|
||||||||
பூனைக்கண் வெள்ளி |
||||||||
மூலைக்குள் இருக்கும்போதே எரிச்சல்.
போதாக் குறைக்கு எழும்பி நிமிர்கின்ற
தலைவாசல் தொங்கலிலே
வந்திருக்கு சனியன்.
பூனைக்கண் வெள்ளி!
கண்டால் எனக்கு நரிவிரட்டுகின்ற
பூனைக்கண் வெள்ளி!
வெள்ளியென்றால் ஒரு வடிவு
அந்தாசி அசில்
வேண்டாமா!
நாலும் சேர்ந்திருக்கும்,
அண்ணார்ந்து பார்த்தால் நக்கரைத்துக் கைதட்டும்
குழந்தைகளின் கண்ணுக்கும்
ஏதோ போல்தெரியும்.
பார்த்தாலும் பசியாறிப் போகும்.
இது எந்தக் காலத்தில்
விதைவிழுந்து முளைத்ததுவோ?
ஒரு காந்தம் தேய்த்து
அதற்குள்ளும் ஆள் கொஞ்சம் எலிகொழுத்தாற்போல
கொழுத்துத் தனிமையிலே,
தனியேதான் எந்நாளும்
குறட்டைமீன் இல்லாத பள்ளத்துப் பொட்டியானாய்
திமிரோடு எழுகின்ற இவர் கண்ணில் வீரைக்
கொள்ளித் தணலள்ளி நின்றாற்போல் ஏறிய
ஆளில்லை, அங்கே....
அடை
சாத்து
கதவை
மூலைக்குள் இருக்கும்போதே எரிச்சல். போதாக் குறைக்கு எழும்பி நிமிர்கின்ற தலைவாசல் தொங்கலிலே வந்திருக்கு சனியன்.
பூனைக்கண் வெள்ளி! கண்டால் எனக்கு நரிவிரட்டுகின்ற பூனைக்கண் வெள்ளி!
வெள்ளியென்றால் ஒரு வடிவு அந்தாசி அசில் வேண்டாமா!
நாலும் சேர்ந்திருக்கும், அண்ணார்ந்து பார்த்தால் நக்கரைத்துக் கைதட்டும் குழந்தைகளின் கண்ணுக்கும் ஏதோ போல்தெரியும். பார்த்தாலும் பசியாறிப் போகும்.
இது எந்தக் காலத்தில் விதைவிழுந்து முளைத்ததுவோ? ஒரு காந்தம் தேய்த்து அதற்குள்ளும் ஆள் கொஞ்சம் எலிகொழுத்தாற்போல கொழுத்துத் தனிமையிலே, தனியேதான் எந்நாளும் குறட்டைமீன் இல்லாத பள்ளத்துப் பொட்டியானாய் திமிரோடு எழுகின்ற இவர் கண்ணில் வீரைக் கொள்ளித் தணலள்ளி நின்றாற்போல் ஏறிய ஆளில்லை, அங்கே.... அடை சாத்து கதவை
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|