பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் - பயனின் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார், 'மருள் தீர்ந்த' மாசுஅறு காட்சியவர் - மயக்கத்தின் நீங்கிய தூய அறிவினையுடையார். "('தூய அறிவு' மெய்யறிவு. 'மருள் தீர்ந்த' என்னும் பெயரெச்சம் காட்சியவர் என்னும் குறிப்புப்பெயர் கொண்டது. இவை மூன்று பாட்டானும் பயன்இல சொல்லாமையின் குணம் கூறப்பட்ட.து)
மணக்குடவர் உரை:
பொருளில்லாத சொல்லை மறந்துஞ் சொல்லார்; மயக்கந் தீர்ந்த குற்றமற்ற தெளிவினை யுடையார்,
இது தெளிவுடையார் கூறாரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
மருள் தீரந்த மாசு அறு காட்சியவர் - மயக்கத்தினின்று நீங்கிய குற்ற மற்ற அறிவுடையார்; பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் -பயனில்லாத சொற்களை மறந்துஞ் சொல்லார்.
மயக்கம் ஐயமுந் திரிபும். குற்ற மற்ற அறிவு மெய்யறிவு அல்லது தூய அறிவு.
கலைஞர் உரை:
மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற
சொற்களைச் சொல்ல மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.
Translation
The men of vision pure, from wildering folly free,
Not e'en in thoughtless hour, speak words of vanity.
Explanation
Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not.