“பூவுலகின் நண்பர்கள்” அமைப்பு தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வகைகளில் செயல்பட்டு வருகிறது.
1990 களில் சுற்றுச்சூழல் ஆர்வம் மிக்க இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி இந்த இயக்கம் துவங்கப்பட்டது.
தனியாகவும் புவியின் நண்பர்கள், உலகளாவிய நிதியம், பசுமை அமைதி (Greenpeace), பினாங்கு பயனீட்டாளர் சங்கம் போன்ற அமைப்புகளோடும் இணைந்தும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் “பூவுலகின் நண்பர்கள்” ஈடுபட்டனர். பூவுலகு எனும் பெயரில் இரு மாதத்திற்கு ஒருமுறை வெளியாகும் சூழல் இதழையும் வெளியிட்டு வருகின்றனர்.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றி நூல் பதிப்பித்தல், பரப்புதல், தீர்வுகளை பரிந்துரைத்தல், ஆதரவை திரட்டுதல், தொடர்பியல் கருவிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி அளித்தல், சட்ட ஆலோசனை வழங்குதல், ஒத்துணர்வுள்ள அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல் ஆகியவை மூலம் அனைத்து வர்க்க மக்களிடமும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை உருவாக்கும் பணியை இவ்வியக்கம் செய்து வருகிறது.
|