரி மனத்தின்வழியே -
யோடியை யாறும் புகுந்துபுல னைந்துநுக ருற்றுழல லற்றுமேலாச்,
சொல்லுமா னாந்தத் தியாந்துளைந் தாடவொண் சூட்டோதி மந்தாமரைத் -
தூயபா சடையிவர்ந் தாங்குமுத் தணிபூண்டு சுடர்மர கதப்பலகைமேல்,
வெல்லுமா தரவுற லிவர்ந்தொளிர் பசுஞ்சாலி லிறல்வேழ மறையவுயரும் -
வித்தக முணர்ந்துவிண் ணுறுசாலி மறையநனி வேழங்க ளோங்கி மலியப்,
புல்லும்வள நீர்நா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -
பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (6)
487 பத்தியெனு மிகுசுவைப் பரவைப் பெருங்கடல் படிந்துவிளை யாடுமனமே -
பகருநிக மாகமா தீதவா னந்தப் பராங்கட லுதித்தவமுதே, தத்தி
விழு மருவிமலி வரையிற் பிறந்தொளி தவாதபிர ணவகுஞ்சரந் -
தன்னைப்புணர்ந்தொரு மருப்பிளங் களிறீன்று தழைதரு நலத்தபிடியே,
சித்தியமை யோகிய ருளக்கமல மூறித் தெவிட்டாது பெருகுதேனே -
தேவர்க்கு மூவர்க்கும் யாவர்க்கு மாறாத செல்வத் தமைந்தவாழ்வே,
புத்தியமை நீர்நா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -
பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (7)
488 இகலரிய பத்திமை யெனப்பகரு மஞ்சனத் தெய்தவெளி யாநிதியமே -
யெற்றைக்கு மகறல்சற் றிலையாக வவ்வலை யிடைப்படுந் தெய்வமானே,
நகலரிய தென்னா தவக்கோக நகமலரு ணாளுமமர் சூட்டன்னமே -
நன்றது விளைந்தமன மாகிய பெருந்தளி நயக்குறு மணித்தீபமே,
பகலரிய சந்தமுங் காரகிலும் யானைப் பருங்கோடும் வெள்வயிரமும் -
பரவுமா ணிக்கமும் வரன்றியிரு கோட்டும் படுத்திரைத் துலவுபொன்னிப்,
புகலரிய நீர்நா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -
பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (8)
489 எண்ணிய பெரும்புவன மெங்கணும் விராய்ப்பொலியு மியல்பின்றி யுந்தேவர்சூ -
ழிடைமருது முதலைங் குரோசப் பெருந்தல மெனப்பகரு மைந்தகத்து,
நண்ணிய பெரும்புகழ்ச் சோமேசம் விசுவேச நாகேச மபிமுகேச -
நாடரிய கௌதமே சம்பாண புரமென நவின்றெவரு மேத்துமீச,
மண்ணிய விரைப்பசிய மாலதிவ னேசமென வவிரிவை முதற்ப•றேத்து -
மாகிய விசேடத்தி னமர்வாய் பெரும்புலவ ராலுமுரை செய்யமுடியாப்,
புண்ணியந னீர்நா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -
பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (9)
490 திகழ்தரு மணிச்சிலம் பாதிபுனை பாதமுஞ் செம்பட் டுடுத்த வரையுஞ் -
செய்யவற முழுதும்வள ரங்கையும் பரஞான தேசுமலி தருகொங்கையு,
மிகழ்தருத லில்லாத வேயையடு தோளுமழ கியமங் கலக்கழுத்து -
மிண்டைமலர் வென்றதிரு முகமுமா ரருள்பொழியு மிணைவிழியு முபமானமுற்,
றகழ்தருவி னுதலுமென் புன்றுதியு மேற்றுமகி ழஞ்செவியு முகில்விளர்க்கு -
மாரளக பாரமு மிகப்பொலிய வண்டபகி ரண்டங்க ளுந்தழைக்கப்,
புகழ்தருந னீர்நா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே -
பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (10)
481 பரவுநர லையினறல் கவர்ந்தகரு முகின்மீப் படர்ந்துவெண் டாரைபொழியப் - பற்றியிரு பாலுமிரு வெண்டிரை யெழுந்தப் பயோதர மளாவநாப்பண், விரவிமொரு வெள்ளோதி மத்தின்மே லக்கடல் விராயவரை நின்றோர்மயின் - மேவியாங் கொண்மர கதம்படுத் தியபுடவி மிசைநிறுவு தூண்வயிரமே, லிரவுதரு நீலவிட் டக்கிடையின் முத்தவட மியையப் பொருத்திமாட்டு - மெறிசுடர்செய் வயிரக் கொழுப்பலகை மேலிவர்ந் தெண்டிசையு மேத்தெடுப்பப், புரவுபுரி சோணா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே - பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (1)
482 மாண்டசெந் தாமரை நடுப்பொலிவ தெனவம் மணக்கோக நகமலர்த்தும் - வண்பரிதி மண்டல நடுப்பொலிவ தென்னவம் மண்டலத் தாலொளிபெறு, நீண்டவழன் மண்டல நடுப்பொலிவ தென்னவொளி நிறைசெம் மணிப்பலகைமே - னிலறை வமர்ந்திருள் குடித்தெழு மணிக்குழை நிலாஞ்செவியி லூசலாட, வேண்டவருள் கைவளை கலித்தாட முகமதியின் வெண்ணகை நிலாவாடநுண் மெல்லிடை துவண்டாட வகிலபுவ னமுமாட மிக்கவள மல்குசீர்த்தி, பூண்டதிரு நீர்நா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே - பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (2)
483 பழிதப வறங்குடிகொ ணினதுசெங் கையமர் பசுங்கிளியை மானவொளிகூர் - பவழச் செழும்பலகை யேறியயி ராணியும் பங்கயத் திருவுமிருபா, லுழியுமிளிர் மணிவடந் தொட்டாட்ட யோகிய ருளக்கமல மேயவனமே - யுண்மைவே தாந்தத் துலாவுமயி லேயெளி துறாதபர ஞானவாழ்வே, வழிவழி நினக்கடிமை யென்றுதுதி நன்றுபுரி மாட்சியர்க் கெய்ப்பில்வைப்பே - மங்களாம் பிகையே யெனக்கனி மனத்தினுயர் வாணிதிரு வூசல்பாடப், பொழிவளப் புனனா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே - பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (3)
484 கொங்குமலர் நின்னடிக் கமலமலர் மிசைதூய்க் குலாவப் பணிந்தெழுந்து - கோலமிகு திருவுருக் கண்டுநெக் குருகிக் குடந்தமுற் றருகுநின்று, தங்குகரு மலமெனப் படுபலகை யுள்ளாற் றகைப்புண் டதற்கியைதரத் - தளையுமிரு வினையாய பாசந் தொடர்ந்தெண் டபுத்தமா யாபுவனமா, மெங்குமுழி தரவலைத் திடவூச லாடுவ தியாங்கடீர்ந் துய்யும்வண்ண - மிலகுமதி நடுவமரு மொருமா னெனத்தரள வெறிசுடர்ப் பலகையேறிப், பொங்குபுன னன்னா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே - பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (4)
485 இருவரும் புணர்மாத ரிருவருந் திருமுகத் தேற்றபா கத்துநின்று - மிலகுமற் றரமாதர் யாவருந் தத்தமக் கேற்றநிலை நின்றுமேத்த, வொருவரு மிருங்கா ருடுத்தபொன் வரைச்சிகர முற்றிலகு பசுமஞ்ஞைபோ - லொளிரிளஞ் சோலைநடு வம்பொன்மணி மேடைமே லுற்றபொற் பலகையேறி, வெருவரும் பெருவாளை தன்னிளஞ் சிறுமீன் வியப்புற்று நோக்கவீனா - மீன்கணம் வெருக்கொள்ள வெடிகொண்டு வானீர் விராய்த்துளைந் தாடிமீளும், பொருவரும் புனனா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே - பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (5)
486 ஒல்லுமிரு நாடிவழி யோடுமிரு காலா லுலாய்த்திரி மனத்தின்வழியே - யோடியை யாறும் புகுந்துபுல னைந்துநுக ருற்றுழல லற்றுமேலாச், சொல்லுமா னாந்தத் தியாந்துளைந் தாடவொண் சூட்டோதி மந்தாமரைத் - தூயபா சடையிவர்ந் தாங்குமுத் தணிபூண்டு சுடர்மர கதப்பலகைமேல், வெல்லுமா தரவுற லிவர்ந்தொளிர் பசுஞ்சாலி லிறல்வேழ மறையவுயரும் - வித்தக முணர்ந்துவிண் ணுறுசாலி மறையநனி வேழங்க ளோங்கி மலியப், புல்லும்வள நீர்நா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே - பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (6)
487 பத்தியெனு மிகுசுவைப் பரவைப் பெருங்கடல் படிந்துவிளை யாடுமனமே - பகருநிக மாகமா தீதவா னந்தப் பராங்கட லுதித்தவமுதே, தத்தி விழு மருவிமலி வரையிற் பிறந்தொளி தவாதபிர ணவகுஞ்சரந் - தன்னைப்புணர்ந்தொரு மருப்பிளங் களிறீன்று தழைதரு நலத்தபிடியே, சித்தியமை யோகிய ருளக்கமல மூறித் தெவிட்டாது பெருகுதேனே - தேவர்க்கு மூவர்க்கும் யாவர்க்கு மாறாத செல்வத் தமைந்தவாழ்வே, புத்தியமை நீர்நா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே - பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (7)
488 இகலரிய பத்திமை யெனப்பகரு மஞ்சனத் தெய்தவெளி யாநிதியமே - யெற்றைக்கு மகறல்சற் றிலையாக வவ்வலை யிடைப்படுந் தெய்வமானே, நகலரிய தென்னா தவக்கோக நகமலரு ணாளுமமர் சூட்டன்னமே - நன்றது விளைந்தமன மாகிய பெருந்தளி நயக்குறு மணித்தீபமே, பகலரிய சந்தமுங் காரகிலும் யானைப் பருங்கோடும் வெள்வயிரமும் - பரவுமா ணிக்கமும் வரன்றியிரு கோட்டும் படுத்திரைத் துலவுபொன்னிப், புகலரிய நீர்நா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே - பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (8)
489 எண்ணிய பெரும்புவன மெங்கணும் விராய்ப்பொலியு மியல்பின்றி யுந்தேவர்சூ - ழிடைமருது முதலைங் குரோசப் பெருந்தல மெனப்பகரு மைந்தகத்து, நண்ணிய பெரும்புகழ்ச் சோமேசம் விசுவேச நாகேச மபிமுகேச - நாடரிய கௌதமே சம்பாண புரமென நவின்றெவரு மேத்துமீச, மண்ணிய விரைப்பசிய மாலதிவ னேசமென வவிரிவை முதற்ப•றேத்து - மாகிய விசேடத்தி னமர்வாய் பெரும்புலவ ராலுமுரை செய்யமுடியாப், புண்ணியந னீர்நா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே - பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (9)
490 திகழ்தரு மணிச்சிலம் பாதிபுனை பாதமுஞ் செம்பட் டுடுத்த வரையுஞ் - செய்யவற முழுதும்வள ரங்கையும் பரஞான தேசுமலி தருகொங்கையு, மிகழ்தருத லில்லாத வேயையடு தோளுமழ கியமங் கலக்கழுத்து - மிண்டைமலர் வென்றதிரு முகமுமா ரருள்பொழியு மிணைவிழியு முபமானமுற், றகழ்தருவி னுதலுமென் புன்றுதியு மேற்றுமகி ழஞ்செவியு முகில்விளர்க்கு - மாரளக பாரமு மிகப்பொலிய வண்டபகி ரண்டங்க ளுந்தழைக்கப், புகழ்தருந னீர்நா டளிக்குமா ரருண்முதல்வி பொன்னூச லாடியருளே - பூக்கமழ் தடத்தகுட மூக்கமிழ் திடத்தமிழ்து பொன்னூச லாடியருளே. (10)
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|