கர்நாடகாவின் முதல்வராக பதவியேற்றுள்ள சித்தராமையா நேற்று பெங்களூர் மாநகராட்சி கலால்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வணிக வரி, கலால் துறை, முத்திரை மற்றும் பதிவுத்துறை, மோட்டார் வாகன வரி ஆகிய துறை அதிகாரிகள் தங்கள் துறைகளின் வருவாயை அதிகரிப்பது குறித்து ஆலோசித்தார். மேலும் கர்நாடகாவில் சாராயத்தை தடை செய்த பிறகு ஏழை மக்கள் அதிக விலை கொடுத்து மது குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, அவர்களுக்கு குறைந்த விலையில் மது கிடைக்க ஏற்பாடு செய்ய வழிவகை செய்யுமாறு அவர் கலால் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கர்நாடக முதல்வரின் இந்த அறிவிப்பால் குடிமகன்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
|