தேவையானவை :
காலிஃபிளவர் - 1 கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3 வரை மஞ்சள் தூள் - 2 சிட்டிகை இஞ்சி – ஒரு துண்டு எண்ணை - 1 டேபிள்ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது செய்முறை: முதலில் காலிஃபிளவரிலிருந்து, பூக்களை தனித்தனியாக பிரித்தெடுக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் காலிஃபிளவர், மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விட்டு, காலிஃபிளவரை எடுத்து தனியாக வைக்கவும். ஒரு கடாயில் எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு, மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வறுத்தெடுத்து ஆறியதும் மிக்ஸியில்நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். பின்பு வேறொருகடாயில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு ,உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் அதில் காலிஃபிளவரைச் சேர்த்து, உப்பும் போட்டுக் கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் வேக விடவும்.
கடைசியில் பொடித்து வைத்துள்ளப் பொடியைத் தூவி நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.
|