LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

பயங்கரவாதிகளைப் புகழும் பாகிஸ்தானுடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும்? சுஷ்மா சிவராஜ் கேள்வி

பயங்கரவாதிகளை புகழும் பாகிஸ்தானுடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும்? என்று ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் கேள்வி எழுப்பினார்.

ஐ.நா. பொதுச்சபையின் 73-வது கூட்டம், நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  சுஷ்மா சுவராஜ்  பேசியதாவது:-

பாகிஸ்தான் உடனான பல சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சிறந்த வழி பேச்சுவார்த்தைதான் என்பதை இந்தியா  நம்புகிறது. அதன்படி, பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த எத்தனையோ தடவை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அந்த பேச்சுவார்த்தை திடீரென நின்றுவிடுகிறது என்றால், அதற்கு பாகிஸ்தானின் நடத்தைதான் காரணம். ஆனால்,  அமைதி முயற்சியை இந்தியா சீர்குலைப்பதாக பாகிஸ்தான் பொய் சொல்லி வருகிறது.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றவுடன்,  பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்துவது என்று யோசனை கூறினார். அதை இந்தியாவும் ஏற்றுக்கொண்டது. ஏற்றுக்கொண்ட சில மணி நேரத்திலேயே , 3 இந்திய வீரர்களை பாகிஸ்தான்  பயங்கர வாதிகள் கொன்றனர். இது, பேச்சுவார்த்தை நடத்துவதற்கான விருப்பத்தையா காட்டுகிறது?

இதுபோல், நான் 2016-ம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்தேன். அப்போது  பதான்கோட் விமான தளம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இத்தகைய ரத்த ஆறுக்கிடையே எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும்? போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொலை செய்யும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் புகழுகிறது. அப்பாவி மக்களின் ரத்தத்தை பார்க்க மறுக்கிறது. அந்த நாட்டுடன் எப்படி பேச்சு நடத்த முடியும்? தனது குற்றத்தை மறைக்க இந்தியா மீது பழிபோடுவது பாகிஸ்தானின் வழக்கமாகி விட்டது.

இவ்வாறு சுஷ்மா சுவராஜ் பேசினார்.

by Mani Bharathi   on 30 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.