LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பத்துப்பாட்டு

பொரும்பாணாற்றுப்படை

 

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது. 
நூல்
பொருநனை விளித்தல்
அறாஅ யாணரகன் றலைப் பேரூர்ச்
சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது
வேறுபுல முன்னிய விரகறி பொருந  
பாலையாழின் அமைப்பு
குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல்
விளக்கழ லுருவின் விசியுறு பச்சை. 5
எய்யா விளஞ்சூற் செய்யோ ளவ்வயிற்
றைதுமயி ரொழுகிய தோற்றம் போலப்
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
அளைவா ழலவன் கண்கண் டன்ன
துளைவாய் தூர்ந்த துரப்பமை யாணி.. 10
எண்ணாட் டிங்கள் வடிவிற் றாகி
அண்ணா வில்லா அமைவரு வறுவாய்ப் 
பாம்பணந் தன்ன வோங்கிரு மருப்பின் 
மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும்
கண்கூ டிருக்கைத் திண்பிணித் திவவின். 15
ஆய்தினை யரிசி யவைய லன்ன
வேய்வை போகிய விரலுளர் நரம்பின்
கேள்வி போகிய நீள்விசித் தொடையல்
மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன
அணங்குமெய்ந் நின்ற அமைவரு காட்சி. 20
ஆறலை கள்வர் படைவிட அருளின் 
மாறுதலை பெயர்க்கு மருவுஇன் பாலை  
யாழை மீட்டிப் பாடுதல்
வாரியும் வடித்தும் உந்தியு முறழ்ந்தும்
சீருடை நன்மொழி நீரொடு சிதறி  
பாடினியின் கேசாதிபாத வருணனை
அறல்போற் கூந்தல் பிறைபோல் திருநுதற் 25
கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண் 
இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்ப் 
பலஉறு முத்திற் பழிதீர் வெண்பல்
மயிர்குறை கருவி மாண்கடை யன்ன
பூங்குழை ஊசற் பொறைசால் காதின் 30
நாண்அடச் சாய்ந்த நலங்கிள ரெருத்தின்
ஆடமைப் பணைத்தோ ளரிமயிர் முன்கை
நெடுவரை மிசைஇய காந்தள் மெல்விரற்
கிளிவா யொப்பி னொளிவிடு வள்ளுகிர்
அணங்கென உருத்த சுணங்கணி யாகத் 35
தீர்க்கிடை போகா ஏரிள வனமுலை
நீர்ப்பெயற் சுழியி னிறைந்த கொப்பூழ்
உண்டென வுணரா உயவும் நடுவின்
வண்டிருப் பன்ன பல்காழ் அல்குல்
இரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கின் 40
பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட் கொப்ப 
வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி
அரக்குருக் கன்ன செந்நில னொதுங்கலிற்
பரற்பகை யுழந்த நோயொடு சிவணி
மரற்பழுத் தன்ன மறுகுநீர் மொக்குள் 45
நன்பக லந்தி நடையிடை விலங்கலிற்
பெடைமயி லுருவிற் பெருந்தகு பாடினி  
காடுறை தெய்வத்திற்குக் கடன் கழித்தல்
பாடின பாணிக் கேற்ப நாடொறும்
களிறு வழங்கதர்க் கானத் தல்கி
இலைஇல் மராஅத்த எவ்வந் தாங்கி 50
வலைவலந் தன்ன மென்னிழன் மருங்கிற்
காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றைப்  
பரிசு பெற்றோன் பெறாதோனை விளித்தல்
பீடுகெழு திருவிற் பெரும்பெயர் நோன்றாள் 
முரசுமுழங்கு தானை மூவருங் கூடி
அரசவை யிருந்த தோற்றம் போலப் 55
பாடல் பற்றிய பயனுடை எழாஅற்
கோடியர் தலைவ கொண்ட தறிந
அறியா மையி னெறிதிரிந் தொராஅ
தாற்றெதிர்ப் படுதலு நோற்றதன் பயனே
போற்றிக் கேண்மதி புகழ்மேம் படுந 60
பரிசு பெற்றோன் பாடின முறை
ஆடுபசி யுழந்தநின் இரும்பே ரொக்கலொடு
நீடுபசி யொராஅல் வேண்டி னீடின்
றெழுமதி வாழி ஏழின் கிழவ
பழுமர முள்ளிய பறவையின் யானுமவன்
இழுமென் சும்மை யிடனுடை வரைப்பின் 65
நசையுநர்த் தடையா நன்பெரு வாயில் 
இசையேன் புக்கென் இடும்பை தீர
எய்த்த மெய்யே னெய்யே னாகிப்
பைத்த பாம்பின் துத்தி யேய்ப்பக்
கைக்கச டிருந்தவென் கண்ணகன் தடாரி 70
இருசீர்ப் பாணிக் கேற்ப விரிகதிர்
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல்
ஓன்றியான் பெட்டா அளவையி னொன்றிய  
அரசன் விருந்தோம்பலின் சிறப்பு
கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்பக் கூறிக் 75
கண்ணிற் காண நண்ணுவழி இரீஇப்
பருகு அன்ன அருகா நோக்கமொடு
உருகு பவைபோ லென்பு குளிர்கொளீஇ
ஈரும் பேனும் இருந்திறை கூடி
வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த 80
துன்னற் சிதாஅர் துவர நீக்கி
நோக்குநுழை கல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவுரி யன்ன அறுவை நல்கி
மழையென மருளும் மகிழ்செய் மாடத்து
இழையணி வனப்பி னின்னகை மகளிர் 85
போக்கில் பொலங்கல நிறையப் பல்கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட
ஆர வுண்டு பேரஞர் போக்கிச்
செருக்கொடு நின்ற காலை  
இரவில் சுற்றத்துடன் கவலையின்றித் தூங்கி எழுதல்
மற்றவன்
திருக்கிளர் கோயி லொருசிறைத் தங்கித் 90
தவஞ்செய் மாக்கள் தம்முடம் பிடாஅ
ததன்பய மெய்திய வளவை மான
ஆறுசெல் வருத்தம் அகல நீக்கி
அனந்தர் நடுக்க மல்ல தியாவதும்
மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து 95
காலையில் அரசவைக்குச் செல்லுதல்
மாலை யன்னதோர் புன்மையுங் காலைக்
கண்டோட் மருளும் வண்டுசூழ் நிலையும்
கனவென மருண்டவென் னெஞ்சே மாப்ப 
வல்லஞர் பொத்திய மனம்மகிழ் சிறப்பக்
கல்லா இளைஞர் சொல்லிக் காட்டக். 100
அரசனை அணுகுதல்
கதுமெனக் கரைந்து வம்மெனக் கூஉய்
அதன்முறை கழிப்பிய பின்றைப் பதனறிந்து  
உணவு கொடுத்து ஓம்பிய முறை
துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின்
பராஅரை வேவை பருகெனத் தண்டிக்
காழிற் சுட்ட கோழூன் கொழூங்குறை 105
ஊழின் ஊழின் வாய்வெய் தொற்றி
அவையவை முனிகுவ மெனினே சுவைய
வேறுபல் லுருவின் விரகுதந் திரீஇ
மண்ணமை முழவின் பண்ணமை சீறியாழ்
ஒண்ணுதல் விறலியர் பாணி தூங்க 110
மகிழ்ப்பதம் பன்னாட் கழிப்பி யொருநாள்
அவிழ்ப்பதங் கொள்கென் றிரப்ப முகிழ்த்தகை 
முரவை போகிய முரியா அரிசி
விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல்
பரல்வறைக் கருனை காடியின் மிதப்ப. 115
அயின்ற காலைப் பயின்றினி திருந்து
கொல்லை உழுகொழு ஏய்ப்பப் பல்லே
எல்லையு மிரவும் ஊன்றின்று மழுங்கி
உயிர்ப்பிடம் பெறாஅ தூண்முனிந்  
ஊருக்குச் செல்லப் பரிசிலன் விரும்புதல
தொருநாள்
செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய 120
செல்வ சேறுமெந் தொல்பதிர் பெயர்ந்தென
மெல்லெனக் கிளந்தன மாக  
அரசன் பிரிய மனமின்றிப் பரிசு வழங்கி அனுப்புதல்
வல்லே
அகறி ரொவெம் ஆயம் விட்டென
சிரறிய வன்போற் செயிர்த்த நோக்கமொடு
துடியடி யன்ன தூங்குநடைக் குழவியொடு 125
பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கெனத்
தன்னறி யளவையின் தரத்தர யானும்
என்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண்டு
இன்மை தீர வந்தனென்  
கரிகால் வளவனது சிறப்புக்கள்
வென்வேல்
உருவப் பஃறேர் இளையோன் சிறுவன் 130
முருகற் சீற்றத் துருகெழு குருசில்
தாய்வயிற் றிருந்து தாய மெய்தி
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்பச்
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்பப்
பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி 135
வெல்வெஞ் செல்வன் விசும்புபடர்ந் தாங்குப் 
பிறந்துதவழ் கற்றதற் றொட்டுச் சிறந்தநன் 
னாடுசெகிற் கொண்டு நாடொறும் வளர்ப்ப  
வெண்ணிப் போர் வெற்றி
ஆளி நன்மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி 140
முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத்
தலைக்கோள் வேட்டங் களிறட் டாஅங்கு
இரும்பனம் போந்தைத் தோடுங் கருஞ்சினை
அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும்
ஒங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த 145
இருபெரு வேந்தரு மொருகளத் தவிய
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாட்
கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்
தாணிழல் மருங்கி னணுகுபு குறுகித்
தொழுதுமுன் னிற்குவி ராயிற் 150
கரிகாலனது கொடையின் சிறப்பு
பழுதின்
றீற்றா விருப்பிற் போற்றுபு நோக்கிநும்
கையது கேளா அளவை ஒய்யெனப் 
பாசி வேரின் மாசொடு குறைந்த 
துன்னற் சிதாஅர் நீக்கித் தூய
கொட்டைக் கரைய பட்டுடை நல்கிப் 155
பெறலருங் கலத்திற் பெட்டாங் குண்கெனப் 
பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தர
வைகல் வைகல் கைகவி பருகி
எரியகைந் தன்ன வேடில் தாமரை
சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி. 160
நூலின் வலவா நுணங்கரில் மாலை 
வாலொளி முத்தமொடு பாடினி யணியக்
கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஊட்டுளை துயல்வர வோரி நுடங்கப்
பால்புரை புரவி நால்குடன் பூட்டிக் 165
காலி னேழடிப் பின்சென்று கோலின்
தாறுகளைந் தேறென் றேற்றி வீறுபெறு
பேரியாழ் முறையுழிக் கழிப்பி நீர்வாய்த்
தண்பணை தழீஇய தளரா விருக்கை
நன்பல் லூர நாட்டொடு நன்பல். 170
வெரூஉப்பறை நுவலும் பரூஉப்பெருந் தடக்கை
வெருவரு செலவின் வெகுளி வேழம்
தரவிடைத் தங்கலோ விலனே வரவிடைப்
பெற்றவை பிறர்பிறர்க் கார்த்தித் தெற்றெனச்
செலவுகடைக் கூட்டுதி ராயிற் பலபுலந்து 175
நில்லா வுலகத்து நிலைமை தூக்கிச்
செல்கென விடுக்குவ னல்ல  
சோழ நாட்டின் வளமும் வனப்பும்
நொல்லெனத்
திரை பிறழிய விரும் பெளவத்துக்
கரை சூழ்ந்த அகன் கிடக்கை
மா மாவின் வயின் வயினெற். 180
றாழ் தாழைத் தண் டண்டலைக்
கூடு கெழீஇய குடி வயினாற்
செஞ் சோற்ற பலி மாங்திய
கருங் காக்கை கவவு முனையின்
மனை நொச்சி நிழலாங் கண் 185
ஈற்றி யாமைதன் பார்ப்பு ஓம்பவும்
இளையோர் வண்ட லயரவும் முதியோர்
அவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் சொலவும்
முடக் காஞ்சிச் செம் மருதின்
மடக் கண்ண மயில் ஆலப் 190
பைம் பாகற் பழந் துணரிய
செஞ் சுளைய கனி மாந்தி
அறைக் கரும்பி னரி நெல்லின் 
இனக் களமர் இசை பெருக
வற ளடும்பி னிவர் பகன்றைத் 195
தளிர்ப் புன்கின் றாழ் காவின்
நனை ஞாழலொடு மரங் குழீஇய
அவண் முனையி னகன்று மாறி
அவிழ் தளவி னகன் தோன்றி
நகு முல்லை யுகுதேறு வீப் 200
பொற் கொன்றை மணிக் காயா
நற் புறவி னடை முனையிற்
சுற வழங்கும் இரும் பெளவத்
திற வருந்திய இன நாரை
பூம் புன்னைச் சினைச் சேப்பின் 205
ஒங்கு திரை யொலிவெரீ இத்
தீம் பெண்ணை மடற் சேப்பவும்
கோட் டெங்கின் குலை வாழைக்
கொழுங் காந்தண் மலர் நாகத்துத்
துடிக் குடிஞைக் குடிப் பாக்கத்துக். 210
யாழ் வண்டின் கொளைக் கேற்பக்
கலவம் விரித்த மட மஞ்ஞை
நில வெக்கர்ப் பல பெயரத்  
நில மயக்கமும் நல் ஆட்சியும்
தேனெய் யொடு கிழங்கு மாறியோர்
மீனெய் யொடு நறவு மறுகவும் 215
தீங் கரும்போ டவல் வகுத்தோர் 
மான் குறையொடு மது மறுகவும் 
குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்
நறும்பூங் கண்ணி குறவர் சூடக்
கானவர் மருதம் பாட அகவர் 220
நீனிற முல்லைப் பஃறிணை நுவலக்
கானக் கோழி கதிர் குத்த 
மனைக் கோழி தினைக் கவர 
வரை மந்தி கழி மூழ்க
கழி நாரை வரை யிறுப்பத் 225
தண் வைப்பினா னாடு குழீஇ
மண் மருங்கினான் மறு வின்றி
ஒரு குடையா னென்று கூறப்
பெரி தாண்ட பெருங் கேண்மை
அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல் 230
அன்னோன் வாழி வென்வேற் குருசில்  
காவிரியின் வெள்ளச் சிறப்பு
மன்னர் நடுங்கத் தோன்றிப் பன்மாண்
எல்லை தருநன் பல்கதிர் பரப்பிக்
குல்லை கரியவுங் கோடெரி நைப்பவும்
அருவி மாமலை நிழத்தவு மற்றக் 235
கருவி வானங் கடற்கோள் மறப்பவும்
பெருவற னாகிய பண்பில் காலையும்
நறையும் நரந்தமு மகிலு மாரமும்
துறைதுறை தோறும் பொறையுயிர்த் தொழுகி
நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பகம் புகுதொறும். 240
புனலாடு மகளிர் கதுமெனக் குடையக்  
காவிரி நாட்டு வயல் வளம்
கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து 
சூடுகோ டாகப் பிறக்கி நாடொறும் 
குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும் 245
சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கு நாடுகிழ வோனே  
பொருநராற்றுப்படை முற்றிற்று.
தனிப் பாடல்கள்
ஏரியும், ஏற்றத் தினானும், பிறர் நாட்டு 
வாரி சுரக்கும் வளன் எல்லாம் - தேரின், 
அரிகாலின் கீழ் கூஉம் அந் நெல்லே சாலும் 
கரிகாலன் காவிரி சூழ் நாடு. 
1
அரிமா சுமந்த அமளி மேலானைத் 
திருமாவளவன் எனத் தேறேன்; - திரு மார்பின் 
மான மால் என்றே தொழுதேன்; தொழுத கைப் 
போனவா பெய்த வளை! 
2
முச் சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால் 
இச் சக்கரமே அளந்ததால்-செய்ச் செய் 
அரிகால்மேல் தேன் தொடுக்கும் ஆய் புனல் நீர்நாடன் 
கரிகாலன் கால் நெருப்பு உற்று. 
3

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது. 
நூல்

பொருநனை விளித்தல்

அறாஅ யாணரகன் றலைப் பேரூர்ச்சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாதுவேறுபுல முன்னிய விரகறி பொருந  

பாலையாழின் அமைப்பு

குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல்விளக்கழ லுருவின் விசியுறு பச்சை. 5எய்யா விளஞ்சூற் செய்யோ ளவ்வயிற்றைதுமயி ரொழுகிய தோற்றம் போலப்பொல்லம் பொத்திய பொதியுறு போர்வைஅளைவா ழலவன் கண்கண் டன்னதுளைவாய் தூர்ந்த துரப்பமை யாணி.. 10எண்ணாட் டிங்கள் வடிவிற் றாகிஅண்ணா வில்லா அமைவரு வறுவாய்ப் பாம்பணந் தன்ன வோங்கிரு மருப்பின் மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும்கண்கூ டிருக்கைத் திண்பிணித் திவவின். 15ஆய்தினை யரிசி யவைய லன்னவேய்வை போகிய விரலுளர் நரம்பின்கேள்வி போகிய நீள்விசித் தொடையல்மணங்கமழ் மாதரை மண்ணி யன்னஅணங்குமெய்ந் நின்ற அமைவரு காட்சி. 20ஆறலை கள்வர் படைவிட அருளின் மாறுதலை பெயர்க்கு மருவுஇன் பாலை  

யாழை மீட்டிப் பாடுதல்

வாரியும் வடித்தும் உந்தியு முறழ்ந்தும்சீருடை நன்மொழி நீரொடு சிதறி  

பாடினியின் கேசாதிபாத வருணனை

அறல்போற் கூந்தல் பிறைபோல் திருநுதற் 25கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண் இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்ப் பலஉறு முத்திற் பழிதீர் வெண்பல்மயிர்குறை கருவி மாண்கடை யன்னபூங்குழை ஊசற் பொறைசால் காதின் 30நாண்அடச் சாய்ந்த நலங்கிள ரெருத்தின்ஆடமைப் பணைத்தோ ளரிமயிர் முன்கைநெடுவரை மிசைஇய காந்தள் மெல்விரற்கிளிவா யொப்பி னொளிவிடு வள்ளுகிர்அணங்கென உருத்த சுணங்கணி யாகத் 35தீர்க்கிடை போகா ஏரிள வனமுலைநீர்ப்பெயற் சுழியி னிறைந்த கொப்பூழ்உண்டென வுணரா உயவும் நடுவின்வண்டிருப் பன்ன பல்காழ் அல்குல்இரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கின் 40பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட் கொப்ப வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடிஅரக்குருக் கன்ன செந்நில னொதுங்கலிற்பரற்பகை யுழந்த நோயொடு சிவணிமரற்பழுத் தன்ன மறுகுநீர் மொக்குள் 45நன்பக லந்தி நடையிடை விலங்கலிற்பெடைமயி லுருவிற் பெருந்தகு பாடினி  

காடுறை தெய்வத்திற்குக் கடன் கழித்தல்

பாடின பாணிக் கேற்ப நாடொறும்களிறு வழங்கதர்க் கானத் தல்கிஇலைஇல் மராஅத்த எவ்வந் தாங்கி 50வலைவலந் தன்ன மென்னிழன் மருங்கிற்காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றைப்  

பரிசு பெற்றோன் பெறாதோனை விளித்தல்

பீடுகெழு திருவிற் பெரும்பெயர் நோன்றாள் முரசுமுழங்கு தானை மூவருங் கூடிஅரசவை யிருந்த தோற்றம் போலப் 55பாடல் பற்றிய பயனுடை எழாஅற்கோடியர் தலைவ கொண்ட தறிநஅறியா மையி னெறிதிரிந் தொராஅதாற்றெதிர்ப் படுதலு நோற்றதன் பயனேபோற்றிக் கேண்மதி புகழ்மேம் படுந 60

பரிசு பெற்றோன் பாடின முறை

ஆடுபசி யுழந்தநின் இரும்பே ரொக்கலொடுநீடுபசி யொராஅல் வேண்டி னீடின்றெழுமதி வாழி ஏழின் கிழவபழுமர முள்ளிய பறவையின் யானுமவன்இழுமென் சும்மை யிடனுடை வரைப்பின் 65நசையுநர்த் தடையா நன்பெரு வாயில் இசையேன் புக்கென் இடும்பை தீரஎய்த்த மெய்யே னெய்யே னாகிப்பைத்த பாம்பின் துத்தி யேய்ப்பக்கைக்கச டிருந்தவென் கண்ணகன் தடாரி 70இருசீர்ப் பாணிக் கேற்ப விரிகதிர்வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல்ஓன்றியான் பெட்டா அளவையி னொன்றிய  

அரசன் விருந்தோம்பலின் சிறப்பு

கேளிர் போலக் கேள்கொளல் வேண்டிவேளாண் வாயில் வேட்பக் கூறிக் 75கண்ணிற் காண நண்ணுவழி இரீஇப்பருகு அன்ன அருகா நோக்கமொடுஉருகு பவைபோ லென்பு குளிர்கொளீஇஈரும் பேனும் இருந்திறை கூடிவேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த 80துன்னற் சிதாஅர் துவர நீக்கிநோக்குநுழை கல்லா நுண்மைய பூக்கனிந்துஅரவுரி யன்ன அறுவை நல்கிமழையென மருளும் மகிழ்செய் மாடத்துஇழையணி வனப்பி னின்னகை மகளிர் 85போக்கில் பொலங்கல நிறையப் பல்கால்வாக்குபு தரத்தர வருத்தம் வீடஆர வுண்டு பேரஞர் போக்கிச்செருக்கொடு நின்ற காலை  

இரவில் சுற்றத்துடன் கவலையின்றித் தூங்கி எழுதல்

மற்றவன்திருக்கிளர் கோயி லொருசிறைத் தங்கித் 90தவஞ்செய் மாக்கள் தம்முடம் பிடாஅததன்பய மெய்திய வளவை மானஆறுசெல் வருத்தம் அகல நீக்கிஅனந்தர் நடுக்க மல்ல தியாவதும்மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து 95

காலையில் அரசவைக்குச் செல்லுதல்

மாலை யன்னதோர் புன்மையுங் காலைக்கண்டோட் மருளும் வண்டுசூழ் நிலையும்கனவென மருண்டவென் னெஞ்சே மாப்ப வல்லஞர் பொத்திய மனம்மகிழ் சிறப்பக்கல்லா இளைஞர் சொல்லிக் காட்டக். 100

அரசனை அணுகுதல்

கதுமெனக் கரைந்து வம்மெனக் கூஉய்அதன்முறை கழிப்பிய பின்றைப் பதனறிந்து  

உணவு கொடுத்து ஓம்பிய முறை

துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின்பராஅரை வேவை பருகெனத் தண்டிக்காழிற் சுட்ட கோழூன் கொழூங்குறை 105ஊழின் ஊழின் வாய்வெய் தொற்றிஅவையவை முனிகுவ மெனினே சுவையவேறுபல் லுருவின் விரகுதந் திரீஇமண்ணமை முழவின் பண்ணமை சீறியாழ்ஒண்ணுதல் விறலியர் பாணி தூங்க 110மகிழ்ப்பதம் பன்னாட் கழிப்பி யொருநாள்அவிழ்ப்பதங் கொள்கென் றிரப்ப முகிழ்த்தகை முரவை போகிய முரியா அரிசிவிரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல்பரல்வறைக் கருனை காடியின் மிதப்ப. 115அயின்ற காலைப் பயின்றினி திருந்துகொல்லை உழுகொழு ஏய்ப்பப் பல்லேஎல்லையு மிரவும் ஊன்றின்று மழுங்கிஉயிர்ப்பிடம் பெறாஅ தூண்முனிந்  

ஊருக்குச் செல்லப் பரிசிலன் விரும்புதல

தொருநாள்செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய 120செல்வ சேறுமெந் தொல்பதிர் பெயர்ந்தெனமெல்லெனக் கிளந்தன மாக  

அரசன் பிரிய மனமின்றிப் பரிசு வழங்கி அனுப்புதல்

வல்லேஅகறி ரொவெம் ஆயம் விட்டெனசிரறிய வன்போற் செயிர்த்த நோக்கமொடுதுடியடி யன்ன தூங்குநடைக் குழவியொடு 125பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கெனத்தன்னறி யளவையின் தரத்தர யானும்என்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண்டுஇன்மை தீர வந்தனென்  

கரிகால் வளவனது சிறப்புக்கள்

வென்வேல்உருவப் பஃறேர் இளையோன் சிறுவன் 130முருகற் சீற்றத் துருகெழு குருசில்தாய்வயிற் றிருந்து தாய மெய்திஎய்யாத் தெவ்வர் ஏவல் கேட்பச்செய்யார் தேஎம் தெருமரல் கலிப்பப்பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி 135வெல்வெஞ் செல்வன் விசும்புபடர்ந் தாங்குப் பிறந்துதவழ் கற்றதற் றொட்டுச் சிறந்தநன் னாடுசெகிற் கொண்டு நாடொறும் வளர்ப்ப  

வெண்ணிப் போர் வெற்றி

ஆளி நன்மான் அணங்குடைக் குருளைமீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி 140முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத்தலைக்கோள் வேட்டங் களிறட் டாஅங்குஇரும்பனம் போந்தைத் தோடுங் கருஞ்சினைஅரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும்ஒங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த 145இருபெரு வேந்தரு மொருகளத் தவியவெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாட்கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்தாணிழல் மருங்கி னணுகுபு குறுகித்தொழுதுமுன் னிற்குவி ராயிற் 150

கரிகாலனது கொடையின் சிறப்பு

பழுதின்றீற்றா விருப்பிற் போற்றுபு நோக்கிநும்கையது கேளா அளவை ஒய்யெனப் பாசி வேரின் மாசொடு குறைந்த துன்னற் சிதாஅர் நீக்கித் தூயகொட்டைக் கரைய பட்டுடை நல்கிப் 155பெறலருங் கலத்திற் பெட்டாங் குண்கெனப் பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தரவைகல் வைகல் கைகவி பருகிஎரியகைந் தன்ன வேடில் தாமரைசுரியிரும் பித்தை பொலியச் சூட்டி. 160நூலின் வலவா நுணங்கரில் மாலை வாலொளி முத்தமொடு பாடினி யணியக்கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தேர்ஊட்டுளை துயல்வர வோரி நுடங்கப்பால்புரை புரவி நால்குடன் பூட்டிக் 165காலி னேழடிப் பின்சென்று கோலின்தாறுகளைந் தேறென் றேற்றி வீறுபெறுபேரியாழ் முறையுழிக் கழிப்பி நீர்வாய்த்தண்பணை தழீஇய தளரா விருக்கைநன்பல் லூர நாட்டொடு நன்பல். 170வெரூஉப்பறை நுவலும் பரூஉப்பெருந் தடக்கைவெருவரு செலவின் வெகுளி வேழம்தரவிடைத் தங்கலோ விலனே வரவிடைப்பெற்றவை பிறர்பிறர்க் கார்த்தித் தெற்றெனச்செலவுகடைக் கூட்டுதி ராயிற் பலபுலந்து 175நில்லா வுலகத்து நிலைமை தூக்கிச்செல்கென விடுக்குவ னல்ல  

சோழ நாட்டின் வளமும் வனப்பும்

நொல்லெனத்திரை பிறழிய விரும் பெளவத்துக்கரை சூழ்ந்த அகன் கிடக்கைமா மாவின் வயின் வயினெற். 180றாழ் தாழைத் தண் டண்டலைக்கூடு கெழீஇய குடி வயினாற்செஞ் சோற்ற பலி மாங்தியகருங் காக்கை கவவு முனையின்மனை நொச்சி நிழலாங் கண் 185ஈற்றி யாமைதன் பார்ப்பு ஓம்பவும்இளையோர் வண்ட லயரவும் முதியோர்அவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் சொலவும்முடக் காஞ்சிச் செம் மருதின்மடக் கண்ண மயில் ஆலப் 190பைம் பாகற் பழந் துணரியசெஞ் சுளைய கனி மாந்திஅறைக் கரும்பி னரி நெல்லின் இனக் களமர் இசை பெருகவற ளடும்பி னிவர் பகன்றைத் 195தளிர்ப் புன்கின் றாழ் காவின்நனை ஞாழலொடு மரங் குழீஇயஅவண் முனையி னகன்று மாறிஅவிழ் தளவி னகன் தோன்றிநகு முல்லை யுகுதேறு வீப் 200பொற் கொன்றை மணிக் காயாநற் புறவி னடை முனையிற்சுற வழங்கும் இரும் பெளவத்திற வருந்திய இன நாரைபூம் புன்னைச் சினைச் சேப்பின் 205ஒங்கு திரை யொலிவெரீ இத்தீம் பெண்ணை மடற் சேப்பவும்கோட் டெங்கின் குலை வாழைக்கொழுங் காந்தண் மலர் நாகத்துத்துடிக் குடிஞைக் குடிப் பாக்கத்துக். 210யாழ் வண்டின் கொளைக் கேற்பக்கலவம் விரித்த மட மஞ்ஞைநில வெக்கர்ப் பல பெயரத்  

நில மயக்கமும் நல் ஆட்சியும்

தேனெய் யொடு கிழங்கு மாறியோர்மீனெய் யொடு நறவு மறுகவும் 215தீங் கரும்போ டவல் வகுத்தோர் மான் குறையொடு மது மறுகவும் குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்நறும்பூங் கண்ணி குறவர் சூடக்கானவர் மருதம் பாட அகவர் 220நீனிற முல்லைப் பஃறிணை நுவலக்கானக் கோழி கதிர் குத்த மனைக் கோழி தினைக் கவர வரை மந்தி கழி மூழ்ககழி நாரை வரை யிறுப்பத் 225தண் வைப்பினா னாடு குழீஇமண் மருங்கினான் மறு வின்றிஒரு குடையா னென்று கூறப்பெரி தாண்ட பெருங் கேண்மைஅறனொடு புணர்ந்த திறனறி செங்கோல் 230அன்னோன் வாழி வென்வேற் குருசில்  

காவிரியின் வெள்ளச் சிறப்பு

மன்னர் நடுங்கத் தோன்றிப் பன்மாண்எல்லை தருநன் பல்கதிர் பரப்பிக்குல்லை கரியவுங் கோடெரி நைப்பவும்அருவி மாமலை நிழத்தவு மற்றக் 235கருவி வானங் கடற்கோள் மறப்பவும்பெருவற னாகிய பண்பில் காலையும்நறையும் நரந்தமு மகிலு மாரமும்துறைதுறை தோறும் பொறையுயிர்த் தொழுகிநுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பகம் புகுதொறும். 240புனலாடு மகளிர் கதுமெனக் குடையக்  

காவிரி நாட்டு வயல் வளம்

கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து சூடுகோ டாகப் பிறக்கி நாடொறும் குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பைகடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும் 245சாலி நெல்லின் சிறைகொள் வேலிஆயிரம் விளையுட் டாகக்காவிரி புரக்கு நாடுகிழ வோனே  

பொருநராற்றுப்படை முற்றிற்று.

தனிப் பாடல்கள்

ஏரியும், ஏற்றத் தினானும், பிறர் நாட்டு வாரி சுரக்கும் வளன் எல்லாம் - தேரின், அரிகாலின் கீழ் கூஉம் அந் நெல்லே சாலும் கரிகாலன் காவிரி சூழ் நாடு. 1
அரிமா சுமந்த அமளி மேலானைத் திருமாவளவன் எனத் தேறேன்; - திரு மார்பின் மான மால் என்றே தொழுதேன்; தொழுத கைப் போனவா பெய்த வளை! 2
முச் சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால் இச் சக்கரமே அளந்ததால்-செய்ச் செய் அரிகால்மேல் தேன் தொடுக்கும் ஆய் புனல் நீர்நாடன் கரிகாலன் கால் நெருப்பு உற்று. 3

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.