|
|||||
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்கியது !!! |
|||||
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணுஉலையில் மின் உற்பத்தி துவங்கியது. இன்று அதிகாலை 2.45 மணிக்கு துவங்கியதாக அணுமின் வளாக அதிகாரி தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா , ரஷ்யா கூட்டு முயற்சியுடன் ரூ.13,500 கோடி முதலீட்டில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அணு மின் நிலைய கட்டுமான பணி முடிந்து, மின் உற்பத்தி துவங்கும் நேரத்தில் இதற்கு எதிராக இடிந்தகரை உள்ளிட்ட கடலோர கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் மின் உற்பத்தி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கியதை அடுத்து, மின் உற்பத்திக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னதாக, பாதுகாப்பு தொடர்பாக மத்திய, மாநில நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு கூடங்குளத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் பின்னர் கடந்த ஆண்டு மார்ச் 19ம் தேதி மீண்டும் கூடங்குளத்தில் பணிகள் தொடங்கின. இதில், முதல் அணுஉலையில், "கிரிட்டிக்காலிடி' எனப்படும், மின்உற்பத்திக்கான ஆரம்ப கட்ட பணிகள், ஜூலை 13ல் துவங்கின. அந்த அணுஉலையில் ஆகஸ்ட் இறுதிக்குள் மின்உற்பத்தி துவங்கப்படுமென அணுசக்திதுறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அறிவித்தபடி துவங்கப்படவில்லை. இந்நிலையில் மின் உற்பத்தி துவங்குவதற்கான பணிகள், இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் இன்று அதிகாலை 2.45 மணிக்கு மின் உற்பத்தி துவங்கியது.முதலில் 75 மெகாவாட்டாக உற்பத்தி செய்யப்பட்டு பின்னர் படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்படும் என அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு அருகில் உள்ள அபிஷேகப்பட்டி பகுதியில் உள்ள மத்திய மின்தொகுப்புடன் இணைத்து மின்சாரம் அனுப்பும் பணியும் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். |
|||||
by Swathi on 21 Oct 2013 0 Comments | |||||
Tags: கூடங்குளம் மின் உற்பத்தி போராட்டங்கள் அணு உலை கூடங்குளம் அணு உலை Koodankulam Nuclear Plant Nuclear Plant | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|