LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

போற்றித் திருஅகவல்

 

நான்முகன் முதலா வானவர் தொழுது எழ 
ஈர் அடியாலே மூவுலகு அளந்து 
நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப் 
போற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று 
அடிமுடி அறியும் ஆதரவு அதனில் 
கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து 
ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து 
ஊழி முதல்வ சயசய என்று 
வழுத்தியும் காணா மலர்அடி இணைகள் 
வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில் 10 
யானை முதலா எறும்பு ஈறாய 
ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும் 
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து 
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும் 
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும் 
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும் 
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் 
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும் 
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் 
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும 20 
ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும் 
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும் 
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் 
தக்க தசமதி தாயொடு தான்படும் 
துக்க சாகரம் துயர் இடைப்பிழைத்தும் 
ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை 
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும் 
காலை மலமொடு கடும்பகல் பசி நிசி 
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும் 
கரும்குழல் செவ்வாய் வெள்நகைக் கார்மயில் 30 
ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்துக் 
கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து 
எய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்து 
ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம் 
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும் 
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள் 
மத்தம் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும் 
கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும் 
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் 
நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் 40 
புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும் 
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி 
முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும் 
ஆறு கோடி மாயா சக்திகள் 
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின 
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி 
நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர் 
சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள் 
பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும் 
விரதமே பரம் ஆக வேதியரும் 50 
சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர் 
சமய வாதிகள் தம்தம் தங்களே 
அமைவது ஆக அரற்றி மலைந்தனர் 
மிண்டிய மாயா வாதம் என்னும் 
சண்ட மாருதம் சுழிந்து அடித்துத் தாஅர்த்து 
உலோகாய தமெனும் ஒள் திறப்பாம்பின் 
கலா பேதத்த கடுவிடம் எய்தி 
அதில் பெருமாயை எனைப்பல சூழவும் 
தப்பாமே தாம் பிடித்தது சலியாத் 
தழலது கண்ட மெழுகு அது போலத் 60 
தொழுது உளம் உருகி அழுது உடல்கம்பித்து 
ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் 
கொடிறும் பேதையும் கொண்டது விடாதென 
படியே ஆகி நல் இடைஅறா அன்பின் 
பசுமரத்து ஆணி அறைந்தால் போலக் 
கசிவது பெருகிக் கடல் என மறுகி 
அகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்துச் 
சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப 
நாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரை 
பூண் அது ஆகக் கோணுதல் இன்றிச் 70 
சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும் 
கதியது பரமா அதிசயம் ஆகக் 
கற்றா மனம் எனக் கதறியும் பதறியும் 
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது 
அருபரத்து ஒருவன் அவனியில் வந்து 
குருபரன் ஆகி அருளிய பெருமையைச் 
சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப் 
பிறிவினை அறியா நிழல் அது போல 
முன் பின்னாகி முனியாது அத்திசை 
என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி 80 
அன்பு எனும் ஆறு கரை அது புரள 
நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி 
உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப 
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக் 
கண்களி கூர நுண் துளி அரும்ப 
சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர் 
தாயே ஆகி வளர்த்தனை போற்றி 
மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக் 
கைதரவல்ல கடவுள் போற்றி 
ஆடக மதுரை அரசே போற்றி 90 
கூடல் இலங்கு குருமணி போற்றி 
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி 
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி 
மூவா நான்மறை முதல்வா போற்றி 
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி 
மின் ஆர் உருவ விகிர்தா போற்றி 
கல் நார் உரித்த கனியே போற்றி 
காவாய் கனகக் குன்றே போற்றி 
ஆ ஆ என்தனக்கு அருளாய் போற்றி 
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்fறி 100 
இடரைக் களையும் எந்தாய் போற்றி 
ஈச போற்றி இறைவா போற்றி 
தேசப் பளிங்கின் திரளே போற்றி 
அரைசே போற்றி அமுதே போற்றி 
விரை சேர் சரண விகிர்தா போற்றி 
வேதி போற்றி விமலா போற்றி 
ஆதி போற்றி அறிவே போற்றி 
கதியே போற்றி கனியே போற்றி 
நதி நேர் நெஞ்சடை நம்பா போற்றி 
உடையாய் போற்றி உணர்வே போற்றி 110 
கடையேன் அடிமை கண்டாய் போற்றி 
ஐயா போற்றி அணுவே போற்றி 
சைவா போற்றி தலைவா போற்றி 
குறியே போற்றி குணமே போற்றி 
நெறியே போற்றி நினைவே போற்றி 
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி 
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி 
மூவேழ் சுற்றமும் முரண் உறு நரகு இடை 
ஆழாமே அருள் அரசே போற்றி 
தோழா போற்றி துணைவா போற்றி 120 
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி 
முத்தா போற்றி முதல்வா போற்றி 
அத்தா போற்றி அரனே போற்றி 
உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி 
விரிகடல் உலகின் விளைவே போற்றி 
அருமையில் எளிய அழகே போற்றி 
கருமுகி லாகிய கண்ணே போற்றி 
மன்னிய திருவருள் மலையே போற்றி 
என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல் 
சென்னியில் வைத்த சேவக போற்றி 130 
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி 
அழிவிலா ஆனந்த வாரி போற்றி 
அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி 
முழுவதும் இறந்த முதல்வா போற்றி 
மான்நேர் நோக்கி மணாளா போற்றி 
வான்அகத்து அமரர் தாயே போற்றி 
பார்இடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி 
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி 
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி 
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140 
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி 
அளிபவர் உள்ளதது அமுதே போற்றி 
கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி 
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி 
இடைமருது உறையும் எந்தாய் போற்றி 
சடைஇடைக் கங்கை தரித்தாய் போற்றி 
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி 
சீர் ஆர் திருவையாறா போற்றி 
அண்ணாமலை எம் அண்ணா போற்றி 
கண் ஆர் அமுதக் கடலே போற்றி 150 
ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி 
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி 
பராய்த் துறை மேவிய பரனே போற்றி 
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி 
மற்று ஓர் பற்று இங்கு அறியோன் போற்றி 
குற்றாலத்து எம் கூத்தா போற்றி 
கோகழி மேவிய கோவே போற்றி 
ஈங்கோய் மலை எந்தாய் போற்றி 
பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி 
கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160 
அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி 
இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு 
அத்திக்கு அருளிய அரசே போற்றி 
தென்னாடுடைய சிவனே போற்றி 
என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி 
ஏனக் குருளைக்கு அருளினை போற்றி 
மானக் கயிலை மலையாய் போற்றி 
அருளிட வேண்டும் அம்மான் போற்றி 
இருள் கெட அருளும் இறைவா போற்றி 
தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170 
களம் கொளக் கருத அருளாய் போற்றி 
அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி 
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி 
அத்தா போற்றி ஐயா போற்றி 
நித்தா போற்றி நிமலா போற்றி 
பத்தா போற்றி பவனே போற்றி 
பெரியாய் போற்றி பிரானே போற்றி 
அரியாய் போற்றி அமலா போற்றி 
மறையோர் கோல நெறியே போற்றி 
முறையோ தரியேன் முதல்வா போற்றி 180 
உறவே போற்றி உயிரே போற்றி 
சிறவே போற்றி சிவமே போற்றி 
மஞ்சா போற்றி மணாளா போற்றி 
பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி 
அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி 
இலங்கு சுடர் எம் ஈசா போற்றி 
சுவைத்தலை மேவிய கண்ணே போற்றி 
குவைப்பதி மலிந்த கோவே போற்றி 
மலை நாடு உடைய மன்னே போற்றி 
கலை ஆர் அரிகேசரியாய் போற்றி 190 
திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி 
பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி 
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி 
மருவிய கருணை மலையே போற்றி 
துரியமும் இறந்த சுடரே போற்றி 
தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி 
தேளா முத்தச் சுடரே போற்றி 
ஆள் ஆனவர்களுக்கு அன்பா போற்றி 
ஆரா அமுதே அருளா போற்றி 
பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி 200 
தாளி அறுகின் தாராய் போற்றி 
நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி 
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி 
சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி 
மந்திர மாமலை மேயாய் போற்றி 
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி 
புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி 
அலைகடல் மீ மிசை நடந்தாய் போற்றி 
கரும் குருவிக்கு அன்று அருளினை போற்றி 
இரும் புலன் புலர இசைந்தனை போற்றி 210 
படி உறப் பயின்ற பாவக போற்றி 
அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி 
நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல் 
பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி 
ஒழவற நிறைந்த ஒருவ போற்றி 
செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி 
கழு நீர் மாலைக் கடவுள் போற்றி 
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி 
பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன் 
குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி 220 
புரம்பல் எரித்த புராண போற்றி 
பரம் பரம் சோதிப் பரனே போற்றி 
போற்றி போற்றி புயங்கப் பெருமான் 
போற்றி போற்றி புராண காரண 
போற்றி போற்றி சய சய போற்றி 225 

 

நான்முகன் முதலா வானவர் தொழுது எழ 

ஈர் அடியாலே மூவுலகு அளந்து 

நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப் 

போற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று 

அடிமுடி அறியும் ஆதரவு அதனில் 

கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து 

ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து 

ஊழி முதல்வ சயசய என்று 

வழுத்தியும் காணா மலர்அடி இணைகள் 

வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில் 10 

 

யானை முதலா எறும்பு ஈறாய 

ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும் 

மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து 

ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும் 

ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும் 

இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும் 

மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் 

ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும் 

அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் 

ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும 20 

 

ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும் 

எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும் 

ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் 

தக்க தசமதி தாயொடு தான்படும் 

துக்க சாகரம் துயர் இடைப்பிழைத்தும் 

ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை 

ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும் 

காலை மலமொடு கடும்பகல் பசி நிசி 

வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும் 

கரும்குழல் செவ்வாய் வெள்நகைக் கார்மயில் 30 

 

ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்துக் 

கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து 

எய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்து 

ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம் 

கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும் 

பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள் 

மத்தம் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும் 

கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும் 

செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் 

நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் 40 

 

புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும் 

தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி 

முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும் 

ஆறு கோடி மாயா சக்திகள் 

வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின 

ஆத்தம் ஆனார் அயலவர் கூடி 

நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர் 

சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள் 

பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும் 

விரதமே பரம் ஆக வேதியரும் 50 

 

சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர் 

சமய வாதிகள் தம்தம் தங்களே 

அமைவது ஆக அரற்றி மலைந்தனர் 

மிண்டிய மாயா வாதம் என்னும் 

சண்ட மாருதம் சுழிந்து அடித்துத் தாஅர்த்து 

உலோகாய தமெனும் ஒள் திறப்பாம்பின் 

கலா பேதத்த கடுவிடம் எய்தி 

அதில் பெருமாயை எனைப்பல சூழவும் 

தப்பாமே தாம் பிடித்தது சலியாத் 

தழலது கண்ட மெழுகு அது போலத் 60 

 

தொழுது உளம் உருகி அழுது உடல்கம்பித்து 

ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் 

கொடிறும் பேதையும் கொண்டது விடாதென 

படியே ஆகி நல் இடைஅறா அன்பின் 

பசுமரத்து ஆணி அறைந்தால் போலக் 

கசிவது பெருகிக் கடல் என மறுகி 

அகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்துச் 

சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப 

நாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரை 

பூண் அது ஆகக் கோணுதல் இன்றிச் 70 

 

சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும் 

கதியது பரமா அதிசயம் ஆகக் 

கற்றா மனம் எனக் கதறியும் பதறியும் 

மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது 

அருபரத்து ஒருவன் அவனியில் வந்து 

குருபரன் ஆகி அருளிய பெருமையைச் 

சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப் 

பிறிவினை அறியா நிழல் அது போல 

முன் பின்னாகி முனியாது அத்திசை 

என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி 80 

 

அன்பு எனும் ஆறு கரை அது புரள 

நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி 

உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப 

கரமலர் மொட்டித்து இருதயம் மலரக் 

கண்களி கூர நுண் துளி அரும்ப 

சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர் 

தாயே ஆகி வளர்த்தனை போற்றி 

மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக் 

கைதரவல்ல கடவுள் போற்றி 

ஆடக மதுரை அரசே போற்றி 90 

 

கூடல் இலங்கு குருமணி போற்றி 

தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி 

இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி 

மூவா நான்மறை முதல்வா போற்றி 

சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி 

மின் ஆர் உருவ விகிர்தா போற்றி 

கல் நார் உரித்த கனியே போற்றி 

காவாய் கனகக் குன்றே போற்றி 

ஆ ஆ என்தனக்கு அருளாய் போற்றி 

படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்fறி 100 

 

இடரைக் களையும் எந்தாய் போற்றி 

ஈச போற்றி இறைவா போற்றி 

தேசப் பளிங்கின் திரளே போற்றி 

அரைசே போற்றி அமுதே போற்றி 

விரை சேர் சரண விகிர்தா போற்றி 

வேதி போற்றி விமலா போற்றி 

ஆதி போற்றி அறிவே போற்றி 

கதியே போற்றி கனியே போற்றி 

நதி நேர் நெஞ்சடை நம்பா போற்றி 

உடையாய் போற்றி உணர்வே போற்றி 110 

 

கடையேன் அடிமை கண்டாய் போற்றி 

ஐயா போற்றி அணுவே போற்றி 

சைவா போற்றி தலைவா போற்றி 

குறியே போற்றி குணமே போற்றி 

நெறியே போற்றி நினைவே போற்றி 

வானோர்க்கு அரிய மருந்தே போற்றி 

ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி 

மூவேழ் சுற்றமும் முரண் உறு நரகு இடை 

ஆழாமே அருள் அரசே போற்றி 

தோழா போற்றி துணைவா போற்றி 120 

 

வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி 

முத்தா போற்றி முதல்வா போற்றி 

அத்தா போற்றி அரனே போற்றி 

உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி 

விரிகடல் உலகின் விளைவே போற்றி 

அருமையில் எளிய அழகே போற்றி 

கருமுகி லாகிய கண்ணே போற்றி 

மன்னிய திருவருள் மலையே போற்றி 

என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல் 

சென்னியில் வைத்த சேவக போற்றி 130 

 

தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி 

அழிவிலா ஆனந்த வாரி போற்றி 

அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி 

முழுவதும் இறந்த முதல்வா போற்றி 

மான்நேர் நோக்கி மணாளா போற்றி 

வான்அகத்து அமரர் தாயே போற்றி 

பார்இடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி 

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி 

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி 

வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140 

 

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி 

அளிபவர் உள்ளதது அமுதே போற்றி 

கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி 

நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி 

இடைமருது உறையும் எந்தாய் போற்றி 

சடைஇடைக் கங்கை தரித்தாய் போற்றி 

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி 

சீர் ஆர் திருவையாறா போற்றி 

அண்ணாமலை எம் அண்ணா போற்றி 

கண் ஆர் அமுதக் கடலே போற்றி 150 

 

ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி 

பாகம் பெண் உரு ஆனாய் போற்றி 

பராய்த் துறை மேவிய பரனே போற்றி 

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி 

மற்று ஓர் பற்று இங்கு அறியோன் போற்றி 

குற்றாலத்து எம் கூத்தா போற்றி 

கோகழி மேவிய கோவே போற்றி 

ஈங்கோய் மலை எந்தாய் போற்றி 

பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி 

கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160 

 

அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி 

இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு 

அத்திக்கு அருளிய அரசே போற்றி 

தென்னாடுடைய சிவனே போற்றி 

என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி 

ஏனக் குருளைக்கு அருளினை போற்றி 

மானக் கயிலை மலையாய் போற்றி 

அருளிட வேண்டும் அம்மான் போற்றி 

இருள் கெட அருளும் இறைவா போற்றி 

தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170 

 

களம் கொளக் கருத அருளாய் போற்றி 

அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி 

நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி 

அத்தா போற்றி ஐயா போற்றி 

நித்தா போற்றி நிமலா போற்றி 

பத்தா போற்றி பவனே போற்றி 

பெரியாய் போற்றி பிரானே போற்றி 

அரியாய் போற்றி அமலா போற்றி 

மறையோர் கோல நெறியே போற்றி 

முறையோ தரியேன் முதல்வா போற்றி 180 

 

உறவே போற்றி உயிரே போற்றி 

சிறவே போற்றி சிவமே போற்றி 

மஞ்சா போற்றி மணாளா போற்றி 

பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி 

அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி 

இலங்கு சுடர் எம் ஈசா போற்றி 

சுவைத்தலை மேவிய கண்ணே போற்றி 

குவைப்பதி மலிந்த கோவே போற்றி 

மலை நாடு உடைய மன்னே போற்றி 

கலை ஆர் அரிகேசரியாய் போற்றி 190 

 

திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி 

பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி 

அருவமும் உருவமும் ஆனாய் போற்றி 

மருவிய கருணை மலையே போற்றி 

துரியமும் இறந்த சுடரே போற்றி 

தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றி 

தேளா முத்தச் சுடரே போற்றி 

ஆள் ஆனவர்களுக்கு அன்பா போற்றி 

ஆரா அமுதே அருளா போற்றி 

பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி 200 

 

தாளி அறுகின் தாராய் போற்றி 

நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி 

சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி 

சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி 

மந்திர மாமலை மேயாய் போற்றி 

எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி 

புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி 

அலைகடல் மீ மிசை நடந்தாய் போற்றி 

கரும் குருவிக்கு அன்று அருளினை போற்றி 

இரும் புலன் புலர இசைந்தனை போற்றி 210 

 

படி உறப் பயின்ற பாவக போற்றி 

அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி 

நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல் 

பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி 

ஒழவற நிறைந்த ஒருவ போற்றி 

செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி 

கழு நீர் மாலைக் கடவுள் போற்றி 

தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி 

பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன் 

குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி 220 

 

புரம்பல் எரித்த புராண போற்றி 

பரம் பரம் சோதிப் பரனே போற்றி 

போற்றி போற்றி புயங்கப் பெருமான் 

போற்றி போற்றி புராண காரண 

போற்றி போற்றி சய சய போற்றி 225 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.