|
|||||
பாப்கார்னால் இவ்வளவு நன்மையா? |
|||||
ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்படியென்றால் பாப்-கார்ன் வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் பாப்-கார்னில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. காரணம் பாப்-கார்ன் மக்காசோனத்தினால் செய்யப்படுகிறது. மக்காச்சோளத்தை சூடாக்கி பாப்கார்ன் செய்வதால் அதன் சத்துக்கள் அனைத்தும் போய் விடுகின்றன என்று நிறைய பேர் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல, பாப்-கார்னில் இனிப்பு அல்லது உப்பு என்று சுவைக்காக எதை சேர்த்தாலும், அதில் இருக்கும் சத்துக்கள் மாறாமல் இருக்கும். இப்போது அந்த பாப்-கார்னில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை பார்க்கலாம்.
நார்ச்சத்துக்கள் : பழங்கள் மற்றும் காய்களில் இருப்பதைப் போன்று இதிலும் அதிக அளவு நார்ச்சத்து அடங்கியுள்ளது. ஆகவே ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் சிப்ஸ் மற்றும் பர்கர் போன்றவைகளை சாப்பிடுவதை விட பாப்-கார்ன் மிகவும் சிறந்தது.
மேலும் பாப்-பார்னில் பாலிஃபினால் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது என்றும் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற சத்துக்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இதில் இருக்கும் பாலிஃபினால் உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல், பாப்-கார்னில் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான அளவு சத்துக்களில் 13% சத்துக்கள் கிடைக்கின்றது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பசியின்மை, புற்றுநோய், வயிற்றில் ஏற்படும் பிரச்சனை, இதய நோய் போன்றவை ஏற்படாமல் கட்டுப்படுத்தும். அதிலும் உடலில் செரிமானத் தன்மையை அதிகரிப்பதோடு, அழகான சருமத்தையும் தரும். பாப்கார்னில் இவ்வளவு நன்மைகளா! பாப்கார்னை உண்போம் நலமுடன் வாழ்வோம். |
|||||
by Swathi on 28 Sep 2012 0 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|